March 24, 2011

மழலைச் செல்வம் பொழில‌ன்

மழலைத் தமிழ் பேசிக்கொண்டிருந்த பொழில்குட்டி தற்போது மழலையில் ஆங்கிலம் பேசத் துவங்கியுள்ளான்.... :))) தற்போது எங்களுக்கு அவனுடைய மழலைத் தமிழும் ஆங்கிலமும் கேட்பதற்கு இனிமையாகவும் சில சமயம் சில சொற்கள் சிரிப்பை வரவழைப்பதாகவும் இருக்கின்றது....






அவனுடை மழலைத் தமிழ் தற்போது தெளிவாகியுள்ளது... அதனால் நாங்கள் அவனிடம் ஆங்கிலத்தில் பேசத் தொடங்கியிருக்கிறோம்... ஏனெனில் அவனுக்குப் பள்ளி துவங்குவதற்கு முன்பாக அவன் சரியான ஆங்கிலத்தில் ஓரளவிற்குப் பேச வேண்டியுள்ளது.... அவனது தேவைகளை அவன் ஆசிரியையிடம் தெரிவிக்கவாவது.... பின் பள்ளிக்குச் செல்லத் துவங்கிவிட்டால் அமெரிக்க வழக்கில் ஆங்கிலம் பேசத் தொடங்கிவிடுவான்.... தற்போதே தொலைக்காட்சியின் பயனாக சில வார்த்தைகள் இவர்களின் மொழி பேசும் வழக்கிலேயே வருகின்றது....அவனுக்கு இந்த ஊரின் நல்ல பழக்கவழக்கங்களையும் கற்றுக்கொடுக்கிறோம்...


 இப்போதெல்லாம் அவன் அவனுடைய அப்பாவோடு தொடர்ந்து இருப்பதால் இருவரும் நன்கு நெருங்கிவிட்டார்கள்....நாள்தோறும் மாலை அவன் அப்பா வீடு திரும்பும் போதே அன்றைய நிகழ்வுகளின் பட்டியலோடு தயாராக இருப்பான்... நானும் அவனும் பகலில் எங்கெல்லாம் சென்றோம்... யாரை சந்தித்தோம்... என்ன விளையாடினோம் என பட்டியல் ஒரு நிகழ்வினையும் தவரவிடாது இருக்கும்.....



வெளியில் சென்றால் அம்மம்மா!!! அவன் கேள்விகளுக்கு பதில் சொல்வதற்கு எனக்கு இந்த 24மணி நேரம் போதவே போதாது....வீட்டில் இருந்தாலும் சரி கேள்விகளுக்கு மட்டும் நேரம் காலம் என்பது கிடையாது... கேள்விக்கு பதில் கூறும் போது அதிலிருந்து இன்னொரு கேள்வி பிறக்கும்,.... நானே இன்றும் அப்படித்தான்.... பின் நான் பெற்ற குழந்தை எப்படி இருப்பான்...

ம‌க்க‌ள் மெய்தீண்ட‌ல் உட‌ற்கின்ப‌ம் ம‌ற்ற‌வ‌ர்

சொற்கேட்ட‌ல் இன்ப‌ம் செவிக்கு

இந்த‌ குற‌ள் தான் என் நினைவிற்கு வ‌ருகிற‌து :)))



 
அவ‌னுக்கு இங்கு உள்ள‌ உண‌வுப் ப‌ழ‌க்க‌வ‌ழ‌க்க‌ம் பிடிக்க‌வில்லை..... ந‌ம் தென்னிந்திய‌ உண‌வுக‌ளான‌ இட்லி,ப‌ருப்பு, இர‌ச‌ம், கீரை, அசைவ உணவு தான் பிடித்திருக்கிற‌து..... ம‌ற்ற‌ப‌டி ஆசிய‌நாடுக‌ளின் அசைவ உண‌வுக‌ளை விரும்பி சாப்பிடுகிறான்.... ஆனால் இவ‌ன் ப‌ள்ளிக்குச் சென்றால் அங்கே அமெரிக்க‌ சிற்றுண்டி வ‌கைக‌ள் தான் குழ‌ன்தைக‌ளுக்குத் த‌ருகிறார்க‌ள்.... நாம் கொடுத்த‌னுப்ப‌க் கூடாது.... அத‌ற்கு தான் இவ‌னை எப்ப‌டிப் ப‌ழ‌க்குவ‌து என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்....

தாமதமான வாழ்த்தும் மன்னிப்பும்!!!

ம‌களிர் தினத்தினை ஒட்டி எழுத வேண்டிய பதிவு மிக மிக தாமதமாக எழுதுவதற்கு முதலில் மன்னித்துவிடுங்கள்....

மகளிர் தினத்திற்கு எப்படி வாழ்த்து சொல்வது என்று தெரியவில்லை.... எதற்காக வாழ்த்த வேண்டும் என்றும் தெரியவில்லை.... பெண் குழந்தையாகப் பிறந்து பெண்ணா என்ற கேள்வி இன்றி இன்று இந்த அளவிற்கு வளர்ந்திருப்பதற்கு வாழ்த்துவதா? அதற்கு பெற்றவர்களுக்கு நன்றி உரித்தாகட்டும்....


பெண்களின் பிரச்சனைகள அலசவும், ஆராயவும், அதில் சிக்கிக்கொள்ளவும் பின் வெளிவரவும் திறமை இருப்பதாலா? அதற்கு கடவுளுக்கு நன்றி!!!


இதைப் பற்றி பொதுவில் பேசும் உரிமை இருப்பதாலா? அதற்கு இந்திய பேச்சுரிமை, எழுத்துரிமை சட்டத்திற்கு நன்றி உரித்தாகும்.... அதையும் கடந்து பெண்கள் வாய் திறக்க முடியாதவாறு இன்றும் அடக்கி ஆளும் ஒரு சில ஆண்கள் இருக்கும் இந்த சமுதாயத்தில் எனக்கு கிடைத்திருக்கும் தனிப்பட்ட உரிமைக்கு என் கணவருக்கு நன்றி உரித்தாகட்டும்....


அம்மாடி... போதும்.... பின்னே வேறு என்ன சொல்வது.... இன்றும் ஒரு புறம் வாய் திறவாத பெண்கள்... ஒரு புறம் வாய் திறக்க இயலாத பெண்கள்.... ஒரு புறம் திறந்த வாய் மூடாத பெண்கள்!!!!

(சரி இதில் நான் எந்த வகை? ஏய் மனசாட்சி வாயை மூடு )


பெண்க‌ளின் அசுர‌ வேக வ‌ள‌ர்ச்சியைப் ப‌ற்றி நான் எழுதிதான் நீங்க‌ள் தெரிந்து கொள்ள‌ வேண்டும் என்றில்லை.... இது அனைவ‌ருக்கும் தெரிந்த‌தே.... அத‌னால் எப்போது முன்னேறிக் கொண்டே இருக்கும் ந‌ம‌க்கும் என்றும் என்றென்றும் என‌து வாழ்த்துக்க‌ள்!!!!





பின்குறிப்பு:

அமெரிக்கா வ‌ந்து மூன்று மாத‌ங்க‌ளுக்குப் பிற‌கு வீடு தேடி குடி வ‌ந்து வீட்டினை ஒழுங்கு ப‌டுத்தி அப்ப‌ப்பா... ப‌ல‌ வேலைக‌ளுக்கு ந‌டுவில் அனானி ஒருவ‌ரின் வேண்டுகோளுக்கிண‌ங்க‌ இந்த‌ப் ப‌திவு ஒரு அவ‌ச‌ர‌ ப‌திவு...  அத‌னாலேயே ச‌ரியான‌ நேர‌த்தில் வாழ்த்த‌ இய‌லாம‌ல் போன‌து அத‌ற்கு ம‌ன்னிக்க‌வும்.... எப்போதுமே ந‌ம‌க்கு ந‌ம் வாழ்த்துக்க‌ள்.....

ப‌திவும் அங்கு தொட்டு இங்கு தொட்டு ஒருவாறாக‌ எழுதியிருக்கிறேன்.... :( நிறைய‌ எழுத‌ வேண்டிய‌ விஷ‌ய‌ம்.... ஆனால் நேர‌ம் போத‌வில்லை.... :((
த‌ய‌வுசெய்து என்னை ம‌ன்னிக்கவும்..... அடுத்த‌ ப‌திவு நிச்ச‌ய‌ம் சுவார‌சிய‌ ப‌திவாக‌ இருக்கும்....