July 2, 2013

ஐந்தாம் அகவையில் பொழிலன்!!


மன்னிக்கவும் மக்களே.... காலம் கடந்து ஒரு பதிவு!

குட்டிமாவுக்கு வரும் ஜூலை 16ம் நாள் பிறந்தநாள்!  இந்த ஐந்து வருடங்களில் அவனுடைய வளர்ச்சி சற்று நிதானித்துப் பார்த்தால் பெருமையாகவும், ஆச்சரியமாகவும் இருக்கிறது!


எத்தனை எத்தனை கெள்விகள், எத்தனை விதமான கற்பனைகள், உருவகங்கள், திறமைகள், பழக்கவழக்கங்க்கள்.. அம்மம்மா!!

ஆனால் இந்த கவனம் ஈர்க்க பொது இடங்களில் அவன் செய்யும் நாடகங்கள் " முடியலடா சாமி" !

பெண் பிள்ளைகள் தான் இன்றைக்கு அம்மாவுக்கு உதவுவார்கள் என்றில்லை... பொழிலன் எனக்கு சமையல் வேலைக்கு அவன் பிஞ்சுக் கரங்களால் முடிந்தவரை உதவுவான்... அதுவும் நான் கேட்காமலே...

அழகாக படம் வரையும் திறன் உள்ள அவனுக்கு நானே இப்பொழுது டிராயிங் டீச்சர்!!! ( அவ்வ்வ்வ் அப்டின்னு என்னங்க சத்தம்?)

ஆனா அவன் பாட்டும் கத்துக்க விரும்புறான்!! அதுக்காக நானே பாட்டு டீச்சர்லாம் ஆக முடியாது... எனக்கு கொஞ்சம் சமுதாய அக்கறை உண்டு... அதுனால இப்போதைக்கு நடனம் மற்றும் ஸ்கேடிங் மட்டும், பாட்டுலாம் விஜயதசமிக்கு பார்த்துக்கலாம்னு இருக்கோம்!

வாயாடும் பொழிலனின் கேள்விகள்  சில ....


அம்மா நீ சாமி ஒண்ணுதான்னு சொல்ற பின்ன ஏன் விரிய சாமி படங்கள் வெச்சிருக்க... அப்போ அந்த ஒரு சாமிக்கு அம்மா சாமி அப்பா சாமிலாம் வேண்டாமா?

ஸ்கூல்ல மேம் எதுக்கு தமிழ் இங்கிலீஷ் கலந்து பேசுறாங்க? அப்போ மேம்க்கு இங்கலீஷ் தெரியாதா?

அம்மா அந்த அத்தை டம்மிக்குள்ள பேபி இருக்குனு சொன்னியீ ஆனா அவங்க டம்மி ஏன் குட்டியா இருக்கு? 
 
யோகா கிளாஸ்ல தொப்பை குறைய யோகா செய்ய வந்தவங்கள பார்த்து அம்மா இந்த அத்தைக்கும் பேபி இருக்கா டம்மிக்குள்ள   அவங்க  டம்மி பெருசா  இருக்கே?

அம்மா ஈ கொசுலாம் எப்படி குளிக்கும்? அதற்கு நான் அவையெல்லாம் குளிக்காது அதுனால தான் கிருமிகளைப் பரப்புது!
உடனே அவன் அப்போ கிருமிஎல்லாம்  குளிக்காதா?


அவ்வ்வ்வ்......

December 20, 2011

அம்மா உன் வயிற்றுக்குள்ள potty , flush tank கிடையாதா?

பொழிலனுக்கும் எனக்கும் நடந்த சில உரையாடல்கள்:


பொழில்: 
அம்மா நான் குழந்தையா இருந்தப்போ எப்படிமா பெரியவனா               ஆகினேன்?

நான்:
நீ சமத்தா நல்லா சாப்பிட்டியா... அதான் பெரிய பையன் ஆகிட்ட!!

பொழில்: (பெருமையுடன்)
ஆமாமா, நான் நல்லா சாப்பிட்டதும் நம்ம தூங்கிட்டோமா அப்புறமா நீ எழுந்து பார்த்தா நான் பெரிய பையன் ஆகிட்டேன் ஒரே மேஜிக் ஆகிடுச்சு!!

நான்:
ஆமாம் குட்டிமா! நீ இன்னும் நல்லா சாப்பிட்டீனா இன்னும் பெரிய பையன் ஆகி அப்பா மாதிரி பெரியவங்களா ஆகிடலாம்!

பொழில் : அம்மா நான் உன் வயிற்றில இருந்தப்போ எப்படி "பூப்" போனேன்?

நான்: (அவ்வ்வ் எப்படி பதில் சொல்ல அவன் அப்பாவைப் பார்த்துக்கொண்டே)

நீ அப்படியே என் வயிற்றுக்குள்ளேயே போய்ட்ட....

பொழில்:
யக்.. அம்மா உன் வயிற்றுக்குள்ள potty , flush tank கிடையாதா?

நான்: இல்லமா அதெல்லாம் அங்கே இருக்காது...

பொழில்: இல்ல இருக்கனும்.... ம்ம்ம்ம்...

நான்: இடம் பத்தாது தங்கம்...

பொழில்: இல்ல வேணும்...

நான்:
சரி அடுத்த பாப்பா அம்மாக்கு வரும் போது நீ potty வாங்கிட்டு வந்து அம்மா வயிற்றுக்குள்ள வெச்சிடு....

பொழில்: ஒகே மா... (பெருமையோடு)

பொழில்: அம்மா நான் இப்போ big man மாதிரி பேசிட்டேன்!!! நான் வளர்ந்து பெரிய பையன் ஆகி பெரிய man ஆகிட்டேன்... அதான் அப்படி பேசிட்டேன்!!! ( மிகுந்த பெருமையுடன்)

August 10, 2011

பொழிலனின் பிஞ்சுக் கைவண்ணம் - 2

August 3, 2011

பொழிலனின் பிஞ்சுக் கைவண்ணம் - 1

ஓவிய‌ம் வ‌ரைவ‌திலும், ஓவிய‌ங்க‌ளுக்கு வ‌ர்ண‌ம் தீட்டுவ‌திலும் ஆர்வ‌ம் மிகுந்த‌ பொழில்குட்டி சிறிய‌ பொருட்க‌ளை வ‌ரைய‌த் துவ‌ங்கினான்.... இப்ப‌டியாக‌ பொழிலன் முதன் முதலாக வரைந்த முகம் :)


இது எல்மோ என்னும் கார்ட்டூன் முகம்....












பொழிலனின் கதை நேரம்!!(ஒளி/ஒலி வடிவில்)

அமெரிக்காவில் ஆரம்பக்கல்வி!!

பொழிலனை இங்கே ஒரு நல்ல பள்ளியில் சேர்த்திருக்கிறோம்... நான் அந்தப் பள்ளிக்குச் சென்று அவனுடைய வகுப்பறைக்கும் சென்று நன்கு பார்த்துவிட்டுதான் அந்தப் பள்ளியைத் தேர்ந்தெடுத்தேன்... எனக்கு இங்கே மிகவும் பிடித்த ஒன்று குழந்தைகளை எதற்காகவும் கட்டாயப்படுத்துவதில்லை... அவர்கள் போக்கிலேயே சென்று அவர்களை நம் வழிக்குக் கொண்டுவருவதைக் கடைப்பிடிக்கின்றனர்... அதிலும் பள்ளிகளிலும் அதே வழிமுறைதான்!

குழந்தைகளின் கருத்துக்களுக்குப் பெரிதும் மதிப்பளிக்கப்படுகிறது.... இது அவர்களை இன்னும் மேம்படுத்தவும், தன்னம்பிக்கை உருவாவதற்கும் பெரிதும் உறுதுணையாக இருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது!!

அவனுக்குப் பள்ளி துவங்கியதும் முதல் ஒரு வாரம் முதல் இரு வாரங்கள் வரை நானும் அவனுடன் சென்று அவன் அருகில் இருக்கலாம் அவன் மனம் புதிய இடமாற்றத்தை ஏற்றுக்கொள்ளும் வரை.... ஆனால் இரண்டு மூன்று நாட்களிலேயே குழந்தைகள் தாயைப் பிரிந்து புதிய தோழர், தோழிகளிடம் பழகிவிடுகின்றனர்... பொழிலனும் அவ்வாறு மாறிவிடுவான் என்று எண்ணுகிறேன்....

ஒரு வாரத்திற்கு ஒரே ஒரு புதிய குழந்தை பள்ளிக்கு முதன் முதல் வகுப்பிற்கு என்று அழைக்கப்படுகிறது. இது நல்ல முறையாகத் தோன்றுகிறது.... அந்த ஒரு வாரம் முழுவதும் அந்த குழந்தையை நன்கு கண்காணித்து, புரிதலுடன் அந்த குழந்தையை ஆசிரியர் ஏற்றுக்கொள்ளவும் குழந்தையும் ஆசிரியருடன் எளிதில் நெருங்கிப் பழகவும் இது உதவும்.... நம் ஊரில் எப்படி என்று தெரியவில்லை.... நம் ஊரிலும் இதே வழக்கம் இருந்தால் மிக்க மகிழ்ச்சிதான்.... இல்லையென்றாலும் இப்படி சில மாற்றங்கள் வந்தால் வரவேற்போம்...

இங்கே தமிழ் மொழி பயிலவும் குழந்தைகளுக்கான ஆரம்ப நிலை தமிழ் வகுப்புகள் தனி "தமிழ் பள்ளியாக" இருக்கின்றன...

ஆனால் பொழிலுக்கு தமிழ் கற்பிக்க தற்சமயம் நானே போதும் என்று எண்ணுகிறேன்... அவன் அழகாக தமிழிலும் பேசுகிறான்... எழுதவும் முயற்ச்சிக்கிறான் :)

மொத்தத்தில் தேசம் விட்டு தேசம் வந்தாலும் தமிழ் என்றும் நம்மிடம் வாழ்கிறது...

மார்கண்டேயனா குழந்தைகளின் நற்குணத்துக்கு எமனா?

தற்போது புதிதாக வெளிவந்துள்ள திரைப்படம் மார்கண்டேயனில் முதல் காட்சி,


" தன்னை சோறுபோட்டு அழைத்துவந்தவரின் மன உளைச்சலுக்குக் காரணமான ஒருவனை அந்த பத்து வயதோ அதை ஒட்டியோ உள்ள சிறுவன் துரத்தி துரத்தி அரிவாளால் வெட்டுகிறான்... அதே வயதை ஒத்த சிறுவர்கள் பலரும் இப்படி அரிவாள், கத்தி என்று பயங்கர ஆயுதங்களுடன் அவனை துரத்துவார்கள், ஆனால் இவன் வெட்டி வீழ்த்திவிடுவான்"


இந்தக் காட்சி தேவையா? இதை எப்படி திரைப்பட தணிக்கைக் குழு அனுமதித்தது.... இதைக் காணும் சிறுவர்களின் நிலை என்ன? அவர்கள் மனதில் நஞ்சினை விதைப்பது போலாகாதா? இத்திரைப்படத்தினை தடை செய்தே ஆக வேண்டும்... அல்லது இம்மாதிரியான காட்சியையாவது நீக்க வேண்டும்....


இதனைப் பற்றி உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்!