November 28, 2008

செல்லக்குட்டிக் கண்ணு அம்மாடி பாட்டு :) அது எங்க பாட்டு :)

செல்லக்குட்டிக் கண்ணு அம்மாடி....
கண்ணுக்குட்டிப் பட்டு அம்மாடி....
பட்டுக்குட்டி சிட்டு அம்மாடி.....
சிட்டுக்குட்டி தங்க அம்மாடி...
தங்கக்குட்டி வைர அம்மாடி.....
வைரக்குட்டி பவள அம்மாடி....
பவளக்குட்டி கண்ணு அம்மாடி....
இப்படியாக நீளும் இப்பாடல் பொழிலனுக்கு மிகவும் பிடித்தப் பாடல்....
இப்பாடலின் ஆசிரியர்..... வேற யாரு நாமதான்.... :)
என் வாய்க்கு வந்த கொஞ்சும் வார்த்தைகள் அத்தணையும் போட்டு சிரிச்சிட்டே பாடினா நான் பேசினாலே வாய் விட்டு சிரிக்கும் பொழில் குட்டி இதுக்கு சத்தம் பொட்டு ஒரே மகிழ்ச்சியா சிரிப்பாரு....:)
அதைவிட கண்கொள்ளாக் காட்சி வேறு என்ன? அதனால் நான் அடிக்கடி இதை பாடிட்டே இருப்பேன் :)

9 comments:

சந்தனமுல்லை said...

:-))..ம்ம்..படிக்கவே நல்லாருக்கு!
பாடினா ? பொழிலனுக்கு கொண்டாட்டம்தான்!

ஆகாய நதி said...

நன்றி சந்தனமுல்லை மற்றும் கார்த்திக் :)

ஆகாய நதி said...

//
பொழிலனுக்கு கொண்டாட்டம்தான்!
:)
//

ஆமாம்... நான் பாடும்போதே இப்படி அனுபவித்து மகிழ்ச்சியுடன் கேட்பான் என்றால் ஒரு அழகிய தாலாட்டு பாடலை நல்ல பாடகர் பாடினால் :)

அமிர்தவர்ஷினி அம்மா said...

ம், வ்ரைட்டர் ஆன நீங்க பொயட் ஆனதுல ஆச்சர்யமில்ல,

ஆனா கம்போசரும் ஆகி பொழிலனை சிரிக்க வச்சிருக்கீங்க.

ம் இது மாதிரி ஜிங்கில்ஸ் என் வாய்வசமும் அடிக்கடி வருவதுண்டு, அமித்துவை கொஞ்சும்போது.

எங்கக்கா பொண்ணு இது மாதிரி ஒரு குடும்பப்பாட்டு வெச்சிருக்கா,

ஜீ ஜீ நாய்க்குட்டி
ஓடி ஒடி வா வா நாய்க்குட்டி
என்று ஏகஸ்தாயியில் ஆரம்பிக்கும்

ஆகாய நதி said...

/****
ம், வ்ரைட்டர் ஆன நீங்க பொயட் ஆனதுல ஆச்சர்யமில்ல,

ஆனா கம்போசரும் ஆகி பொழிலனை சிரிக்க வச்சிருக்கீங்க.
*****/
நன்றி...பாவம் பொழிலன் :)

/****
தொடக்கமே அருமை... முழு பாடலையும் பதிந்து விடுங்களேன் :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சரிங்க அந்த இசையமைப்பை எப்படி தெரிந்துகொள்வது.. அப்படியே ராகம் போட்டு மெட்டையும் பகிர்ந்துக்குங்க.. :)

ச.பிரேம்குமார் said...

//சரிங்க அந்த இசையமைப்பை எப்படி தெரிந்துகொள்வது.. அப்படியே ராகம் போட்டு மெட்டையும் பகிர்ந்துக்குங்க.. :)//

என்ன கொடும பொழிலா இது?? :)

Vidhya Chandrasekaran said...

சூப்பர் பாட்டு. நான்கூட இதே மாதிரி வரிகள்ல சஞ்சய்க்கு பாடிருக்கேன்:)

அமுதா said...

nice... பொழிலன் உங்க பாட்டுல ஜாலியா இருக்கார்னு சொல்லுங்க