tag:blogger.com,1999:blog-77928759040457705102024-03-14T01:39:17.982-07:00ஆகாயநதிஆகாய நதிhttp://www.blogger.com/profile/12736746082102487610noreply@blogger.comBlogger110125tag:blogger.com,1999:blog-7792875904045770510.post-41264385488876614932013-07-02T23:27:00.001-07:002013-07-02T23:27:20.791-07:00ஐந்தாம் அகவையில் பொழிலன்!!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<strong></strong><br />
<strong>மன்னிக்கவும் மக்களே.... காலம் கடந்து ஒரு பதிவு! </strong><br />
<strong></strong><br />
<strong>குட்டிமாவுக்கு வரும் ஜூலை 16ம் நாள் பிறந்தநாள்! இந்த ஐந்து வருடங்களில் அவனுடைய வளர்ச்சி சற்று நிதானித்துப் பார்த்தால் பெருமையாகவும், ஆச்சரியமாகவும் இருக்கிறது! </strong><br />
<strong></strong><br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh4rneyTk197m3wOzFYA4_0QuPUdTYMI6PnLTx-1J-O3hzncrObBwPLslJVvCiI7FMCQc0oeOGoC7svwpnVyRmg1hCse_BOr2FwMaPvBuJgIeKqQPcsFPVlcJemB-sHbjaNv3aE6ohgxU4/s1600/DSC00044.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh4rneyTk197m3wOzFYA4_0QuPUdTYMI6PnLTx-1J-O3hzncrObBwPLslJVvCiI7FMCQc0oeOGoC7svwpnVyRmg1hCse_BOr2FwMaPvBuJgIeKqQPcsFPVlcJemB-sHbjaNv3aE6ohgxU4/s320/DSC00044.JPG" width="320" /></a></div>
<strong></strong><br />
<strong>எத்தனை எத்தனை கெள்விகள், எத்தனை விதமான கற்பனைகள், உருவகங்கள், திறமைகள், பழக்கவழக்கங்க்கள்.. அம்மம்மா!!</strong><br />
<br />
<strong>ஆனால் இந்த கவனம் ஈர்க்க பொது இடங்களில் அவன் செய்யும் நாடகங்கள் " முடியலடா சாமி" !</strong><br />
<strong></strong><br />
<strong>பெண் பிள்ளைகள் தான் இன்றைக்கு அம்மாவுக்கு உதவுவார்கள் என்றில்லை... பொழிலன் எனக்கு சமையல் வேலைக்கு அவன் பிஞ்சுக் கரங்களால் முடிந்தவரை உதவுவான்... அதுவும் நான் கேட்காமலே...</strong><br />
<strong></strong><br />
<strong>அழகாக படம் வரையும் திறன் உள்ள அவனுக்கு நானே இப்பொழுது டிராயிங் டீச்சர்!!! ( அவ்வ்வ்வ் அப்டின்னு என்னங்க சத்தம்?)</strong><br />
<strong></strong><br />
<strong>ஆனா அவன் பாட்டும் கத்துக்க விரும்புறான்!! அதுக்காக நானே பாட்டு டீச்சர்லாம் ஆக முடியாது... எனக்கு கொஞ்சம் சமுதாய அக்கறை உண்டு... அதுனால இப்போதைக்கு நடனம் மற்றும் ஸ்கேடிங் மட்டும், பாட்டுலாம் விஜயதசமிக்கு பார்த்துக்கலாம்னு இருக்கோம்! <br /><br />வாயாடும் பொழிலனின் கேள்விகள் சில ....</strong><br />
<strong></strong><br />
<strong>அம்மா நீ சாமி ஒண்ணுதான்னு சொல்ற பின்ன ஏன் விரிய சாமி படங்கள் வெச்சிருக்க... அப்போ அந்த ஒரு சாமிக்கு அம்மா சாமி அப்பா சாமிலாம் வேண்டாமா?</strong><br />
<strong></strong><br />
<strong>ஸ்கூல்ல மேம் எதுக்கு தமிழ் இங்கிலீஷ் கலந்து பேசுறாங்க? அப்போ மேம்க்கு இங்கலீஷ் தெரியாதா? </strong><br />
<strong></strong><br />
<strong>அம்மா அந்த அத்தை டம்மிக்குள்ள பே</strong><strong>பி இருக்குனு சொன்னியீ ஆனா அவங்க டம்மி ஏன் குட்டியா இருக்கு? </strong><br />
<strong> </strong><br />
<strong>யோகா கிளாஸ்ல தொப்பை குறைய யோகா செய்ய வந்தவங்கள பார்த்து அம்மா இந்த அத்தைக்கும் பேபி இருக்கா டம்மிக்குள்ள அவங்க டம்மி பெருசா இருக்கே?</strong><br />
<strong></strong><br />
<strong>அம்மா ஈ கொசுலாம் எப்படி குளிக்கும்? அதற்கு நான் அவையெல்லாம் குளிக்காது அதுனால தான் கிருமிகளைப் பரப்புது!<br />உடனே அவன் அப்போ கிருமிஎல்லாம் குளிக்காதா? </strong><br />
<strong></strong><br />
<strong>அவ்வ்வ்வ்...... </strong></div>
ஆகாய நதிhttp://www.blogger.com/profile/12736746082102487610noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-7792875904045770510.post-53117309620027445292011-12-20T12:11:00.000-08:002011-12-20T12:11:39.697-08:00அம்மா உன் வயிற்றுக்குள்ள potty , flush tank கிடையாதா?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">பொழிலனுக்கும் எனக்கும் நடந்த சில உரையாடல்கள்:<br />
<br />
<br />
பொழில்: <br />
அம்மா நான் குழந்தையா இருந்தப்போ எப்படிமா பெரியவனா ஆகினேன்?<br />
<br />
நான்: <br />
நீ சமத்தா நல்லா சாப்பிட்டியா... அதான் பெரிய பையன் ஆகிட்ட!!<br />
<br />
பொழில்: (பெருமையுடன்) <br />
ஆமாமா, நான் நல்லா சாப்பிட்டதும் நம்ம தூங்கிட்டோமா அப்புறமா நீ எழுந்து பார்த்தா நான் பெரிய பையன் ஆகிட்டேன் ஒரே மேஜிக் ஆகிடுச்சு!!<br />
<br />
நான்: <br />
ஆமாம் குட்டிமா! நீ இன்னும் நல்லா சாப்பிட்டீனா இன்னும் பெரிய பையன் ஆகி அப்பா மாதிரி பெரியவங்களா ஆகிடலாம்!<br />
<br />
பொழில் : அம்மா நான் உன் வயிற்றில இருந்தப்போ எப்படி "பூப்" போனேன்?<br />
<br />
நான்: (அவ்வ்வ் எப்படி பதில் சொல்ல அவன் அப்பாவைப் பார்த்துக்கொண்டே) <br />
<br />
நீ அப்படியே என் வயிற்றுக்குள்ளேயே போய்ட்ட.... <br />
<br />
பொழில்: <br />
யக்.. அம்மா உன் வயிற்றுக்குள்ள potty , flush tank கிடையாதா? <br />
<br />
நான்: இல்லமா அதெல்லாம் அங்கே இருக்காது...<br />
<br />
பொழில்: இல்ல இருக்கனும்.... ம்ம்ம்ம்...<br />
<br />
நான்: இடம் பத்தாது தங்கம்...<br />
<br />
பொழில்: இல்ல வேணும்... <br />
<br />
நான்: <br />
சரி அடுத்த பாப்பா அம்மாக்கு வரும் போது நீ potty வாங்கிட்டு வந்து அம்மா வயிற்றுக்குள்ள வெச்சிடு....<br />
<br />
பொழில்: ஒகே மா... (பெருமையோடு)<br />
<br />
பொழில்: அம்மா நான் இப்போ big man மாதிரி பேசிட்டேன்!!! நான் வளர்ந்து பெரிய பையன் ஆகி பெரிய man ஆகிட்டேன்... அதான் அப்படி பேசிட்டேன்!!! ( மிகுந்த பெருமையுடன்)</div>ஆகாய நதிhttp://www.blogger.com/profile/12736746082102487610noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-7792875904045770510.post-8133257886519984892011-08-10T12:08:00.000-07:002011-08-10T12:08:06.711-07:00பொழிலனின் பிஞ்சுக் கைவண்ணம் - 2<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div class="separator" style="clear: both; text-align: center;"><iframe allowfullscreen='allowfullscreen' webkitallowfullscreen='webkitallowfullscreen' mozallowfullscreen='mozallowfullscreen' width='320' height='266' src='https://www.youtube.com/embed/xkTRlnDVUCE?feature=player_embedded' frameborder='0'></iframe></div></div>ஆகாய நதிhttp://www.blogger.com/profile/12736746082102487610noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7792875904045770510.post-52123380264137246262011-08-03T21:12:00.000-07:002011-08-03T21:12:30.350-07:00பொழிலனின் பிஞ்சுக் கைவண்ணம் - 1<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div closure_uid_90jxs8="143">ஓவியம் வரைவதிலும், ஓவியங்களுக்கு வர்ணம் தீட்டுவதிலும் ஆர்வம் மிகுந்த பொழில்குட்டி சிறிய பொருட்களை வரையத் துவங்கினான்.... இப்படியாக பொழிலன் முதன் முதலாக வரைந்த முகம் :)</div><br />
<br />
<div closure_uid_90jxs8="153">இது எல்மோ என்னும் கார்ட்டூன் முகம்....</div><div closure_uid_90jxs8="153"><br />
</div><div closure_uid_90jxs8="153"><br />
</div><div closure_uid_90jxs8="153"><br />
</div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhjGklo_7HjNa6QSUYoF8rIRVt1GVgcNWeZcaqXfWajujnDlFY-bxuYPjkcHWAmKn_SKWwYy_G-EYs2RNN3WkMbaBfMz2ALomAm7VIesQz8nkmGe2_mhU_k2v_l1mB1VNte9ctszb-2ZsE/s1600/DSCN1029.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhjGklo_7HjNa6QSUYoF8rIRVt1GVgcNWeZcaqXfWajujnDlFY-bxuYPjkcHWAmKn_SKWwYy_G-EYs2RNN3WkMbaBfMz2ALomAm7VIesQz8nkmGe2_mhU_k2v_l1mB1VNte9ctszb-2ZsE/s320/DSCN1029.JPG" t$="true" width="320" /></a></div><br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj1m7MptFhKNlGAaS9sMBdRbQnAhG1ASHYwH7ysD1C3eh7TGa4QCvw041ov8nFc4DNVICjbnpmz1fC1Es_tCIR-JK2uYu3B_fQSU8enTogVsJar_79RzjNjTClMvVwyYQ7Q88VNyjTdClE/s1600/DSCN1030.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj1m7MptFhKNlGAaS9sMBdRbQnAhG1ASHYwH7ysD1C3eh7TGa4QCvw041ov8nFc4DNVICjbnpmz1fC1Es_tCIR-JK2uYu3B_fQSU8enTogVsJar_79RzjNjTClMvVwyYQ7Q88VNyjTdClE/s320/DSCN1030.JPG" t$="true" width="320" /></a></div><br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
</div>ஆகாய நதிhttp://www.blogger.com/profile/12736746082102487610noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-7792875904045770510.post-83505132924262983632011-08-03T15:45:00.000-07:002011-08-03T15:47:26.173-07:00பொழிலனின் கதை நேரம்!!(ஒளி/ஒலி வடிவில்)<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div class="separator" style="clear: both; text-align: center;"><iframe allowfullscreen='allowfullscreen' webkitallowfullscreen='webkitallowfullscreen' mozallowfullscreen='mozallowfullscreen' width='320' height='266' src='https://www.youtube.com/embed/xHe0lawjIO0?feature=player_embedded' frameborder='0'></iframe></div></div>ஆகாய நதிhttp://www.blogger.com/profile/12736746082102487610noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7792875904045770510.post-68678373359859430862011-08-03T15:25:00.000-07:002011-08-03T15:27:05.240-07:00அமெரிக்காவில் ஆரம்பக்கல்வி!!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div closure_uid_tz7fq0="167">பொழிலனை இங்கே ஒரு நல்ல பள்ளியில் சேர்த்திருக்கிறோம்... நான் அந்தப் பள்ளிக்குச் சென்று அவனுடைய வகுப்பறைக்கும் சென்று நன்கு பார்த்துவிட்டுதான் அந்தப் பள்ளியைத் தேர்ந்தெடுத்தேன்... எனக்கு இங்கே மிகவும் பிடித்த ஒன்று குழந்தைகளை எதற்காகவும் கட்டாயப்படுத்துவதில்லை... அவர்கள் போக்கிலேயே சென்று அவர்களை நம் வழிக்குக் கொண்டுவருவதைக் கடைப்பிடிக்கின்றனர்... அதிலும் பள்ளிகளிலும் அதே வழிமுறைதான்!</div><br />
குழந்தைகளின் கருத்துக்களுக்குப் பெரிதும் மதிப்பளிக்கப்படுகிறது.... இது அவர்களை இன்னும் மேம்படுத்தவும், தன்னம்பிக்கை உருவாவதற்கும் பெரிதும் உறுதுணையாக இருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது!!<br />
<div closure_uid_12no3g="135"><br />
</div><div closure_uid_tz7fq0="160">அவனுக்குப் பள்ளி துவங்கியதும் முதல் ஒரு வாரம் முதல் இரு வாரங்கள் வரை நானும் அவனுடன் சென்று அவன் அருகில் இருக்கலாம் அவன் மனம் புதிய இடமாற்றத்தை ஏற்றுக்கொள்ளும் வரை.... ஆனால் இரண்டு மூன்று நாட்களிலேயே குழந்தைகள் தாயைப் பிரிந்து புதிய தோழர், தோழிகளிடம் பழகிவிடுகின்றனர்... பொழிலனும் அவ்வாறு மாறிவிடுவான் என்று எண்ணுகிறேன்....</div><div closure_uid_12no3g="136"><br />
</div>ஒரு வாரத்திற்கு ஒரே ஒரு புதிய குழந்தை பள்ளிக்கு முதன் முதல் வகுப்பிற்கு என்று அழைக்கப்படுகிறது. இது நல்ல முறையாகத் தோன்றுகிறது.... அந்த ஒரு வாரம் முழுவதும் அந்த குழந்தையை நன்கு கண்காணித்து, புரிதலுடன் அந்த குழந்தையை ஆசிரியர் ஏற்றுக்கொள்ளவும் குழந்தையும் ஆசிரியருடன் எளிதில் நெருங்கிப் பழகவும் இது உதவும்.... நம் ஊரில் எப்படி என்று தெரியவில்லை.... நம் ஊரிலும் இதே வழக்கம் இருந்தால் மிக்க மகிழ்ச்சிதான்.... இல்லையென்றாலும் இப்படி சில மாற்றங்கள் வந்தால் வரவேற்போம்... <br />
<br />
<div closure_uid_12no3g="137">இங்கே தமிழ் மொழி பயிலவும் குழந்தைகளுக்கான ஆரம்ப நிலை தமிழ் வகுப்புகள் தனி "தமிழ் பள்ளியாக" இருக்கின்றன...</div><br />
ஆனால் பொழிலுக்கு தமிழ் கற்பிக்க தற்சமயம் நானே போதும் என்று எண்ணுகிறேன்... அவன் அழகாக தமிழிலும் பேசுகிறான்... எழுதவும் முயற்ச்சிக்கிறான் :) <br />
<br />
<div closure_uid_tz7fq0="147">மொத்தத்தில் தேசம் விட்டு தேசம் வந்தாலும் தமிழ் என்றும் நம்மிடம் வாழ்கிறது...</div><div closure_uid_tz7fq0="147"><div closure_uid_12no3g="138"><br />
</div></div><div closure_uid_tz7fq0="147"></div></div>ஆகாய நதிhttp://www.blogger.com/profile/12736746082102487610noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-7792875904045770510.post-12880449644650371592011-08-03T14:44:00.000-07:002011-08-03T14:44:07.276-07:00மார்கண்டேயனா குழந்தைகளின் நற்குணத்துக்கு எமனா?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div closure_uid_tavb98="142">தற்போது புதிதாக வெளிவந்துள்ள திரைப்படம் மார்கண்டேயனில் முதல் காட்சி,</div><br />
<br />
" தன்னை சோறுபோட்டு அழைத்துவந்தவரின் மன உளைச்சலுக்குக் காரணமான ஒருவனை அந்த பத்து வயதோ அதை ஒட்டியோ உள்ள சிறுவன் துரத்தி துரத்தி அரிவாளால் வெட்டுகிறான்... அதே வயதை ஒத்த சிறுவர்கள் பலரும் இப்படி அரிவாள், கத்தி என்று பயங்கர ஆயுதங்களுடன் அவனை துரத்துவார்கள், ஆனால் இவன் வெட்டி வீழ்த்திவிடுவான்" <br />
<br />
<br />
இந்தக் காட்சி தேவையா? இதை எப்படி திரைப்பட தணிக்கைக் குழு அனுமதித்தது.... இதைக் காணும் சிறுவர்களின் நிலை என்ன? அவர்கள் மனதில் நஞ்சினை விதைப்பது போலாகாதா? இத்திரைப்படத்தினை தடை செய்தே ஆக வேண்டும்... அல்லது இம்மாதிரியான காட்சியையாவது நீக்க வேண்டும்....<br />
<br />
<br />
இதனைப் பற்றி உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்! </div>ஆகாய நதிhttp://www.blogger.com/profile/12736746082102487610noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7792875904045770510.post-80488038045661980912011-03-24T13:45:00.000-07:002011-03-24T13:45:09.455-07:00மழலைச் செல்வம் பொழிலன்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">மழலைத் தமிழ் பேசிக்கொண்டிருந்த பொழில்குட்டி தற்போது மழலையில் ஆங்கிலம் பேசத் துவங்கியுள்ளான்.... :))) தற்போது எங்களுக்கு அவனுடைய மழலைத் தமிழும் ஆங்கிலமும் கேட்பதற்கு இனிமையாகவும் சில சமயம் சில சொற்கள் சிரிப்பை வரவழைப்பதாகவும் இருக்கின்றது.... <br />
<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><iframe allowfullscreen='allowfullscreen' webkitallowfullscreen='webkitallowfullscreen' mozallowfullscreen='mozallowfullscreen' width='320' height='266' src='https://www.youtube.com/embed/lcHvNidA81Y?feature=player_embedded' frameborder='0'></iframe></div><br />
<br />
<br />
அவனுடை மழலைத் தமிழ் தற்போது தெளிவாகியுள்ளது... அதனால் நாங்கள் அவனிடம் ஆங்கிலத்தில் பேசத் தொடங்கியிருக்கிறோம்... ஏனெனில் அவனுக்குப் பள்ளி துவங்குவதற்கு முன்பாக அவன் சரியான ஆங்கிலத்தில் ஓரளவிற்குப் பேச வேண்டியுள்ளது.... அவனது தேவைகளை அவன் ஆசிரியையிடம் தெரிவிக்கவாவது.... பின் பள்ளிக்குச் செல்லத் துவங்கிவிட்டால் அமெரிக்க வழக்கில் ஆங்கிலம் பேசத் தொடங்கிவிடுவான்.... தற்போதே தொலைக்காட்சியின் பயனாக சில வார்த்தைகள் இவர்களின் மொழி பேசும் வழக்கிலேயே வருகின்றது....அவனுக்கு இந்த ஊரின் நல்ல பழக்கவழக்கங்களையும் கற்றுக்கொடுக்கிறோம்...<br />
<br />
<br />
இப்போதெல்லாம் அவன் அவனுடைய அப்பாவோடு தொடர்ந்து இருப்பதால் இருவரும் நன்கு நெருங்கிவிட்டார்கள்....நாள்தோறும் மாலை அவன் அப்பா வீடு திரும்பும் போதே அன்றைய நிகழ்வுகளின் பட்டியலோடு தயாராக இருப்பான்... நானும் அவனும் பகலில் எங்கெல்லாம் சென்றோம்... யாரை சந்தித்தோம்... என்ன விளையாடினோம் என பட்டியல் ஒரு நிகழ்வினையும் தவரவிடாது இருக்கும்.....<br />
<br />
<br />
<br />
வெளியில் சென்றால் அம்மம்மா!!! அவன் கேள்விகளுக்கு பதில் சொல்வதற்கு எனக்கு இந்த 24மணி நேரம் போதவே போதாது....வீட்டில் இருந்தாலும் சரி கேள்விகளுக்கு மட்டும் நேரம் காலம் என்பது கிடையாது... கேள்விக்கு பதில் கூறும் போது அதிலிருந்து இன்னொரு கேள்வி பிறக்கும்,.... நானே இன்றும் அப்படித்தான்.... பின் நான் பெற்ற குழந்தை எப்படி இருப்பான்... <br />
<br />
மக்கள் மெய்தீண்டல் உடற்கின்பம் மற்றவர்<br />
<br />
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு<br />
<br />
இந்த குறள் தான் என் நினைவிற்கு வருகிறது :)))<br />
<br />
<br />
<br />
<br />
அவனுக்கு இங்கு உள்ள உணவுப் பழக்கவழக்கம் பிடிக்கவில்லை..... நம் தென்னிந்திய உணவுகளான இட்லி,பருப்பு, இரசம், கீரை, அசைவ உணவு தான் பிடித்திருக்கிறது..... மற்றபடி ஆசியநாடுகளின் அசைவ உணவுகளை விரும்பி சாப்பிடுகிறான்.... ஆனால் இவன் பள்ளிக்குச் சென்றால் அங்கே அமெரிக்க சிற்றுண்டி வகைகள் தான் குழன்தைகளுக்குத் தருகிறார்கள்.... நாம் கொடுத்தனுப்பக் கூடாது.... அதற்கு தான் இவனை எப்படிப் பழக்குவது என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்.... <br />
<br />
</div>ஆகாய நதிhttp://www.blogger.com/profile/12736746082102487610noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-7792875904045770510.post-15304192045397112042011-03-24T11:17:00.000-07:002011-03-24T11:17:53.983-07:00தாமதமான வாழ்த்தும் மன்னிப்பும்!!!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">மகளிர் தினத்தினை ஒட்டி எழுத வேண்டிய பதிவு மிக மிக தாமதமாக எழுதுவதற்கு முதலில் மன்னித்துவிடுங்கள்....<br />
<br />
மகளிர் தினத்திற்கு எப்படி வாழ்த்து சொல்வது என்று தெரியவில்லை.... எதற்காக வாழ்த்த வேண்டும் என்றும் தெரியவில்லை.... பெண் குழந்தையாகப் பிறந்து பெண்ணா என்ற கேள்வி இன்றி இன்று இந்த அளவிற்கு வளர்ந்திருப்பதற்கு வாழ்த்துவதா? அதற்கு பெற்றவர்களுக்கு நன்றி உரித்தாகட்டும்....<br />
<br />
<br />
பெண்களின் பிரச்சனைகள அலசவும், ஆராயவும், அதில் சிக்கிக்கொள்ளவும் பின் வெளிவரவும் திறமை இருப்பதாலா? அதற்கு கடவுளுக்கு நன்றி!!!<br />
<br />
<br />
இதைப் பற்றி பொதுவில் பேசும் உரிமை இருப்பதாலா? அதற்கு இந்திய பேச்சுரிமை, எழுத்துரிமை சட்டத்திற்கு நன்றி உரித்தாகும்.... அதையும் கடந்து பெண்கள் வாய் திறக்க முடியாதவாறு இன்றும் அடக்கி ஆளும் ஒரு சில ஆண்கள் இருக்கும் இந்த சமுதாயத்தில் எனக்கு கிடைத்திருக்கும் தனிப்பட்ட உரிமைக்கு என் கணவருக்கு நன்றி உரித்தாகட்டும்....<br />
<br />
<br />
அம்மாடி... போதும்.... பின்னே வேறு என்ன சொல்வது.... இன்றும் ஒரு புறம் வாய் திறவாத பெண்கள்... ஒரு புறம் வாய் திறக்க இயலாத பெண்கள்.... ஒரு புறம் திறந்த வாய் மூடாத பெண்கள்!!!!<br />
<br />
(சரி இதில் நான் எந்த வகை? ஏய் மனசாட்சி வாயை மூடு ) <br />
<br />
<br />
பெண்களின் அசுர வேக வளர்ச்சியைப் பற்றி நான் எழுதிதான் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றில்லை.... இது அனைவருக்கும் தெரிந்ததே.... அதனால் எப்போது முன்னேறிக் கொண்டே இருக்கும் நமக்கும் என்றும் என்றென்றும் எனது வாழ்த்துக்கள்!!!! <br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj8WG4jDPXYE1Ul77A1GsfJsIj28lbiC5RwDnFR-x-yie_J7HDeAJ50bSYw90l8N_MOAQuvxtA88K0fUyCGNwSdEeC8H5PmQ9IM7IUu8_VG9lSbRaH8bP9R0flvwmEA1VLyeHyzgqQi0jk/s1600/womens-day.gif" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="194" r6="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj8WG4jDPXYE1Ul77A1GsfJsIj28lbiC5RwDnFR-x-yie_J7HDeAJ50bSYw90l8N_MOAQuvxtA88K0fUyCGNwSdEeC8H5PmQ9IM7IUu8_VG9lSbRaH8bP9R0flvwmEA1VLyeHyzgqQi0jk/s320/womens-day.gif" width="320" /></a></div><br />
<br />
<br />
பின்குறிப்பு:<br />
<br />
அமெரிக்கா வந்து மூன்று மாதங்களுக்குப் பிறகு வீடு தேடி குடி வந்து வீட்டினை ஒழுங்கு படுத்தி அப்பப்பா... பல வேலைகளுக்கு நடுவில் அனானி ஒருவரின் வேண்டுகோளுக்கிணங்க இந்தப் பதிவு ஒரு அவசர பதிவு... அதனாலேயே சரியான நேரத்தில் வாழ்த்த இயலாமல் போனது அதற்கு மன்னிக்கவும்.... எப்போதுமே நமக்கு நம் வாழ்த்துக்கள்..... <br />
<br />
பதிவும் அங்கு தொட்டு இங்கு தொட்டு ஒருவாறாக எழுதியிருக்கிறேன்.... :( நிறைய எழுத வேண்டிய விஷயம்.... ஆனால் நேரம் போதவில்லை.... :((<br />
தயவுசெய்து என்னை மன்னிக்கவும்..... அடுத்த பதிவு நிச்சயம் சுவாரசிய பதிவாக இருக்கும்....<br />
<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"></div></div>ஆகாய நதிhttp://www.blogger.com/profile/12736746082102487610noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7792875904045770510.post-74274127970401250572011-02-27T08:57:00.000-08:002011-02-27T08:57:05.271-08:00நேயர் விருப்பம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">அனானி பெண் ஒருவர் எனக்கு அனுப்பியிருந்த பின்னூட்டத்தில் நான் பொழிலனோடு கழிக்கும் நாட்களில் சில மணி நேரங்களை என் பதிவுகளுக்கு ஒதுக்க வேண்டும் என்று விரும்பிக் கேட்டிருந்தார்.... அவருக்கு என் நன்றிகள் பல!!! <br />
<br />
<br />
இதே போல் நான் எழுத வேண்டும் என்று விரும்பி கேட்டிருந்த என்னுடைய பதிவர் வட்டம் மற்றும் பதிவர் வட்டம் அல்லாத தோழிகளுக்கும் எனது நன்றிகள் பல!!!! <br />
<br />
அவரது விருப்பத்திற்கு ஏற்ப அவர் கேட்டிருந்த மகளிர் தின பதிவிற்கு நான் ஒரு தொடர் சங்கிலிப் பதிவு எழுதித்தொடங்குகிறேன்.... நான் ரசிக்கும் சில பதிவர்கள் அதைத் தொடங்க நான் அழைக்கலாம் என்று இருக்கிறேன்.... <br />
<br />
<br />
பொழிலன் பள்ளிக்குச் செல்லத் துவங்கிவிட்டால் பின் நான் பழையபடி நிறைய பதிவுகள் எழுதலாம் என்று இருக்கிறேன்.... (மீண்டும் கொலைவெறிப் பதிவுகளா... மொக்கையா என்று புலம்புவது கேட்கிறது :)))) என்ன செய்ய ரசிகைகளின் வேண்டுகோள்....)<br />
<br />
<br />
என்ன செய்ய பொழில்குட்டியின் முக்கியமான நாட்கள் இவை.... அவர் இப்பொழுது பல நல்ல பழக்கங்கள் மற்றும் சில கெட்ட பழக்கங்கள் என இரண்டையும் கற்றுவருகிறார்... கோவப்படுவது, கத்துவது, அழுவது போன்ற கெட்டப் பழக்கங்கள் தான் அவை.... அதற்காக தான் நான் அவரோடு நேரம் செலவிட வேண்டியுள்ளது நான் அவரைக் கவனிக்காமல் சமைக்க மட்டும் தான் எனக்கு எனக்கு அவரிடம் இருந்து அனுமதி.... மற்றபடி நான் அவரோடுதான் இருக்க வேண்டும்.... இது பொழில்குட்டியின் கட்டளை! :))<br />
<br />
<br />
<br />
<br />
</div>ஆகாய நதிhttp://www.blogger.com/profile/12736746082102487610noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-7792875904045770510.post-32637051287254094582011-02-27T08:20:00.000-08:002011-02-27T08:20:11.735-08:00பொழிலன் பெயர் ஓர் அலசல்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">பொழிலன் அமெரிக்கா வந்து 3மாதங்கள் ஆகிவிட்டன..... அவன் இன்னும் சில நாட்களில் பள்ளிக்குச் செல்லப்போகிறான்.... ஆனால் என்னுடைய கவலை அவனுடைய பெயர் இந்த மக்கள் வாயில் நுழையுமா என்பதுதான்!!??? <br />
<br />
இங்கே மெக்சிகன் மக்கள் நம் தமிழ் மக்களை விட அழகாக இவன் பெயரை சொல்கிறார்கள்!!!<br />
<br />
<br />
நம் தமிழ் மக்களுக்கு உண்மையிலேயே தமிழ் சரியாக தெரியவில்லை என்றுதான் தோன்றுகிறது :(<br />
இந்த "ழ"கரம் படும்பாடு இருக்கிறதே.... <br />
<br />
<br />
ஆனால் இந்த அமெரிக்க மக்களுக்கு இந்த பெயர் ஓரளவுக்கு வருகிறது.... சிலர் அழகாகவே சொல்கிறார்கள்.... ஆனால் பலருக்கு வரவில்லை.... இந்நிலையில் பள்ளியில் இவன் பெயரை கொலை செய்யாமல் இருக்க ஒரு துணைப்பெயரும் தேவைப்படுகிறது.... ஆனால் எங்களுக்கு துணைப்பெயரும் ஓர் தமிழ் பெயராக இருக்கவேண்டும் என ஆசை.... அந்த பெயர் இவர்கள் வாயில் எளிதாக நுழைவதாகவும் இருக்க வேண்டும்.... <br />
<br />
<br />
எனக்கு ஒரு சந்தேகம்.... நம் தமிழ் மக்களுக்கு தமிழ் பெயர்களை தவிர்த்து அனைத்து மொழி பெயர்களும் தெளிவாக உச்சரிக்க வருகிறதே? அது எப்படி? இது நம் தமிழின் வீழ்ச்சியா?</div>ஆகாய நதிhttp://www.blogger.com/profile/12736746082102487610noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-7792875904045770510.post-59826514888254361952011-01-05T10:11:00.000-08:002011-01-05T10:11:45.926-08:00பனிமலையில் பொழில்குட்டியும் பனிமழையும் புத்தாண்டும்!!!<div></div>2011ம் ஆண்டு வருடப்பிறப்பு எங்களுக்கு " " என்னும் அழகான இடத்தில் மகிழ்ச்சியுடன் தொடங்கியது!<br />
<br />
<br />
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh7jLIzXWQVm_WD3Or4DsHjRfv0OOP0muAADhBtDrbTdoLLOaaKFgXNR-h1xW2AZ4DQWUHRF4pOCK67BywPVxU5EFSUwQBlayGFhzQdgtoWUuL7kFpat3xq_xRiru272yHmOfg5DIpATtI/s1600/pozhil.JPG"><img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5558762853339836802" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh7jLIzXWQVm_WD3Or4DsHjRfv0OOP0muAADhBtDrbTdoLLOaaKFgXNR-h1xW2AZ4DQWUHRF4pOCK67BywPVxU5EFSUwQBlayGFhzQdgtoWUuL7kFpat3xq_xRiru272yHmOfg5DIpATtI/s320/pozhil.JPG" style="cursor: hand; float: left; height: 166px; margin: 0px 10px 10px 0px; width: 320px;" /></a><br />
<br />
<div><br />
</div><br />
<div></div><br />
<div><br />
</div><br />
<div></div><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgu6D_kcsftL53RA5VV8HElOxpLTTPZSDax5tnm2R_5A59fwwnkog11IQxKpGmsmGbb_nqwmWRr_obDd9cAvHdz-eUjWebMLhyR3nHMW4M5Owla1i81MDqklhfXImMbG_ZdBZ8lnTtqAqs/s1600/Picture+319.jpg" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5558763042339325202" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgu6D_kcsftL53RA5VV8HElOxpLTTPZSDax5tnm2R_5A59fwwnkog11IQxKpGmsmGbb_nqwmWRr_obDd9cAvHdz-eUjWebMLhyR3nHMW4M5Owla1i81MDqklhfXImMbG_ZdBZ8lnTtqAqs/s320/Picture+319.jpg" style="float: left; height: 320px; margin: 0px 10px 10px 0px; width: 213px;" /></a><br />
<div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"><br />
இவ்விடத்தை போலவே அழகாக அமைதியாக இவ்வருடமும் அனைவருக்கும் அமைய வேண்டுமென வேண்டிக்கொள்கிறேன்!<br />
<br />
<span style="background-color: white; color: orange;">அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!</span><br />
<span style="background-color: white;"><span style="color: #cc0000;"></span></span><br />
"என்ன நல்லா கட்டிபோட்டிருக்கு என் கிட்ட வராதேனு சொன்னேன்!" இப்படித்தான் பொழிலன் முகத்தில் விழுந்த பனிமழையிடம் பேசிக் கொண்டிருந்தான்!<br />
<div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"><br />
</div><br />
</div><div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"><br />
</div><div></div><br />
<div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"></div>ஆகாய நதிhttp://www.blogger.com/profile/12736746082102487610noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-7792875904045770510.post-47465052721619105312010-01-04T19:57:00.000-08:002010-01-04T20:07:51.149-08:00புத்தாண்டு வாழ்த்துக்கள்!<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjsRvs6ltDaJFXi6FNVddYsU_qrRuK9le95OVsKaw4AStnn0Jz7WoakH_vO9YMdHpKfPaDqRqRPSv2GaKR6OdlaHo0j1DTJLn78RnpG47Wlenn0S2nh_GqwxbOAeVvGLpqP70CZGsDnIZc/s1600-h/pozhilan.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 270px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjsRvs6ltDaJFXi6FNVddYsU_qrRuK9le95OVsKaw4AStnn0Jz7WoakH_vO9YMdHpKfPaDqRqRPSv2GaKR6OdlaHo0j1DTJLn78RnpG47Wlenn0S2nh_GqwxbOAeVvGLpqP70CZGsDnIZc/s320/pozhilan.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5423102384262477874" /></a><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEimCV54HaQ78_xO_oDYWqR1bwuwA7dTKnyr0pHEZcYv8PEGZlE9HvrRKIyFde2ZAEQfH9YO9eT-6R5OkbHWfttn8AxqiiS3kVrwSmJBrRatH2pAWcfUR3sIx26U-Yqh1vQKJNsabbUn6Fc/s1600-h/111.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 240px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEimCV54HaQ78_xO_oDYWqR1bwuwA7dTKnyr0pHEZcYv8PEGZlE9HvrRKIyFde2ZAEQfH9YO9eT-6R5OkbHWfttn8AxqiiS3kVrwSmJBrRatH2pAWcfUR3sIx26U-Yqh1vQKJNsabbUn6Fc/s320/111.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5423102375013820418" /></a><br /><span class="Apple-style-span" style=" white-space: pre-wrap; font-family:Code2000;font-size:small;">இந்த வருடம் புத்தாண்டினை அமெரிக்காவில் அதுவும் டிஸ்னியில் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம் :) அதனால் தான் இத்துணை தாமதமான வாழ்த்து.... எங்கள் இருவர் மற்றும் எங்கள் பொழிலன் சார்பாக அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்! பொழிலன் புகைப்படம் பார்க்க விரும்பிய பொழில்குட்டி நண்பர்களுக்கு இதோ புத்தாண்டு விருந்து... </span><div><span class="Apple-style-span" style="font-family:Code2000;"><span class="Apple-style-span" style=" white-space: pre-wrap;font-size:small;"><br /></span></span></div>ஆகாய நதிhttp://www.blogger.com/profile/12736746082102487610noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-7792875904045770510.post-38656529901139058612009-12-03T04:32:00.000-08:002009-12-03T04:37:56.715-08:00வந்தாச்சு நாங்க! தொடங்கியாச்சு மொக்க!சில மாதங்கள் திருச்சி சென்று திரும்பியாச்சு!<br />அங்கே இருந்ததால் என் தொல்லை இல்லாம எல்லாரும் தப்பிச்சிட்டீங்க... :)<br />இனி விடுவோமா? வந்துட்டோம்ல..... :)<br /><br />பொழிலன் பற்றிய செய்திய இப்போலாம் அவனே சொல்லிடுவான் நான் தட்டச்சினா மட்டும் போதும்! :) அவ்வளவு வாய்!!! பின்னே புலிக்குப் பிறந்தது பூனையாகுமா? என்னைப் போல பேசுவானு பார்த்தா தாய் 80அடி பாய்த்தா குட்டி 160அடி பாயுது.... அவ்வ்வ்வ்.... ஆனா இப்படி மழலைய கேக்க கேக்க இன்பம்! :)ஆகாய நதிhttp://www.blogger.com/profile/12736746082102487610noreply@blogger.com9tag:blogger.com,1999:blog-7792875904045770510.post-66214616308888224862009-09-10T05:27:00.000-07:002009-09-10T06:21:36.505-07:00காதல்... அமுதோ நஞ்சோ?<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiF_i-v06JDmrzwuIALiQbZt6M_fGZGeHjDWSroX9aQX40wIqbN-p37w-QF1iiNhHa172zPY1saMbHLM_eZAD-xSyvAgEshWI_ORPOWHnwXUi7qhWtGsySujnplu4yNuA9aDkhIsUdU_S0/s1600-h/love1.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5379827198183160450" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 214px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiF_i-v06JDmrzwuIALiQbZt6M_fGZGeHjDWSroX9aQX40wIqbN-p37w-QF1iiNhHa172zPY1saMbHLM_eZAD-xSyvAgEshWI_ORPOWHnwXUi7qhWtGsySujnplu4yNuA9aDkhIsUdU_S0/s320/love1.jpg" border="0" /></a><br /><div>மாய வலையில் </div><br /><div>சிக்கி தேடினேன்</div><br /><div>வலையே நீயாக</div><br /><div>சிக்கியதோ உன்னில்</div><br /><div>தேடியதோ என்னை</div><br /><div>கிடைத்ததோ காதல்</div><br /><div></div><br /><div>ஏனோ கசக்கிறது </div><br /><div>அன்று இனித்தவை</div><br /><div>ஏனோ இனிக்கிறது</div><br /><div>உன்னை நினைக்கையில்</div><br /><div>யாரோ நீ யாரோ</div><br /><div>என்னில் ஏனோ</div><br /><div>வந்தே புகுந்தாய்</div><br /><div></div><br /><div>நொடிகள் தோறும்</div><br /><div>இம்சை ஏனோ</div><br /><div>காதல் </div><br /><div>இது நஞ்சோ??</div><br /><div>நொடிகள் தோறும்</div><br /><div>இனிமை ஏனோ</div><br /><div>காதல்</div><br /><div>இது அமுதோ??</div><br /><div></div><br /><div>கன்னம் சிவக்க</div><br /><div>இதயம் வலிக்க</div><br /><div>கண்கள் பேச</div><br /><div>தனியே சிரிக்க</div><br /><div>இரவோ நீள</div><br /><div>விடியல் தேடி</div><br /><div>உன்னைக் காண </div><br /><div>நானோ காத்திருக்க</div><br /><div>ஏனோ மாற்றம்</div><br /><div>உன்னால் தானோ!!!!!!!!</div><br /><div></div>பின் குறிப்பு:<br />கவிதை போன்றும் அல்லாமலும் வந்த இந்த கவுஜக்கு கவிஞர்கள் மற்றும் கவிதாயினிகள் மன்னிக்கவும் :(<br /><div></div><br /><div></div><br /><div></div><br /><div></div><br /><div></div><br /><div></div><br /><div></div><br /><div></div>ஆகாய நதிhttp://www.blogger.com/profile/12736746082102487610noreply@blogger.com12tag:blogger.com,1999:blog-7792875904045770510.post-19361638184135653472009-09-02T07:02:00.000-07:002009-09-02T07:09:23.926-07:00காத்திருத்தல்!<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhd28eUH4URTF5znntcZZ1VKQaat17cY1Xdtx17WSH65TAiIZLT0HDHszqIjLaqs95Uiev4E2KVZJBt4pqeGIOlwArgtrW_gWGl_9ZK3f82f6DQP2N0dNTvyTlhPBe05K-ryp-JmhzTlrs/s1600-h/waiting.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5376871930783270770" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 210px; CURSOR: hand; HEIGHT: 320px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhd28eUH4URTF5znntcZZ1VKQaat17cY1Xdtx17WSH65TAiIZLT0HDHszqIjLaqs95Uiev4E2KVZJBt4pqeGIOlwArgtrW_gWGl_9ZK3f82f6DQP2N0dNTvyTlhPBe05K-ryp-JmhzTlrs/s320/waiting.JPG" border="0" /></a><br /><div><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhPesDEcU2zXseYFvLTP7Jjjv_znQmTXFwioiQ8pjQt35b8pI5p7r5lQ2kc9dQ2h3fxCl6KYUTkQwWaQ-1sad3Wp2CoVdyDhxW0_ecUf-SlyysL6mymeQ1pzo5Jr0xLx-WJFcGRZNLQqjQ/s1600-h/love6.jpg"></a><br /><br /><div><br />உனக்கான<br />என் நினைவுகள்...<br />நமக்கான<br />என் காதல்....<br />காத்திருக்கின்றன<br />உன் வரவுக்காக....<br />என்னோடும்<br />உனக்கான<br />என் முத்தங்களோடும்.....!</div></div>ஆகாய நதிhttp://www.blogger.com/profile/12736746082102487610noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-7792875904045770510.post-50771411914160098812009-09-02T06:37:00.000-07:002009-09-02T07:01:01.207-07:00முத்திரை!!!<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgxhbzoIP-lpRZzZa7WMwvcIaP6ii3w0ou5G6J7nrG8gy5Ye626Lb-5xQSoxh61U6qvCx7nzBYi7y3JVmFvoSxSLZrxdMrxVTvA1J09SWiTsPWFzLlC5cJ3XFjnqlNj-2Ai4W1bXLo9RIs/s1600-h/kiss1.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5376869598573838674" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 214px; CURSOR: hand; HEIGHT: 320px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgxhbzoIP-lpRZzZa7WMwvcIaP6ii3w0ou5G6J7nrG8gy5Ye626Lb-5xQSoxh61U6qvCx7nzBYi7y3JVmFvoSxSLZrxdMrxVTvA1J09SWiTsPWFzLlC5cJ3XFjnqlNj-2Ai4W1bXLo9RIs/s320/kiss1.jpg" border="0" /></a><br /><div><br />கண்களால் சிறைபிடித்து<br />கைகளால் அணைத்து<br />என் கூந்தலில்<br />உன் உயிரைக் கட்டி<br />ஊசலாடுபவனே...<br />நித்தம்<br />உன் முத்தம்<br />என் மீது<br />உன் முத்திரை<br />நான் உன்னவள் என்று!</div><br /><div></div><br /><div></div>ஆகாய நதிhttp://www.blogger.com/profile/12736746082102487610noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-7792875904045770510.post-26307615331139037162009-08-31T23:23:00.000-07:002009-09-01T07:22:01.832-07:00எழும்பூர் இரயில் நிலையமும்.....எழும்பூர் இரயில் நிலையமும், தி।நகர், நுங்கம்பாக்கம் ஆகிய இடங்களும் குறிப்பாக பொத்தேரி இவை என் வாழ்வின் இனிமை, மகிழ்ச்சி மட்டுமே பார்த்த இடங்கள்!<br /><br />சின்ன வயதிலிருந்தே அடிக்கடி சென்னை வந்து பழகியிருந்தாலும் நான் என் மேல்நிலைப் படிப்பிற்காக சென்னையிலுள்ள பிரபலமான பொறியியல் கல்லூரியில் சேர்ந்தேன் அங்கு கேம்பஸ் இன்டெர்வியூ வாய்ப்புகள் அதிகம் என்பதால்! ஆனால் கல்லூரி வளாகத்தினுள் நுழைந்த போது நான் வெளியே காட்ட விரும்பாத பயமும் பீதியும் ஒரு மாதிரியான உணர்வும் என்னை ஆக்கிரமிச்சது நிஜம்! ஆனால் அதெல்லாம் ஒரு சில நிமிடங்கள் தான்!<br /><br />அடிக்கடி சென்னை விஜயம் என்பதால் எனக்கு எப்போது எழும்பூர் இரயில் நிலையம், மலைக்கோட்டை விரைவு இரயில், திநகர் ஆகியவை மனதிற்குப் பிடித்தமானவை :)<br /><br /><br />கல்லூரி படிப்பு நல்லவிதமாக ஒரு பக்கம் போய்க்கொண்டிருந்தாலும் வார விடுமுறைகளை நாங்கள் வீணாக்குவதே இல்லை! ஒரு நாள் படிப்பு, ரெக்கார்ட், மெஸ் உணவு, அழகாகும் முயற்சிகள்(கி கி கி வெள்ளரிக்காய், தயிர், எண்ணெய் மற்றும் இன்னபிற பூசி 2மணி நேரம் குளிப்பது) ஆகியவை நடந்தேறும்.... அடுத்த நாள் காலை சுறுசுறுப்பாக எழுந்து குளித்து அழகாக ரெடியாகி(அவ்வ்வ் பார்ப்பவர்கள் பாவம்) மாடர்ன் சிம்பிளா ஜீன்ஸ்+குர்தா (அ) டீசர்ட் போட்டுக்கிட்டு கோயிலுக்கு போவோம் பிரகு மெஸ்ல அவசரகதியா உணவு முடிச்சிட்டு காலை 10மணி பீச் டிரெயின் தான் டார்கெட்...<br /><br /><br />நாங்கள் எங்கே ஊர் சுற்ற போனாலும் 10மணி டிரெயின் தான்.... நாங்க பெண்கள் மட்டும் சேர்ந்து போவதால லேடிஸ் பொட்டிக்குள்ள புகுந்துடுவோம்... உள்ளே போயி சிக்கிச்சின்னாபின்னமாகி கசங்கி பூச்சாண்டி மாதிரியே உருமாறி ( ஏற்கனவே அப்படித்தான்ற உண்மைலாம் இப்போ யோசிக்கப் படாது) நாங்க இறங்கும் இடம் திநகர் அல்லது எழும்பூர் அல்லது நுங்கம்பாக்கம்...<br /><br />சென்னைல எங்கே போகனும்னாலும் இந்த மூன்று இடங்கள் போதும் இங்கிருந்து எல்லா இடங்களுக்கும் ரூட் பிடிச்சிடலாம் :)<br /><br />ஸ்பென்ஸர் பிளாசா:<br />***********************<br /><br />ஒரு வழியா எழும்பூர்ல இறங்கி ஆட்டோ பிடிச்சி 30ரூபாய் கொடுத்தா ஸ்பென்ஸர்ஸ் போலாம் வெயில் ரொம்ப இருந்தா அங்கே போய்ட்டா நல்லா சுற்றின மாதிரியும் இருக்கும் ஏசில இருந்தா மாதிரியும் இருக்கும்(எப்பூடி??) !<br /><br />ஸ்பென்ஸர்ல தப்பித்தவறி கூட பெரிய கடைகளில் எதுவுமே வாங்கிடக் கூடாது..... போனோமா எல்லா பொருளையும் ரேட் கார்டோட பார்த்தோமானு இருக்கனும்.... அதுக்காக ஒண்ணுமே வாங்கலனா எப்பிடி அதுனால லைஃஸ்டைல்ல வேணும்னா ஏதோ ஒன்றிரண்டு வாங்கிக்கலாம்.... நான் பொதுவா புக், சாக்லேட், கிரீடிங் கார்ட் வாங்குவேன்! ஸ்பென்ஸர்ல கூட சீப்பா (அட ஸ்பென்ஸர்குள்ள அது தாங்க சீப்) துணிகள் வாங்க சில கடைகள் இருக்கு.... அது ரொம்ப உள்ளே போகனும்.... அங்கே 100ரூபாய்க்கு அழகான டாப்ஸ், 300ரூபாய்க்கு அழகழகான குர்தா, 350லிருந்து 700ரூபாய் வரை அழகான முழு நீள ஃபேஷன் ஸ்கெர்ட் கிடைக்கும்.... அட நெசமாதாங்க... ஆனா தரம் ரொம்ப நல்லா இருக்கும்!<br /><br />அப்புறம் ஃபுட் கோர்ட் போயி அரைவயித்துக்கு ஏதாவது போட்டுகிட்டு லம்பா காசைக் கொடுத்துட்டு நடையகட்ட வேண்டியதுதான்...<br /><br />அபிராமி மெகா மால்:<br />************************<br /><br />இங்கே போகனும்னா நுங்கம்பாக்கம்ல இறங்கி பஸ் கிடைக்கும் இல்லனா நல்லா பேரம் பேசினா 40ரூபாய் இல்லனா 50ரூபாய் கொடுத்தா ஆட்டோல போயிடலாம் ! அது அழகான இடம் நல்லா பொழுதை போக்கலாம்... ஸ்பென்ஸரைவிட இங்கே ஃபேன்ஸி பொருட்கள் விலை சற்று குறைவு... அப்பிடி இப்படி சுற்றிக் கொண்டே இருந்தாலும் மீண்டும் மீண்டும் ஒரே இடத்திற்கு தான் வருவோம்.... இங்கே தியேட்டரும் இருப்பதால் படம் பார்க்கலாம்.... நாங்க இரண்டாவது முறை மற்றும் மூன்றாவது முறை கஜினி இங்கே பார்த்தோம்.... வெளியே வந்தால் கொஞ்சம் டீசென்டான திநகர்....<br /><br />இஸ் ஃபன்னி சென்டர்:<br />*************************<br /><br />அண்ணாநகர், நுங்கம்பாக்கம்ல இருந்து ஷேர் ஆட்டோ, அல்லது நுங்கம்பாக்கம்ல இருந்து 30ரூபாய் ஆட்டோக்கு அழுதா இங்கே வந்துடலாம்! ஸ்பென்ஸர் போல இதுவும் ஒரு பீட்டர் இடம்... ஸ்பென்ஸர் போல இதுவும் ஒரு பீட்டர் இடம்... ஆனால் ஸ்பென்ஸர் மேரி பிரவுன் உணவைவிட இங்கே இருக்கும் மேரி பிரவுன் எனக்கு மிகவும் பிடிக்கும்.... ஏனா இங்கே நல்லா பொறுமையா கவனிப்பாங்க... அமைதியான அழகான இடம்.... இங்கே எனக்கு பிடித்தது சீஸ் பர்கரும், பீட்ஸாவும், சமோசா மற்றும் கட்லெட்டும்! ரொம்ப சூடாவும் சுவையாவும் இருக்கும்!<br /><br />இங்கே எப்போ போனாலும் யாராவது சினிமா விஐபி பார்க்கலாம்.... நான் பிருந்தா மாஸ்டர், குஷ்பூ மற்றும் குடும்பத்தாரை இங்கே தான் பார்த்தேன்...<br /><br />இங்கே காஃபிடே மிக பிரபலம்.... பல கிளைகள் இருந்தாலும் இந்த கிளை மிக பிரபலம்! எனக்கும் காஃபிக்கும் வெகு தூரம் அதுனால் இந்த பக்கம் ஒதுங்கினது இல்ல....<br /><br />இது நம்ம ஏரியா:<br />*******************<br /><br /> ஹி ஹி அதாங்க திநகர்! இதைப்பற்றி உங்களுக்கு சொல்லனுமா என்ன?<br /><br />சரவணா ஸ்டோர் போயி சுற்றிப்பார்த்துட்டு, சென்னை சில்க்ஸ்ல, குமரன்ல, போத்தீஸ்ல ஏதாவது ஒரு கடைல டிரெஸ் எடுத்துட்டு, அப்புறம் இரயிவேஸ்டேஷன் பக்கத்துலயே ஒரு வளையல் கடை இருக்கு அங்கே போனா எல்லாவிதமான ஃபேன்ஸீ பொருட்களும் கி்டைக்கும்... அங்கே போயி காதுக்கு வளையல், காதுக்கு செயின்(கி கி கி) எல்லாம் வாங்குவோம்!<br />ஆங் அப்புறம் என் கணவர் எங்கள் நிச்சயதார்த்தத்திற்கு பின் என்னை அழைத்துச் சென்ற முதல் இடமும் இது தான்! அங்கே தான் எனக்கு விலையுயர்ந்த அழகான பரிசும் கொடுத்தார்! சோ சென்டிமென்டலாவும் எனக்குப் பிடித்த இடம்!<br /><br />நுங்கம்பாக்கம்:<br />****************<br /><br />இதுவும் என்னால் மறக்க முடியாத இரயிவே நிலையம்.... பின்னே என்னங்க காலைல 6மணி இரயிலைப் பிடித்து 7மணிக்கு நுங்கம்பாக்கம் வந்திறங்கி அங்கே இருக்கும் ஒரு பிளாட்பாரக் கடையில் சூடான சுவையான இட்லி, வடை சாப்பிட்டுவிட்டு பரபரப்பா வெளியே போயி பிடிட்ஜ தாண்டினதும் ஷேர் ஆட்டோ பிடித்து ஸ்ஸ்ஸ்ஸ் அப்பா இப்படி எங்கே அவசரமா போவோம் தெரியுமா.... ஜப்பனீஸ் மொழி கற்றுக் கொள்ள வகுப்பிற்கு தான்!<br />அதுக்காக நான் ஜப்பானீஸ் மொழில பேசுவேனானுலாம் கேட்கப்படாது! அது பரம இரகசியம்! :)<br /><br />இதுதான் எங்களோட ஃபேவரிட் ஊற் சுற்றும் இடங்கள்! :)<br /><br />இது இல்லாமல் நான் சென்று மகிழ்ந்த அழகான எனக்கும் பிடித்தமான இடங்கள் பெசண்ட் நகர் வழியே நாங்க போன முருகன் இட்லி கடை, பிட்ஸா ஹட், மேரி பிரவுன், சரவண பவன், மெரினா பீச், திநகர், அண்ணா நகர் முழுவதும், சத்யம் தியேட்டர் (இது மட்டும் போனதில்ல) , மாயாஜால், மைலாப்பூர் கோயில், தாம்பரம் கோயில், நுங்கம்பாக்கம் இட்லி கடை, தாம்பரம் வஸந்தபவன் இப்படிப் பல இடங்கள்.... (என்ன ஒரே ஹோட்டல்களாக இருக்கேனு என் சாப்பாட்டு விஷயத்தை பற்றிலாம் யோசிக்கப்பிடாது ஆமாம் சொல்லிட்டேன்) !<br /><br />அப்புறம் எங்கள் கல்லூரியை சுற்றி இருக்கும் கடைகளுக்கு போவோம்... ஜூஸ் குடிப்போம்....<br /><br /><p>இப்படியாக எழும்பூர் இரயில் நிலையமும் அங்கு தொடங்கிய என் சென்னைக் காதலும் இன்னும் வளர்ந்து கொண்டே இருக்கிறது! இப்படி என் வாழ்க்கையோட மகிழ்ச்சியான தருணங்களை அதிகம் பார்த்த சென்னையின் பிறந்தநாளுக்கு என்னுடைய காலம் தாழ்ந்த வாழ்த்தும், நன்றி கூர்ந்து பதிவிட இந்த மொக்கை பதிவும்! :) </p><p>சென்னை வாழ்க!மெரினா பீச் வாழ்க! </p><p> </p>ஆகாய நதிhttp://www.blogger.com/profile/12736746082102487610noreply@blogger.com11tag:blogger.com,1999:blog-7792875904045770510.post-57899246725550323952009-08-27T22:54:00.000-07:002009-08-27T23:36:58.296-07:00கலக்கல் பொழிலன்!பொழில் குட்டி வர வர ரொம்ப செல்ல கலாட்டா பண்றான்.... சேட்டை பண்றது அவன் தான் ஆனால் அடி மட்டும் எங்களுக்கு :( அவ்வ்வ்வ்வ் அடிப்பது வேறும் யாரும் இல்லை பொழிலன் தான்.... ஒரு அடிக்கு இரண்டு மூன்று கிள்ளுகள், பிராண்டல்கள் இலவசம்! :)<br /><br /> ************************************************<br /><br />கஷ்ஷ்ஷ்டப்பட்டு வளர்த்த கூந்தல் எல்லாம் பொழிலன் கையில சிக்கி சின்னாபின்னமாகி அல்லோலப்படுது! இதுல வேற பொழிலன் அப்பா டயலாக் ஒரு சமயம் என் முடிய பார்த்திட்டு " பரவால நீ முடி நிறைய தான் வெச்சிருக்கே நம்ம குழந்தை பிறந்ததும் புடிச்சு இழுத்து விளையாட " அவ்வ்வ்வ் அவன் இழுத்தா விளையாடுறான்? நோ நோ........ பிய்த்துல விளையாடுறான்....<br /><br />அன்று ஒரு நாள் இப்படித் தான் நான் இட்லி சாப்பிட்டுக்கிட்டே தொலைக்காட்சி பார்த்துட்டு இருந்தேன்... அப்போ இங்கே அங்கே நடமாடிக்கொண்டு இருந்த நம்ம சார் அதாங்க மிஸ்டர்.பொழிலன் நேரா என் கிட்ட வந்து என் இட்லி தட்டைப் பிடித்து இழுக்க நான் இழுக்க ஒரு வழியா நான் வெற்றி எனக்கு.... ஆனால் அதற்குள்ளே டிவில ஒரு எண்ணெய் விளம்பரம் அதுல இரண்டு வடை காமிச்சாங்க...<br /><br />வடை சாப்பிட்டு ரொம்ப நாளாச்சேனு நான் டிவியில வடைய பார்க்கத் திரும்பினா என் தட்டு பொழிலன் கையில.... என் இட்லி தரைல.... உடனே வடைய காட்டுவதற்கு முன்னாடியே நான் பொழிலன் பக்கம் திரும்ப என் இட்லி தரைல.... அதுக்குள்ள வடையும் போச்சு :( அய்யோ வடை போச்சே அதோட இட்லியும் போச்சே!<br /> <br /> ***********************************************<br /><br />இப்போது எல்லாரையும் உம்பா என்று அழைக்க ஆரம்பித்திருக்கிறான்.... பின்ன நாங்க அவனை பல செல்லப் பெயர்களில் கொஞ்சும் போது அவன் எல்லாருக்கும் ஒரு செல்லபெயர் வைத்திருக்கிறான்! :)<br /><br />உம்பா உக்கார்(உட்காரு), உம்பா வேணாம் உம்பா, உம்பா இயா பா ( மியாவ்கு பால்) , உம்பா பாட்டில், அய்யா பாஆஆஆ ( பாய் சொல்கிறான்) , உம்பா தா தா தா இவையெல்லாம் அவன் இப்போது தொடர்ச்சியாக பேசும் வரிகள்!<br /><br />என்னை அம்மானும், உம்பானும் கூப்பிடுவது போலவே எல்லாரையும் அந்தந்த உறவு முறை அல்லது உம்பா என்று அழைக்கிறான்.... :)<br /><br /> ***********************************************<br /><br />எந்த எந்த பொருளை எதற்காக எப்படி பயன்படுத்தனும்னு நல்லாவே தெரியுது! சீப்பினை எடுத்த தலை வாறுவது போல செய்கிறான், கரண்டி,ஸ்பூன் எடுத்தால் கூடவே கிண்ணம் எடுத்துக் கொண்டு ஏதோ சாப்பிடுவது போல செய்கிறான்! புத்தகங்களைப் பார்த்தால் ஒன்றை எடுத்துக் கொண்டு தொடர்ச்சியாக ஏதோ படிக்கிறான்.... புத்தகம் தலைகீழாக இருந்தாலும் குழந்தை பொறுப்பாக படிக்கும் அவன் படிப்பது என்னனு அவனுக்கும் கடவுளுக்கும் தான் தெரியும்! :)<br /><br />பொறுப்பான பிள்ளை துடைப்பத்தை பார்த்தாலே எடுத்து வீடு பெருக்குகிறான்... அதை தூக்க முடியாமல் தூக்கி பெருக்குவது கொள்ளை அழகு! ஆனால் அவன் அதில் பாதி உயரம் தான்!<br /><br />காலையில் நான் கிச்சனில் அமர்ந்து காய்கள் வெட்டிக் கொண்டிருந்தால் என்னுடன் வந்து உட்கார்ந்து கொண்டு நான் வெட்டும் காயெல்லாம் எடுத்து தூக்கி வீசிக் கொண்டிருப்பான்!<br /><br /> ***********************************************<br /><br />அவனுக்கு என்ன சாப்பிடக் கொடுத்தாலும் மியாவ்கும், காகாவிற்கும் கொடுக்க வேண்டும் என்று கேட்பான் அவன் மழலையில்.... இயா தா... (மியாவ்கு தா)!<br /><br />வர வர ஒழுங்காக சாப்பிடுவது இல்லை.... சாப்பாட்டினை தானே உண்ண வேண்டும் என்று கிண்ணத்தோடு வாங்கிக் கொள்வான்... பின் அதனை கீழே சிந்தி மேலே சிந்தி கடைசியில் வயிற்றுக்குள் ஒன்றும் போகாது :(<br /><br /> *********************************************<br /><br />ஆனால் எல்லாவற்றிற்கும் அழுது, கத்தி, அடம் பிடித்து சாதிக்கும் குணத்தை எப்படி மாற்றுவது? இன்னும் வளர்ந்த பின்பு இப்படி செய்தால் தகாது அதனால் இந்தக் கால குழந்தைகளின் பிடிவாதத்தை மாற்றும் சிறந்த வழி அறிந்தோர் கூறுங்கள்! நாங்கள் அனைவரும் பலவாறு முயற்ச்சித்து வெற்றிகரமாக தோல்வியடைந்தோம்! :(<br /><br /> ************************************************<br /><br />ஆனால் அவனுடனான தருணங்கள் இன்பத்திற்கு குறைவில்லாத இரசனைகள் நிறைந்த தருணங்கள்! அவன் மீதான என் இரசனைகளுக்கு வயதே ஆகாது (பொழிலனுக்கே வயதானாலும்) ! :) அவனைப் பற்றி எழுதிக் கொண்டே இருக்கலாம் ஆனால் அப்புறம் இடம் இருக்காது மற்றும் படிப்பவர்களின் பொறுமை கருதி இதோடு இன்று நிறுத்திக் கொள்கிறேன்!<br /><br /> *************************************************ஆகாய நதிhttp://www.blogger.com/profile/12736746082102487610noreply@blogger.com21tag:blogger.com,1999:blog-7792875904045770510.post-54076445733997381332009-08-27T07:25:00.000-07:002009-08-27T08:00:51.560-07:00இரத்தக் கண்ணீரே வந்துவிடும் போலஇரண்டு நாட்களுக்கு முன்பு செய்தித் தாளில் படித்த செய்தி... இரண்டு ஆண்குழந்தைகள் பிறந்த சில மணி நேரத்திலேயே தாயால் துணியில் கட்டி பையில் போடப்பட்டு சாக்கடையில் வீசப்பட்டு கடைசியில் துணிப் பையிலேயே.... அய்யோ சொல்லவே கண் கலங்குது.... இரண்டு பிஞ்சும் படைத்த கடவுளிடமே போய்ட்டாங்க.... பாவம் தாய் வயிற்றில் இருக்கப்போ இந்த உலகத்தைப் பற்றி எப்படியெல்லாம் நினைத்திருக்கும் இரு பிஞ்சுகளும்...<br /><br />எப்படி இப்படியெல்லாம் செய்ய மனம் வருது பெற்ற தாய்க்கே? இரத்தக் கண்ணீரே வருகிறது :(<br /><br />நேற்றும் தொலைக்காட்சியில் காண நேர்ந்த விஷயம் இது போலத் தான் அசுத்த நீர் ஓடு சாக்கடையில் வீசப்பட்டக் குழந்தை.... கடவுளே குழந்தையை வேண்டம்னு முடிவு பண்ணவங்க.... அதுங்க உயிர்வாழவே முடியாதபடி ஏன் சாக்கடைகளிலும், கண்ட இடங்களிலும் வீசுறாங்க? தொட்டில் குழந்தை திட்டம், தொண்டு நிறுவனம், ஆசிரமம் இப்படி எங்கேயாவது விடலாமே?<br /><br />இல்லையென்றால் குழந்தை இல்லாத எத்துணையோ பேர் குழந்தைக்காக ஏங்கிக்கொண்டிருக்க அவர்களிடம் கொடுக்கலாம்.... அதையெல்லாம் விட்டுவிட்டு ஏன் இப்படி?<br /><br />சுய விருப்பம் இல்லாமல் நிச்சயம் கருத்தரிக்க முடியாது... தெரிந்தே கொலை செய்யும் இந்த பெண்களை என்ன செய்வது?<br /><br />ஒரு ஆணிடம் ஏமாந்தவர்கள், பெண் குழந்தை என்றால் மறுக்கும் கணவன் குடும்பத்தாருக்கு பயந்தவர்கள், தகாத காதல் மற்றும் கள்ள உறவினால் கருத்தரித்தவர்கள் இப்படி பலர் இந்த வரிசையில் பிஞ்சுகளை பலியாக்கிவிட்டுச் செல்கிறார்கள் :(<br /><br />இதயெல்லாம் பார்க்கும் போதும் கேட்கும் போதும் அழுகை முட்டிக் கொண்டு வருகிறது.... அந்தப் பிஞ்சுகளின் முகத்தைப் பார்க்கும் போது நம்மை அறியாமல் ஏதோ ஓர் உணர்வு நம்மை ஆக்கிரமிக்கிறது :(<br /><br />நம்மால் ஆன உதவிகளை இந்த குழந்தைகளுக்கு நாம் செய்யவேண்டும்...<br />முடிந்தால் தத்து எடுத்து வளர்ப்போம் அல்லது அவர்களை வளர்க்கும் தொண்டு நிறுவனங்களுக்கு உதவுவோம்!<br />இது என் பல வருடக் கனவு....<br /><br />ஆனால் இப்படி தொண்டு நிறுவனம் இருக்கும் தைரியத்தில் தான் இந்த கல் நெஞ்சம் படைத்தவர்கள் குழந்தைகளை இப்படி வீசுகிறார்கள்!<br /><br />தாயன்புக்கு ஏங்கி உறவுகள் இன்றி வாழும் அந்தக் குழந்தைகள் மனதில் எத்தகைய காயம் உருவாகும் :( என்ன தான் நாம் உதவினாலும் தாய் தரும் அன்புக்கு ஈடாகுமா? என்று மாறுமோ இந்த நிலை!ஆகாய நதிhttp://www.blogger.com/profile/12736746082102487610noreply@blogger.com12tag:blogger.com,1999:blog-7792875904045770510.post-29074789397018618692009-08-27T06:57:00.000-07:002009-08-27T07:11:00.297-07:00மெளனம்<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgISIkP-WcmWoqCnvvfBYFG8licN15RTkzwnMDWMur6t9FF0KlTk_UXZ4lvXRCM80oOEPTfCDflzo-zUF9OyPDywg9CTHn4p55NUyYdR4NyoVf1OO2UAt7ATAjfVT0wpnGtePgKdykezEk/s1600-h/silence_by_donjuki.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5374645809758210818" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 300px; CURSOR: hand; HEIGHT: 300px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgISIkP-WcmWoqCnvvfBYFG8licN15RTkzwnMDWMur6t9FF0KlTk_UXZ4lvXRCM80oOEPTfCDflzo-zUF9OyPDywg9CTHn4p55NUyYdR4NyoVf1OO2UAt7ATAjfVT0wpnGtePgKdykezEk/s320/silence_by_donjuki.jpg" border="0" /></a><br /><div>மெளனமான என் இரவொன்றில்</div><br /><div></div><br /><div>எனக்கான உன் நினைவுகள்</div><br /><div></div><br /><div>காற்றின் வழி செல்கையிலே</div><br /><div></div><br /><div>அது உன்னை அடைந்ததோ </div><br /><div></div><br /><div>அல்லது பொழுது விடிந்ததோ!</div><br /><div></div><br /><div>காற்றோடு பயணித்தாலும் அது </div><br /><div></div><br /><div>காற்றினும் விரைவாக வருகையில்</div><br /><div></div><br /><div>என் மனமோ மெளனமாக</div><br /><div></div><br /><div>உன் மனதின் வசமாக</div><br /><div></div><br /><div>உன் நினைவுகளோ</div><br /><div></div><br /><div>நம் நினைவுகளாய் </div><br /><div></div><br /><div>என்னை வந்தடைய </div><br /><div></div><br /><div>இது காதலோ நட்போ</div><br /><div></div><br /><div>இரண்டும் கடந்த உறவோ</div><br /><div></div><br /><div>என் மனதைக் கேட்டேன் </div><br /><div></div><br /><div>மெளனமான என் மனதோடு </div><br /><div></div><br /><div>உரையாடும் உன் மனம்</div><br /><div></div><br /><div>சொன்னது என்னிடம்</div><br /><div></div><br /><div>இது நமக்கான..............</div><br /><div></div><br /><div></div><br /><div></div><br /><div></div><br /><div></div>ஆகாய நதிhttp://www.blogger.com/profile/12736746082102487610noreply@blogger.com17tag:blogger.com,1999:blog-7792875904045770510.post-76747168815950985292009-08-19T22:21:00.000-07:002009-08-19T23:04:16.353-07:00முன்னேறும் இந்தியத் திருநாட்டின் அதிர்ச்சியான மறுபக்கம்நம் நாடு முன்னேறிக் கொண்டிருக்கிறதா என்றால் இல்லை என்றே சந்தேகத்துடன் கூறுவேன்.... ஒரு புறம் முன்னேறும் காட்சிகள் பல அரங்கேறிக் கொண்டிருந்தாலும் நம் தாய் நாட்டின் மறுபக்கம் :(<br /><br />நம் அம்மா பார்ப்பதற்கு அழகாக பட்டாடை, நகையெல்லாம் உடுத்திக் கொண்டு அழகுக்கு அழகு சேர்த்து படாடோபமாக இருந்தால் அவர் மகிழ்ச்சியாக வளமாக வாழ்கிறார் என்று கூறிவிடலாமா? அவர் மனதிலும் எந்தக் குறைகளன்றி உண்ண உணவிலும் எந்தக் குறையுமின்றி நோய் ஏதுமின்றி இருந்தால் மட்டுமே அவர் மகிழ்ச்சியாக அவளமோடு வாழ்கிறார் என்று கூறுவோம்....<br /><br />பின் நம் தாய் நாட்டினைப் பற்றி மட்டும் ஏன் அப்படி முன்னேறிய பக்கத்தை மட்டும் பார்த்து திருப்தி பட்டுக் கொள்கிறோம் என்று தெரியவில்லை!<br /><br />இதன் மறுபக்கம்.... இன்னும் குழந்தைத் திருமணம், பெண் சிசுக் கொலை, வரதட்சணைக் கொடுமை அல்லது வரதட்சனைக் கொடுமை செய்வதாக பொய் புகார் அளித்து கணவர் குடும்பத்தைப் பழிவாங்குதல், நோய்கள் பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லை என்று சொல்லமாட்டேன் குறைவாக இருக்கிறது... இப்படி எத்தணையோ நிகழ்கிறது நம்மை சுற்றி!<br /><br />படித்த மேல் தட்டு மற்றும் நடுத்தட்டு வர்க்கத்தினரை மட்டும் பார்த்து, "இல்லை இப்படியெல்லாம் இப்போது நடப்பதே இல்லை" என்று கூறிவிட முடியாது! நான் கூறும் நிகழ்வுகளை படித்துவிட்டு சொல்லுங்கள்...<br /><br />நிகழ்வு 1<br /><br />அன்று ஒரு நாள் விஜய் டிவியில் ஒரு நிகழ்ச்சியில் ஒரு கிராமத்தின் குழந்தைகள் அனைவருமே பொன்னுக்குவீங்கி என்னும் ஒரு வித அம்மை தொற்று நோய்த் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கின்றனர்... ஆனால் இது பற்றிய போதிய விழிப்புணர்வு இன்னும் பலருக்கும் நகரத்திலேயே உருவாக நிலையில் கிராம மக்களைப் பற்றி என்ன சொல்வது... நகரத்தில் தங்க நகை அணிவித்து இந்த நோயைக் குணப்படுத்துவதாக எண்ணி மருத்துவ ஆலோசனை பெறாமல் அது தானாகவே சரியாகிவிடும்... இதை நானே பல இடங்களில் நேரில் பார்த்திருக்கிறேன்...<br /><br />அது கிராமம் அல்லவா அதனால் தான் மக்கள் ஒரு படி மேலே போய் தாய்மார்கள் தங்கள் குழந்தைக்கு இந்த நோய் வந்தால் உடனடியாக தங்கள் கழுத்தில் அணிந்திருக்கும் தங்கத்தினாலான திருமாங்கல்யத்தைப் போடுகிறார்கள்.... இது கேட்பதற்கே கேவலமாக இருக்கிறது...<br /><br />அங்கு ஓடு அசுத்தமான சாக்கடை நீரே இதற்கு காரணம்... சுகாதார நிலையத்திற்குச் சென்று நோய்க்கு மருத்துவம் பார்க்காமல் இப்படி நடப்பதும் நம் இந்தியாவில் தான்! :(<br /><br />நிகழ்வு 2<br /><span class=""></span><br /><span class="">சாலைகளில் அழகான விளக்குகள் அமைத்து, சாலையோரச் சுவர்களில் அழகான படங்கள் வரைவது மிகவும் நல்ல விஷயம் தான்! ஆனால் அதற்காக செலவிடும் பணத்தில் ஒரு பகுதியை குடிசைமாற்று வாரியத்திற்கு ஒதுக்கி இன்னும் சென்னை "மா"நகரின் பிளாட்பாரத்தில் வசிக்கும் மக்களுக்கு இருப்பிடம் ஏற்படுத்தித் தரலாமே? </span><br /><span class=""></span><br /><span class="">அவர்கள் இருப்பிடத்தைவிட்டு மீண்டும் பிளாட்பாரத்திற்கு வந்தால் (அப்படியும் நடக்கிறது ) கடுமையான தண்டனைகளை விதிக்கலாம்!</span><br /><span class=""></span><br />அண்ணா நகரில் டவர் பூங்காவிற்கு அருகில் செல்லும் தெருவில் கூட நான் இத்தகைய பிளாட்பாரவாசிகளைப் பார்த்திருக்கிறேன்!<br /><span class=""></span><br />நிகழ்வு 3<br /><span class=""></span><br />நம் நாட்டில் செய்வதற்கு ஆயிரம் வேலை இருக்கிறது... சுய தொழில் இருக்கிறது... பின் ஏன் வேலைவெட்டியில்லாதவர்களும் , போலிச் சாமியார்களும் (இதுவும் ஒரு சுய தொழிலோ? ) , பேயோட்டும் மந்திரவாதிகளும் என்று தெரியவில்லை.... பின் எப்படி நாடு சுத்தமாக அழகாக மாறும்?<br /><span class=""></span><br />சோம்பேறித் தனத்தை மறைக்க சாமியார் வேடம் ஒரு வழியா? அதிலும் கருப்பசாமி தன் காலில் விழுந்து கெஞ்சியதாம் தன் மகள் உடம்பில் வசிக்க அதனால் தானும் ஒத்துக் கொண்டாராம்.... இப்படி கூறும் ஒரு மனிதர் தன்னை காளி அன்னை என்றும் கூறிக் கொள்கிறார்.... தகவல் உபயம் விஜய் டிவிக்கு நன்றி!<br /><span class=""></span><br /><span class="">இதெல்லாம் ஒரு பிழைப்பா? அதிலும் கருப்புசாமி வந்ததும் அப்பெண் மது குடிக்கிறார், பீடி, சுருட்டு புகைக்கிறார், கஞ்சா அடிக்கிறார்... சீ இதெல்லாம் கேவலமாக இல்லை.... தெய்வத்தை, பெண்மையை, நம் கலாச்சாரத்தை சீர்குலைக்கும் இவர்களை விடுத்து எப்போது பார்த்தாலும் இந்த ஐடி பெண்கள் அட்டகாசம் செய்கின்றனர், ஐடி மக்கள் குடிக்கின்றனர், அப்படி செய்றாங்க, இப்படி போறாங்க, இவங்களால கலாச்சாரம் கெடுது அது இது என்று ஐடி மக்களை குறை கூறுவதே பொறாமை பிடித்த பல மக்களின் வேலையாகப் போயிற்று! </span><br /><span class=""></span><br />இதில் உச்சக்கட்டக் கொடுமை என்னவென்றால் அந்த பெண் சட்டத்தினால் தடை செய்யப்பட்ட போதைப் பொருளான கஞ்சா அடிப்பதைக் கூட வெளிபடையாகக் கூறுகிறார், "நீங்கள் தவறுனா நினைச்சாலும் பரவால எனக்கும் அது தவறுனு தெரியும் ஆனா கருப்புதான் கஞ்சா அடிக்கிறார் "<br />என்று வேறு நாக்கூசாமல் சொல்கிறார்...<br /><span class=""></span><br /><span class="">ஏங்க இப்படி தெய்வம் மனிதனுக்குள்ள வந்து எல்லா காரியங்களும் செய்தா நமக்கு எதுக்கு படிப்பு, வேலை? எல்லாத்தையும் தெய்வம் பார்த்துக் கொள்ளாதா? கடவுள் வழிதான் காட்டுவார் நாம தான் அதை கடவுள் கொடுத்த மூளையை வைத்து நல்லவிதமா நமக்கும் பிறருக்கும் பயன்படும் விதமா அமைத்து வாழ்க்கையை உயர்த்திக்கனும்.... அதை விட்டுட்டு , எல்லாருக்கு எப்போதும் நன்மை செய்யக் கூடிய கடவுள் மேல் பழிபோட்டு இப்படி தீய காரியங்கள் செய்யலாமா? </span><br /><span class=""></span><br />இந்த நிகழ்வுகளையெல்லாம் படித்த பிறகு என்ன தோன்றுகிறது நமக்கு.... நம் நாட்டில் மாற வேண்டியது பல உள்ளன... மக்களுக்காக மக்கள் செய்ய வேண்டிய கடமைகள் தாராளம்.... அரசாங்கம் செய்ய வேண்டிய கடமைகளும் அதற்கு நம் ஒத்துழைப்பும் ஏராளம் தேவை... நாம் ஒரு பக்கத்தை மட்டுமே பார்த்துவிட்டு ஆகா இந்தியா எங்கோ போகிறது என்று பேசி பெருமைக் கொள்வதில் தவறில்லை ஆனால் இன்னும் நல்லவிதமாக முன்னேற நம் கடமைகளை இனியாவது செம்மையாக ஆற்றுவோம்...<br /><span class=""></span><br /><span class="">சுதந்திர தினத்தன்று மட்டும் நாட்டுப்பற்று வந்து என்ன பயன்? நாட்டுப்பற்றினை நாள்தோறும் நாம் செய்யும் சின்ன சின்ன விஷயங்களில் கூட காட்டலாம்! முயற்சிப்போமே! </span><br /><span class=""></span><br /><span class=""></span><br /><span class=""></span><br /><span class=""></span><br /><span class=""></span><br /><span class=""></span><br /><span class=""></span>ஆகாய நதிhttp://www.blogger.com/profile/12736746082102487610noreply@blogger.com22tag:blogger.com,1999:blog-7792875904045770510.post-32006228546976983122009-08-13T07:12:00.000-07:002009-08-13T07:22:06.923-07:00கிருஷ்ண ஜெயந்தியும் எங்கள் குட்டிக் கண்ணனும்<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh1rCXxn9Doyt_DwbDr3L8QK_232JCExrbLGvEyOas-S_60E1PZBpdu0FwrYrdeLF4aJtXOI3Iz8zmAJD-vkKWd4VFLUUBUfJu23XtfBKwhHrQNpeH7HVOmQrpwGqX_LFbKu_1NbKbHF-Q/s1600-h/Krishna+Jeyanthi+007.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5369453266040905698" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 240px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh1rCXxn9Doyt_DwbDr3L8QK_232JCExrbLGvEyOas-S_60E1PZBpdu0FwrYrdeLF4aJtXOI3Iz8zmAJD-vkKWd4VFLUUBUfJu23XtfBKwhHrQNpeH7HVOmQrpwGqX_LFbKu_1NbKbHF-Q/s320/Krishna+Jeyanthi+007.jpg" border="0" /></a><br /><div><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEglukJwYbZ5vf4jMmm8ugiHiZAbzcUxkvL-RptGSe0FJ53g33cLKq2jSA-EglJQ_0_A7rggY4fEcTDJRzXVXdoowIxflwYc0Wzr4AwGKekJOQOwqO-3fim9ko09g4qx0A3xTaciqNsA9Fk/s1600-h/Krishna+Jeyanthi+003.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5369453259976580882" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 240px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEglukJwYbZ5vf4jMmm8ugiHiZAbzcUxkvL-RptGSe0FJ53g33cLKq2jSA-EglJQ_0_A7rggY4fEcTDJRzXVXdoowIxflwYc0Wzr4AwGKekJOQOwqO-3fim9ko09g4qx0A3xTaciqNsA9Fk/s320/Krishna+Jeyanthi+003.jpg" border="0" /></a><br /><br /><div><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjDHifUYRKRl13i_o2EzKeWy0_WLauRk7G61Xc3w-72uqbqHE2ji4po76EcCWPHToDDbNSp32a1yGjpHgEqIwbi9kLR1vlf5-HEyFvXbslyzI-7uSP2NS-xXZJw6UVOCNOKi6nkkrvm5_s/s1600-h/Krishna+Jeyanthi+018.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5369453248646496658" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 240px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjDHifUYRKRl13i_o2EzKeWy0_WLauRk7G61Xc3w-72uqbqHE2ji4po76EcCWPHToDDbNSp32a1yGjpHgEqIwbi9kLR1vlf5-HEyFvXbslyzI-7uSP2NS-xXZJw6UVOCNOKi6nkkrvm5_s/s320/Krishna+Jeyanthi+018.jpg" border="0" /></a><br /><br /><br /><div><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg1nO_f_XiPpe_vUUrWB9LsdJa4fr-0-pAbgcCEjIXCCc1ovuU3zL1MJWAu6X6i-1eWOb82PM_nhHSVJZwrFgBVUGTZvlaaGB2rV-bjuJNVo77bDu_hE_VcKLiTDZkbWqBPnbT3DGUW1zk/s1600-h/Krishna+Jeyanthi+013.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5369453236090518258" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 240px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg1nO_f_XiPpe_vUUrWB9LsdJa4fr-0-pAbgcCEjIXCCc1ovuU3zL1MJWAu6X6i-1eWOb82PM_nhHSVJZwrFgBVUGTZvlaaGB2rV-bjuJNVo77bDu_hE_VcKLiTDZkbWqBPnbT3DGUW1zk/s320/Krishna+Jeyanthi+013.jpg" border="0" /></a><br /><br /><br /><br /><div><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjJ3XKCwfbqlCYyGkEwtehpoGMfyTGo2ZLS80DuftrIfLcpQVzg7VLXS6eFH-VbJj7xlZ6eBEdhyphenhyphenuNiThaHY47AGusbtWxeadoe6q2Q69se9RNX8W5I5DjP1iM1yRtp2Syn72VxMgSDQTg/s1600-h/Krishna+Jeyanthi+011.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5369453232484551826" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 240px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjJ3XKCwfbqlCYyGkEwtehpoGMfyTGo2ZLS80DuftrIfLcpQVzg7VLXS6eFH-VbJj7xlZ6eBEdhyphenhyphenuNiThaHY47AGusbtWxeadoe6q2Q69se9RNX8W5I5DjP1iM1yRtp2Syn72VxMgSDQTg/s320/Krishna+Jeyanthi+011.jpg" border="0" /></a><br /><br /><br /><br /><br /><div>இந்த வருடம் கிருஷ்ண ஜெயந்திக்கு எங்கள் குட்டிக் கண்ணன் என் புகுந்தவீட்டிலும் சென்ற வருடம் கிருஷ்ண ஜெயந்திக்கு என் பிறந்த வீட்டிலும் இருந்தான்!</div><br /><div></div><div>புகைப்படங்களை பார்த்து நீங்களே சென்ற வருட கண்ணனையும் இந்த வருட கண்ணனையும் கண்டுபிடியுங்கள்! :)</div><br /><div></div><div>பொழிலனின் கிருஷ்ணலீலை எங்களைக் கட்டிப்போட்டுவிட்டது! :)</div><div></div><div> </div></div></div></div></div>ஆகாய நதிhttp://www.blogger.com/profile/12736746082102487610noreply@blogger.com15tag:blogger.com,1999:blog-7792875904045770510.post-39481030717260985752009-08-09T08:50:00.000-07:002009-08-13T07:35:12.793-07:00பப்புவின் கதையும் பொழிலனும்!சந்தனமுல்லை தன் மகள் பப்புவின் கதையை அவள் குரலிலேயே பதிவு செய்து நமக்காக சித்திரக்கூடத்தில் பதித்திருந்தார்! நான் பொழிலனை பப்புவின் கதையை கேட்க வைத்தேன்!<br /><br />பொழிலன் கதை கேட்டுக் கொண்டே பப்புவிற்கு ஏதேதோ அவன் மழலை மொழியில் பதில் சொல்கிறான் :) கேட்பதற்கு இனிமையாக இருந்தது!<br /><br />ஸ்பீக்கர் அருகே போய் அமர்ந்து கொண்டு பப்புவின் கதையைக் கேட்டான்! :)<br /><br />நன்றி பப்பு! நன்றி முல்லை! பொழிலனுக்கு மழலைக் குரலில் கதை சொன்னதற்காக..... :)ஆகாய நதிhttp://www.blogger.com/profile/12736746082102487610noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7792875904045770510.post-19861854157807431512009-08-05T05:37:00.000-07:002009-08-05T05:42:57.544-07:00தாய்ப்பால் வார பதிவு!<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi8aVF6BZPAQQunrNGfHUnrQSfg_LU4487pj4GiRJFuFmEu7WOrweWrNATnYsiAR4OTx9xC75AdG0E-LyqrB2jCNG0BeUZNaAe5TGrKP8K5Zqt6LwKGbnZMvSoRnOGLuT1Gj0iQR7wiej4/s1600-h/Breast+feeding+week1.bmp"><img id="BLOGGER_PHOTO_ID_5366459148250699282" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 196px; CURSOR: hand; HEIGHT: 320px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi8aVF6BZPAQQunrNGfHUnrQSfg_LU4487pj4GiRJFuFmEu7WOrweWrNATnYsiAR4OTx9xC75AdG0E-LyqrB2jCNG0BeUZNaAe5TGrKP8K5Zqt6LwKGbnZMvSoRnOGLuT1Gj0iQR7wiej4/s320/Breast+feeding+week1.bmp" border="0" /></a><br /><div></div><br /><div>பாலூட்டும் அன்னையர் மற்றும் குழந்தைகளுக்கு இந்த உலகத்தாய்ப்பால் வாரதிற்கான எனது வாழ்த்துகள்!</div><br /><div></div><br /><div>தாய்ப்பால் என்பது இறைவன் அளித்த வரம் நமக்கு! அதனை வீணாக்காமல் குழந்தைக்கு அளித்து நமக்கும் நம் குழந்தைக்குமான அன்யோன்யத்தை அதிகரிப்பதோடு நம் குழந்தையின் ஆரோக்கியமான வாழ்பிற்கும் ஆதாரம் அளிப்போம்!</div><br /><div></div><br /><div>மேலும் படிக்க <a href="http://ammakalinpathivukal.blogspot.com/2009/08/blog-post_05.html"><strong>இங்கே</strong></a> சொடுக்கவும்...... </div>ஆகாய நதிhttp://www.blogger.com/profile/12736746082102487610noreply@blogger.com0