June 30, 2008

கர்ப்பிணிகளுக்கானக் குறிப்புகள்: 8,9,10 மாதங்கள் :)

இந்த மாதமும் இரத்த பரிசோதனை செய்து சர்க்கரை, சிவப்பணுக்கள் இவற்றோட அளவு என்னனு பாக்கனும். யூரின் பரிசோதனையும் செய்துக்கனும்.கிருமித் தொற்று இருக்கானு பாக்கனும்.
இப்போ உங்க செல்லத்துக்கு 2கிலோக்கு மேல் எடை கூட ஆரம்பிச்சிருக்கும்:)
வாரக் கணக்குப்படி 32வது வாரம் முதல் 8வது மாதம் 36வது வாரம் முதல் 9ஆவது மாதம்.
இப்போ முதலே நீங்க என்ன குழந்தை அதுக்கு என்ன பேர் வைக்கலாம் அப்டினு யோசிச்சுட்டிருப்பீங்க :) இரும்புச் சத்து, புரதம், விட்டமின் ஏ,பி,சி,இ,ஃபாலிக் அமிலம் இதெல்லாத்தையும் உணவு மற்றும் மாத்திரை மூலமா தொடர்ந்து எடுத்துக்கனும்.
இனிமே படுக்க ரொம்ப சிரமமா இருக்கும். எப்பவுமே இடது புறமா திரும்பி வயிற்றின் மேலே உங்களோட எடை இல்லாத மாதிரி படுக்கனும். அது தான் குழந்தையின் வளர்ச்சிக்கும், சீரான சுவாசத்துக்கும் நல்லது. கழுத்து வலிக்கும் போது வலது பக்கமா திரும்பிக்கலாம்.
இனிமே நீங்க உங்க அம்மினாய்டிக் திரவ அளவ சீரா வெச்சிக்கனும். பிரசவ காலம் வரை நான் சொன்ன சீரக கசாயம் குடிக்குறது நல்லது.
கேழ்வரகு கூழ், சத்து மாவு கூழ் குடிக்கிறதும் ரொம்ப நல்லது.
இனி நீங்க நல்லா முன்ன விட‌ நல்லா நடங்க. அப்புறம் வெண்ணீர் வெச்சி இடுப்பு, கால் தசைப் பகுதிகள்ல நல்லா ஊற்றி விட மறக்காதீங்க.
நல்லா உதை வாங்குறீங்களா?:) இரவு படுக்கும் முன்னாடி அடி வயிற்றுல விளக்கெண்ணெய் தேய்ச்சிட்டுப் படுங்க. உடல் சூட்டைத் தணிக்கும். இனிமே இளநீர் அதிகம் அடிக்க வேண்டாம் அது அதிகமான சுண்ணாம்பு நிறைந்தது செல்லத்துக்கு ஒத்துக்காது.
அதிகமா குலுங்கி பயணம் செய்றது, தொலை தூர பேருந்து மற்றும் இரு சக்கர வாகனப் பயணம், வேகமான நடை இதெல்லாம் கூடாது.
இப்போ உங்க குழந்தை பிறந்தா நல்லா படியா இருக்க வாய்ப்புகள் அதிகம். நீங்க பிரசவ வலி பற்றி அவசியம் தெரிஞ்சிக்கனும். அதுக்கு பயப்படவே தேவை இல்லை. உங்க செல்லத்தப் பாக்கப் போற அந்த நேரம், கடவுளுடைய படைப்ப இந்த உலகத்துக்குக் கொண்டு வரப் போற அந்த நேரம் நீங்களும் புதுசாப் பிறக்கப் போற அந்த நேரம், பிஞ்சுக் கால் கைகள தொடப்போற அந்த நேரம், உங்கத் திருமணப் பரிசா ஒரு உன்னதப் பூங்கொத்த உங்களவருக்குக் கொடுக்கப் போற அந்த நேரம், உங்க அம்மாவ தெய்வமா நீங்க உணரப் போற அந்த நேரம், ஒரு புனிதமான நேரம்!!! வாழ்க்கைல அதிக அளவு மகிழ்ச்சியான நேரம்!!!உங்கப் பிறப்போட அர்த்தம் உங்களுக்கு புரியிற நேரம்!!!!
அதுக்காக காத்திருக்க ஆரம்பிங்க. அது உங்களுக்கு மட்டும் வலி இல்லை. குட்டி பாப்பாக்கும் வெளிய வரும் போது வலிக்கும்ல. நீங்க இப்போ தைரியமா இருந்தா தான் பாப்பாவும் தைரியமா இருக்கும்.
இடுப்புப் பகுதிகளில் வலி அதிகமா இருக்கும்। அதிகமா மூச்சிறைக்கும். உடலில் சில மாற்றங்கள் தெரியும். கால்கள் வலிக்கும். கடைசியா பிரசவ வலி வரும். அது பல விதமா வரலாம். இடுப்பு, வயிறு முழுதும், அடி வயிறு,இடுப்போடிணைந்து கால்கள்,நடு வயிறு அப்டினு வலி எங்க வேணுனா துவங்கலாம். முடிவு நல்லதா இருக்கும்.

"பிரசவ காலக் குறிப்புகள்"

கர்ப்பிணிகளுக்கானக் குறிப்புகள்: 6,7 மாதங்கள் :)

வழக்கம் போல நான் கடந்த முறை சொன்ன உணவு வகைகள் எல்லாம் தொடர்ந்து சாப்பிடுறீங்கனு நம்பறேன்।:)அது கூட குங்குமப் பூவையும் சேர்த்துக்கோங்க தரமான பூ சூடன நீர் அல்லது பாலில் கலந்தா கரைய வெகு நேரமாகும். கரைந்த பின்னாடி நல்லா மஞ்சள் நிறம் கொடுக்கும்.
இந்த மாதம் இரத்த பரிசோதனை செய்து சர்க்கரை, சிவப்பணுக்கள் இவற்றோட அளவு என்னனு பாக்கனும். யூரின் பரிசோதனையும் செய்துக்கனும்.
இப்போ உங்க செல்லத்துக்கு நல்லா எடை கூட ஆரம்பிச்சிருக்கும்:)
இரும்புச் சத்து, புரதம், விட்டமின் ஏ,பி,சி,இ,ஃபாலிக் அமிலம் இதெல்லாத்தையும் உணவு மற்றும் மாத்திரை மூலமா தொடர்ந்து எடுத்துக்கனும்.
இனிமே படுக்க சிரமமா இருக்கலாம். எப்பவுமே இடது புறமா திரும்பி வயிற்றின் மேலே உங்களோட எடை இல்லாத மாதிரி படுக்கனும். அது தான் குழந்தையின் வளர்ச்சிக்கும், சீரான சுவாசத்துக்கும் நல்லது. கழுத்து வலிக்கும் போது வலது பக்கமா திரும்பிக்கலாம்.
இனிமே நீங்க உங்க அம்மினாய்டிக் திரவ அளவ சீரா வெச்சிக்கனும். சீரகத்த தண்ணிர்ல( முடிந்தா சிறிகீரை வேரையும் சேர்த்து) நல்லா கொதிக்க வெச்சு அதுக்கூட பனை கற்கண்டு சேர்த்து கலந்து வடிகட்டி சிறிது வெண்ணெய் சேர்த்து அப்டியே கண்ண மூடிட்டு குடிச்சிடனும். இத தினமும் மதிய வேளை குடிக்கனும்.
கேழ்வரகு கூழ், சத்து மாவு கூழ் குடிக்கிறதும் ரொம்ப நல்லது.
இனி நீங்க வேலை நல்லா செய்யனும் டிமிக்கி அடிக்கப்படாது।:) இரவு படுக்கப் போகும் முன் நல்லா நடங்க. அப்புறம் வெண்ணீர் வெச்சி இடுப்பு, கால் தசைப் பகுதிகள்ல நல்லா ஊற்றி விட்டா வலியும் குறையும் தசைப் பகுதுகளும் பிரசவத்துக்காக நல்லா விரிந்து கொடுக்க ஆரம்பிக்கும். கால்களுக்கடியில தலயணை வெச்சு தூங்குறது நல்லது. மற்றபடி எல்லாமே கடந்த மாதங்களில் சொன்னதேதான். மீண்டும் அடுத்த மாதம் சந்திக்கலாம்.:)மற்றபடி மருதுவர் ஆலோசனைப் படி நடந்துக்கோங்க. அது வரை நன்றி கூறி விடை பெறுவது உங்கள் ஆகாயநதி!!!!

"கர்ப்ப காலம்( எட்டு, ஒன்பது, பத்தாவது மாதம்)"

கர்ப்பிணிகளுக்கானக் குறிப்புகள்: 4,5வ‌து மாதங்கள் :)

இப்போ உங்கள் வயிறு நல்லாவே வெளியே தெரிய ஆரம்பிக்கும் :)
கடுமையான வாந்தி, தலை சுற்றல் பெரும்பாலானோருக்குக் குறையும். சிலருக்கு குறையாது :(
பசியோட அளவு இன்னும் அதிகரிக்கும். வழக்கம் போல நான் கடந்த முறை சொன்ன உணவு வகைகள் எல்லாம் தொடர்ந்து சாப்பிடுங்க.
இந்த மாதம் இரத்த பரிசோதனை செய்து சர்க்கரை, சிவப்பணுக்கள் இவற்றோட அளவு என்னனு பாக்கனும். அதுக்குக் தகுந்த மாதிரி உணவு முறையை அமைச்சுக்கலாம்.
இப்போ உங்க செல்லத்துக்கு நல்லா காது கேக்க ஆரம்பிச்சுடும். அதுனால நல்ல புத்தகங்களைப் படிக்கலாம். நல்ல பயனுள்ள நிகழ்ச்சிகளைப் பார்க்கலாம். மனசை மகிழ்ச்சியா வெச்சிக்க வேண்டியது ரொம்ப முக்கியம். அதுக்கூட பேச ஆரம்பிங்க. ஆனா இப்பவே பாடம் சொல்லிக்குடுக்காதீங்க பாவம்.
இரும்புச் சத்து, புரதம், விட்டமின் ஏ,பி,சி,இ,ஃபாலிக் அமிலம் இதெல்லாத்தையும் உணவு மற்றும் மாத்திரை மூலமா எடுத்துக்கனும்.
மற்றபடி மருதுவர் ஆலோசனைப் படி நடந்துக்கோங்க.
சோனோகிராம் ஸ்கேன் செய்றது நல்லது। அது குழத்தையோட உடல முழுவதுமா பார்த்து ஏதேனும் ஊனம் இருக்கானும், பிளாசென்டா வளர்ச்சி எப்படி இருக்குனும் சொல்லிடும். மற்றபடி எல்லாமே கடந்த மாதங்களில் சொன்னதேதான். மீண்டும் அடுத்த மாதம் சந்திக்கலாம்.:) அது வரை நன்றி கூறி விடை பெறுவது உங்கள் ஆகாயநதி!!!!

'கர்ப்பகாலம் (ஆறு மற்றும் ஏழு மாதங்கள்)'

June 11, 2008

கர்ப்பிணிகளுக்கான குறிப்புகள் :3ஆவது மாதம் :)

இது ஒரு முக்கியமான காலகட்டம் உங்கக் குட்டிச்செல்லத்துக்கு।இவ்வ‌ள‌வு நாள் இணைக‌ருவா இருந்த அவ‌ங்க‌ இப்போ க‌ருவா உரு வ‌ள‌ர்ச்சி அடையுறாங்க. உட‌ல் ப‌குதியும் தலை‌யும் பிரிந்து க‌ழுத்துப் ப‌குதி உண்டாகுது.கைக‌ள் ம‌ற்றும் கால்க‌ள் சிறிய அள‌வுள வ‌ள‌ர‌த் துவ‌ங்குது.
உட‌லோட ப‌ல முக்கிய‌ பாக‌ங்க‌ள் எல்லாம் வ‌ள‌ர‌த் துவ‌ங்குது.
உங்க‌ளில் உண்டாகும் மாற்ற‌ங்க‌ள்:
1 :வ‌யிறு சிறிய‌ அள‌வில் பெருக்க‌த் தொட‌ங்கும்
2 :வாந்தி, த‌லை சுற்ற‌ல் ச‌ற்றே அதிக‌ரிக்கும் (சில‌ருக்கு)
3 :அள‌வுக்கு அதிக‌மாக ப‌சிக்க‌த் துவ‌ங்கும்
இது 10வ‌து மாத‌ம் வ‌ரை தொட‌ரும்
4 :சில வாச‌னைங்க இப்போ புடிக்காது
5 :தூக்க‌ம் ரொம்ப வ‌ரும்
6 :சில‌ருக்கு ச‌ரும‌ம் வ‌ர‌ட்சியா இருக்கும்

நீங்க‌ள் செய்ய‌ வேண்டிய‌வை:
1. அதிக‌ அள‌வு த‌ண்ணீர் குடிக்க‌னும். அது தான் உங்க க‌ர்ப்ப‌ப் பையில் அமினாய்டிக் ஃப்லுயிட் என்னும் திர‌வ‌த்தை சரியான அள‌வு வெச்சிக்க உத‌வும்.உங்க கு‌ழந்தை அதில‌தான் நீந்திக்கிட்டிருக்கும் அது மூல‌மாதான் சுவாசிக்கும்
2.ஃபாலிக் அமில மாத்திரைகள், கால்சியம், இரும்புச்சத்து, பி'வைட்டமின் மாத்திரைகள் எல்லாம் உங்க மருத்துவருடைய ஆலோசனைப்படி எடுத்துக்கனும். நீங்களா எந்த மாத்திரைகளையும் எடுத்துக்கக் கூடவே கூடாது.
3.கீரை, பழங்கள், காய்கள் எல்லாம் போன தடவ சொன்ன மாறியே சாப்பிடனும்.
4.காலி ஃப்லவர், முள்ளங்கி, முட்டை,ஈரல், வெண்ணெய், நல்லெண்ணெய், தயிர், அதிக அளவு பால், பாதம் பருப்பு, உலர்ந்த திராட்சை,குங்குமப் பூ, உளுந்து, கொண்டைக் கடலை, துவரை இதெல்லாம் உங்க தினசரி உணவுல இருக்கனும்.
5.உப்பு, காரம் குறைக்கனும்.
6.உடல் சூடு அடையாம பாத்துக்கனும்.
7.பழக்கமில்லாதவங்க அதிக எடை சுமக்கக் கூடாது.
8.உயர்ந்த காலணி, இறுக்கமான ஆடைகள், ஜங்க் ஃபுட் எல்லாத்துக்கும் டாடா சொல்லிடுங்க.
9.அரை ம‌ணி நேர‌த்துக்கு மேல பேருந்து ப‌ய‌ண‌ம் கூட‌வே கூடாது.
10. ந‌ல்லாத் தூங்க‌னும்.
11. 2மணி நேர‌த்துக்கு ஒரு த‌ர‌ம் சாப்பிட‌னும் இடையிடையே பழ‌ங்க‌ள அப்டியே இல்ல‌னா ஜூஸா குடிக்க‌லாம்.
இனி அடுத்த‌ மாத‌ம் பார்ப்போம்।

"கர்ப்பிணிகளுக்கான குறிப்புகள் ( நான்கு, ஐந்து மாதங்கள்)"

June 9, 2008

குட்டி இளவரசிக்கு என்ன ஆச்சு १ : 1(கற்பனைக் கதை குழந்தைகளுக்காக...)

ரொம்ப வருடங்களுக்கு முன்னாடி நம்ப இந்திய நாட்டுல நல்லபுரம் அப்டினு ஒரு ஊர் இருந்துச்சு... அந்த ஊர ராஜா ஒருத்தர் ஆண்டுக்கிட்டு இருந்தாரு. அந்த ராஜாவுக்கு யாரும் பொய் சொன்னா புடிக்கவே புடிக்காது.அவருக்கு ரெண்டு இளவரசிகள். ரெண்டு பேரையும் அவருக்கு ரொம்ப புடிக்கும். அவங்களுக்கும் அப்பானா உயிரு. ஆனா... பெரிய இளவரசிக்கு எப்பவுமே சின்ன இளவரசி மேல பொறாமை. ஏனா சின்னவ பெரியவள விட ரொம்ப அறிவாளி, அழாகானவ, எல்லா கலைகளிலும் திறமைசாலி. ஒரு நாள் அந்த ராஜாவுக்கு ரொம்ப உடம்பு சரியில்லாம போகவும் அவரு தன்னோட ரெண்டு மகள்களில் ஒருத்திய இந்த நாட்டுக்கு ராணியாக்கனும்னு முடிவு செஞ்சாரு.ஆனா அவங்கள்ல யாரு ராணியாகுற அளவுக்கு திறமைசாலினு நிரூபிக்கிராங்களோ அவங்க தான் ராணியக முடுயும்னு சொன்னாரு.
சின்னவளோ அக்காவே ராணியா இருக்கட்டும் அப்டினு சொன்னா. ஆனா ராஜா திறமசாலிக்கான போட்டி நடந்தே ஆகனும்னுட்டாரு.
அவரு மூன்று போட்டிகள அறிவிச்சாரு. ஓவியப் போட்டி தான் முதல் போட்டி. ரெண்டு பேரும் ஊருக்குள்லள போயி அவங்க பாத்தத பத்தி படமா வரையனும்.
ரெண்டு பேரும் ஆளுக்கு ஒரு குதிரைல புறப்பட்டாங்க. ரெண்டு பேரும் வேற வேற திசைகள்ல போனங்க.
பெரியவ சந்தைக்கடை வேதிக்கு போனா. ஏனா அவளுக்கு புதிய நகைகங்க, துணிக, அழகு படுத்திக்கும் பொருள்கள்னா ரொம்ப ஆசை. அவ அதையெல்லாம் பாத்து வரையலாம்னு அங்க போனா.அதிலுள்ள நுணுக்கமான வேலைபாடுகள நம்ம படத்துல வரயலாம்கிறது அவளோட திட்டம். அப்டி வரைந்தா தான் ரொம்ப திறமையா வரையுறதா அப்பா நினைப்பாருனு அவ அப்டி செஞ்சா.‌
ஆனா சின்னவ எங்க போனா தெரியுமா??!!! அங்க அவளுக்கு என்ன ஆச்சுனு தெரியுமா?

June 6, 2008

கர்ப்பிணிகளுக்கான குறிப்புகள்:(30தாவது நாள் முதல் 60ஆம் நாள் வரை)

முத‌லில் என்னுடைய‌ வாழ்த்துக்க‌ள்!:)

நீங்கள் தாய்மை அடந்துள்ளீர்கள் என்பதை அறிய 5முதல் 7 வாரங்கள் வரை ஆகலாம்.இது தங்களுடைய மாத்விலக்கு சுழற்சியினைப் பொறுத்தது. அந்த மகிழ்ச்சியான செய்தியினை அரிந்ததும் நீங்க முதல்ல செய்ய வேண்டியது உங்களுக்கான நம்பிக்கை.
ஆமாங்க தன்னம்பிக்கையும் எதையும் தாங்கும் இதயமும் இல்லாம ஆரோக்கியமான தாய்மை அப்டிங்கிறது இல்லை.
மருத்துவ ரீதியா நீங்க செய்ய வேண்டியதெல்லாம் சரியா முறைப்படி செய்ய ஆரம்பிச்சுருப்பீங்க. மன ரீதியா நீங்க செய்ய வேண்டியது இதுதாங்க...
1.மனச மகிழ்ச்சியா வெச்சிக்கனும்
2।அதிகமா எதுக்கும் ஆசைப் படாதீங்க எதிர்பாக்காதீங்க ஒருவேளை உங்க வீட்டுல உள்ளவங்களுக்கு அதை நிறைவேற்றி வைக்க நேரம் சூழ்நிலை இல்லாம போகலாம். அது உங்களுக்கு ஏமாற்றத்தையும் வெறுப்பையும் கோபத்தையும் கொடுத்து உங்க எல்லாருடைய மன நிம்மதியையும் கெடுத்துடும்.
3.45வது நாள் குழந்தையை ஸ்கேன் செய்யும் போது உங்க கணவரையும் கூட்டிட்டுப் போங்க. இது அவங்களுக்கும் மகிழ்ச்சியத் தரும். மேலும் உங்கள‌வர் உங்கள நல்லா பாத்துக்க உதவும். அவங்க இல்லாம தாய்மை இல்ல.
4. ம‌ருத்துவ ஆலோச‌னைக்கும் முடிந்த‌வ‌ரை உங்க‌ள‌வ‌ரோட‌ போங்க‌. அவ‌ரோட சூழ்நிலை கார‌ண‌மா வ‌ர‌ல‌னாலும் கோவ‌ப்படாதீங்க.
5.ம‌ற்ற‌ப‌டி ம‌ருத்துவ‌ரோர்ட ஆலோச‌னைக‌ளை த‌வ‌றாம பின்ப‌ற்ற‌னும்.
6.க‌டின‌மான‌ வேலைக‌ளையும் பேருந்து, ஆட்டோ,இரு சக்கர வாகனப் ப‌ய‌ண‌த்தையும் த‌விர்ப்ப‌து ந‌ல்ல‌து. இத‌ உங்க‌ ம‌ருத்துவ‌ரே சொல்லிருப்பாங்க.
7. ந‌ல்லா தியான‌ம் செய்வ‌து ந‌ல்ல‌து. இந்த‌ டிவி சீரிய‌லுக்கும் ஒரு முழுக்கு போட்டுடுங்க‌ உங்க‌ பாப்பாக்காக‌....
8.ப‌ப்பாளி, நாவ‌ல், அன்னாசி போன்ற‌ ப‌ழ‌ங்க‌ள த‌விர்த்து மாதுளை, த‌ர்ப்பூச‌ணி, சாத்துக்குடி, ஆர‌ஞ்சு, செவ்வாழை போன்ற‌ ப‌ழ‌ங்க‌ளையும் கீரை, முட்டை, முட்டை கோசு, வெங்காய‌ம், பூண்டு, கேர‌ட், மாங்காய் போன்ற காய்க‌ளையும் நிறைய‌ சாப்பிடுங்க‌.
9.மாங்காய் வாந்தி, த‌லை சுற்ற‌லுக்கு அரும‌ருந்து.
இந்த‌ மாத‌த்துக்கு இது போதும்। அடுத்த‌ மாதம் சந்திப்போம்.

"கர்ப்பிணிகளுக்கன குறிப்புகள்(3வாது மாதம்)"

June 5, 2008

கர்ப்பிணிகளுக்கான குறிப்புகள்:முன்னுரை

"மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா" என்பதன் பொருளே நமது பொறுமை , அளவு கடந்த தன்னலமற்ற அன்பு, தியாக உள்ளம் என்று பட்டியலை நீட்டிக் கொண்டே போகலாம்।

ஆனால் இவை எல்லாவற்றினையும் விட முக்கியமான காரணம் "மக்கட் பேறு".இறைவனுடைய படைப்பினை நமது வயிற்றில் ஏற்று சுகமான வலியுடன் இவ்வுலகிற்கு பரிசாய் தருவதே ஆகும்.
சரி, நாம் விசயத்திற்கு வருவோம்। நான் இப்பகுதியில் தரவிருக்கும் குறிப்புகள் அனைத்தும் மருத்துவர் ஆலோசனைகள், என் சொந்த அனுபவங்கள் மற்றும் நான் படித்தும் பிறரது அனுபவங்களிலிருந்தும் கேட்டறிந்தவை. பாதகமான எதனையும் நான் கூற மாட்டேன் என உறுதி அளிக்கிறேன்.

"கர்ப்பிணிகளுக்கான குறிப்புகள்(30வது நாள் முதல்)"

June 3, 2008

ஐந்து தலை யானை முட்டைக் கதை (பாகம் 3):முடிவு

பார்த்தா உள்ள யானையோட யானையோட உவ்வே சாணி இருந்துச்சு :):)க‌டைக்கார‌ருக்கு ஒரே கோவ‌ம் இந்த யானைக்கார‌ன் மேல‌. உட‌னே அவர் அவ‌னை ஆன‌யூர் காவ‌லாளிக‌ள் கிட்ட ஏமாத்திக்கார‌ன் அப்டினு க‌ம்ப்ளெயின்ட் ப‌ண்ணி புடிச்சு குடுத்துட்டார் அவ்ளோத‌ன் அந்த யானைக்கார‌ன் ந‌ல்லா மாட்டிக்கிட்டான்.
வ‌ழ‌க்கு ராஜா கிட்ட விசார‌ணைக்கு போச்சு. அந்த‌ ராஜா அவ‌ன்கிட்ட அந்த முட்டை ஏதுனு கேக்க அவ‌ன் அது வ‌ந்த க‌தை ப‌த்தி சொன்னான். ஆனால் ராஜா ரொம்ப புத்திசாலியா அதுனால‌ அவ‌ன் சொன்ன‌த‌ ந‌ம்பல . "ஐந்து த‌லை யானை சாமி கிட்ட‌ ம‌ட்டும் தான் இருக்கும் உன‌க்காக எல்லாம் அது வ‌ராது... நீ பொய் சொல்ற யானை சாணிய உருட்டி வெச்சு ஏமாத்துற " அப்டினு அந்த ராஜா சொன்னார். சாணிய‌ உருட்டி பொய் சொன்ன அவ‌ன் த‌லைய ம‌ண்னுல உருட்டி ம‌ர‌ண‌ தண்ட‌னை குடுக்குறேனு ராஜா சொல்லிட்டார்.
அவ‌னுக்கு என்ன‌ பண்ற‌துனு புரிய‌ல‌... இப்போதான் அவன் ம‌ன‌சுக்கு அவ‌ன் ப‌ண்ணின‌ பாவம் எல்லாம் உரைச்ச‌து. அவ‌ன் சாகப் போற நேர‌த்துல சாமிகிட்ட எப்படியாவ‌து த‌ன்னை காப்பாத்தும்ப‌டியும் தான் இனிமே யானைக‌ளை கொடுமை ப‌டுத்த‌ மாட்டேனும் பேராசைப் ப‌டாம ஒழுங்கா உழைச்சு சாப்டுவேனும் அழுது புர‌ண்டு வேண்டினான்.
சாமி தான் ரொம்ப ந‌ல்ல‌வ‌ராச்சே அவ‌ன் அழுவுற‌த பாத்து சாமி ரொம்ப‌ ஃபீல் பண்ணி அங்க எல்லார் முன்னாடியும் வ‌ந்து அவ‌னை ம‌ன்னிச்சு ந‌ட‌ந்த எல்லாத்தையும் சொன்னாரு. அவ‌னுக்கு ரொம்ப ஜாலியா போச்சு ஏனா எல்லாத்தையும் கேட்ட‌ ராஜா அவ‌னை விடுத‌லை ப‌ண்ணிட்டாரு.
அவ‌ன் சாமிக்கிட்ட த‌ன்னோட‌ 4யானைக‌ள‌யும் த‌ன‌க்கு கொடுக்க‌னும்னும் தான் இனிமே அதுங்க‌ள ந‌ல்ல‌ ப‌டியா பாத்துக்குவேனும் ச‌த்திய‌ம் ப‌ண்ணிக்குடுத்தான்.
உட‌னே சாமி அவ‌னோட யானைக‌ளை அவ‌னிக்கு குடுத்துட்டு போயிட்டாரு. அவ‌னும் தானே உழைச்சி யானைக‌ளுக்கு சாப்பாடு போட்டு யானைகளோட‌ பாசமா ஹேப்பியா வாழ் ஆர‌ம்பிச்சான்.:)

June 2, 2008

என் கண்கள்.......(கவிதை இல்லை கவித மாதிரி)

என் கண்கள்.......

உன்னை சிறை பிடிக்க‌
நான் பெற்ற மாளிகை !!!

உன்னை படம் பிடிக்க‌
நான் பெற்ற கருவி !!!

உன்னை பிரதிபலிக்க
நான் பெற்ற ஆடி !!!

என்னில் உன்னைக் காண
எனக்கான கண்கள் !!!

அவை
நம்
காதல் கதை பேசும்
அசையும் சிற்பங்கள் !!!

ஐந்து தலை யானை முட்டை கதை‍(பாகம் 2 )

இப்ப‌டியே தொடர்ந்து ரொம்ப நாட்களா அந்த யானை நிறைய சாப்பாடு சாப்பிட்டுகிட்டு ஜாலியா அவன் வீட்டுல ராணி மாதிரி இருந்துச்சு.......ஆனால் அந்த யானைக்காரன் யோசிக்க ஆரம்பிச்சான் "என்ன இந்த யானை தங்க முட்டை போடவே மாட்டேங்குதுனு" அவனுக்கு கோவம் வந்துருச்சு.
இது அந்த யானைக்கு தெரிய வந்ததும் அது இதுதான் அவனுக்கு தண்டனை கொடுக்க சரியான சமயம் அப்டினு திட்டம் போட்டுது. அதோட திட்டப் படி அன்னைக்கு மற்ற யானைகளையும் வேலைக்கு போகாம வீட்டுலயே இருக்க சொன்னிச்சு. எல்லா யானைகளும் அந்த கெட்டவனுக்கு பயந்துகிட்டே ஆனால் வீட்டுலயே இருந்துச்சுங்க.
அவன் வந்து பாத்துட்டு எல்லா யானைகளையும் அடிக்க ஆரம்பிச்சான்... அத பாத்து இந்த 5 தலை யானை பயங்கரமா கத்த ஆர்ம்பிச்சுது..... எல்லாரும் பயந்தே போயிட்டாங்க :( அவன் கோவமா வந்து அந்த யானையையும் அடிக்க ஆரம்பிச்சான். அந்த யானை அவன வேகமா தூக்கி வெச்சிக்கிட்டு அவன் கிட்ட பள பளனு ஜொலிக்கிற ஒரு தங்க முட்டைய காண்பிச்சுது. அவன் பேராசை கண்கள அகலமா விரிச்சு அந்த தங்க முட்டையையே பாத்துக்கிட்டுருந்தான்......
அப்போ அந்த யானை சொன்னுச்சு "டேய் நீ எவ்ளோ பெரிய கொடுமைக் காரன் அப்டினு எனக்கு தெரியும் நீ இனிமே ஒழுங்கா இந்த யானைகளை விடுதலை செய்யனும் அப்பதான் உனக்கு இந்த முட்டை " .
அவனும் தங்க முட்டை மேல இருந்த பேராசைல இந்த 4 யானைகளையும் விடுதலை செய்ய ஒத்துக்கிட்டான். சரியான முட்டாள் :)
எல்லா யானைகளும் ரொம்ப ஹேப்பியா அவன்கிட்ட இருந்து தப்பிச்சா போதும்னு சாமி யானை கூட வந்துருச்சுங்க. அவன் அந்த முட்டைய கடைத்தெருவுக்கு விற்பதற்காக எடுத்துக்கிட்டு போனான். கடைக்காரன்கிட்ட அதிக விலை பேசி அதை விக்க குடுத்தான். கடைக் காரன் அந்த முட்டைய எடை போட்டா அது ரொம்ப குறைவா காண்பிச்சுது... கடைக்காரனுக்கு சந்தேகம் வந்துருச்சு... உடனே அவர் அந்த முட்டைய உடைச்சு பார்த்தார்...... பார்தா....!!!!!!!