May 30, 2008

ஐந்து தலை யானை முட்டைக் கதை‍(பாகம்1)

ஒரு காலத்துல (இப்டிதானே கதை சொல்ல ஆரம்பிக்கனும்) ஆனையூர் அப்டினு ஒரு ஊர் இருந்துச்சு. அங்க ஒரு யானைக்காரன் வாழ்ந்துட்டு இருந்தான் அவன் நான்கு யானைகள வளத்துட்டு இருந்தான். அவன் ரொம்ப பேராசை புடிச்சவனா இருந்தானா...அதனால அவனோட யானைகள ரொம்ப கொடுமை படுத்தினான்.
தினமும் நாலு யானைகளும் அந்த ஊர்ல உள்ள எல்லா வீதிகளுக்கும் வித்தை காட்டி காசு சம்பாதிக்க போகனும். அந்த நாலு யானைகளில் ஒன்னு குட்டி யானை , ஒன்னு அம்மா யானை।அந்த குட்டி யானையும் வித்தைக்கு போயாகனும்।பாவம்...:(
அந்த அம்மா யானை தினமும் குட்டி யானை வித்தை காட்ட வெயிலில் அலயுறத பாத்து ரொம்ப கவலைப்படும்।(ஏனா அப்றம் குட்டி கருத்துப் போயிடும்ல !!!:)
அந்த யானைக்காரன் பேராசை புடுச்சவன்றதால அதுங்க சம்பாதிச்சுக் கொண்டுவர எல்லாக் காசையும் புடுங்கிக்கிட்டு அதுகளுக்கு சரியா சாப்பாடு போட கூட மாட்டான். நிறையா காசு கொண்டு வரலைனா ரொம்ப அடிப்பான். பாவம் அந்த யானைங்க தினமும் அரை வயிறு சாப்டுட்டு வெயிலுல வித்தைக் காட்ட போகுங்க:(
ஒரு நாள் அம்மா யானை வித்தைக் காட்ட போற வழியில ஒரு பிள்ளையார் கோயில பாத்துச்சா... உடனே உள்ள போயி சாமிகிட்ட கண்ணீர் விட்டு அழுதுட்டே யானைக்காரன் பண்ணுற கொடுமையெல்லாம் சொல்லுச்சாம்। அதையெல்லாம் கேட்ட சாமி உடனே கோவமா எழுந்துரிச்சு சாமியோட 5 தலை யானைய வானத்துல இருந்து கூப்டு அது காதுல நெறைய சொன்னாராம்
இப்போ 5 தலை யானையும் அம்மா யானை கூட யானைக்காரன் வீட்டுக்கு வந்துச்சாம் அத பார்த்த யானைக்காரனுக்கு ஒரே ஆச்சரியம்!!! 5 தலை வெச்ச யானை கூட இருக்குமானு ஆச்சரியம் உடனே அவனோட பேராசை புத்தி இந்த யானைய மக்கள்கிட்ட காண்பிச்சே நெறைய காசு வாங்களாம்னு யோசனை பண்ணுச்சாம். இத தெரிஞ்சிகிட்ட 5 தலை யானை அவன்கிட்ட தான் ஒரு தங்க முட்டை போட போறதாகவும் அத பாதுகாப்பா வைக்கவே அவன் வீட்டுக்கு வந்துருக்கதாவும் சொன்னுச்சு. உடனே அவனுக்கு சந்தோசம் தாங்க முடியல. எப்டியாவது அந்த தங்க முட்டைய தான் எடுத்துக்கனும்னு நெனைச்சான்.
அந்த யானையும் அவன் வீட்டுல ஓ।சி। ல தங்க ஆரம்பிச்சுது। நிறய சாப்டும் , தூங்கும் ஆனா வேலை எதுவுனம் செய்யாது.அவனும் அது இன்னைக்கு முட்டை போடும் நாளைக்கு முட்டை போடும்னு அதை ரொம்ப செல்லமா பாத்துக்கிட்டான்.

May 7, 2008

அறிமுகப் ப‌திவு த‌மிழ்ம‌ண‌த்துக்காக!(அபாய எச்ச‌ரிக்கை!!!)

இத‌னால ம‌க்கள் எல்லாருக்கும் அறிவிக்கிற‌து என்ன‌னா.........கடந்த 2வ‌ருட‌ங்க‌ளாக அனைவ‌ருடைய ப‌திவுகளையும் படித்து ம‌ட்டுமே வந்த‌ நான் இப்போ " நானும் ப‌திவு போடுறேன் " அப்டினுட்டு உங்க எல்லாரையும் கொடுமை ப‌டுத்த வ‌ந்துட்டேன்!!!
நீங்க எல்லாரும் என்னை வாழ்த்தி வ‌ர‌வேற்பீங்க அப்டினு நம்புறேன்!!!
ந‌ன்றி.... வ‌ண‌க்க‌ம்!!!!!!!

பிஞ்சுக்கு நஞ்சை ஏற்றும் தடுப்பூசி:(

சொல்ல முடியாத அளவுக்கு துக்கம் தரும் செய்தி இது.தமிழக மருத்துவமனைகள் தூங்குதா இல்ல மருத்துவ ஊழியர்கள் தூங்குறாங்களாஇல்ல இந்த நன்றி கெட்ட அரசாங்கம் தூங்குதானு தெரியல:(
குழந்தைங்க பெரியவங்களா ஆனதும் கடைசி வரை வாழ்க்கைல எந்த நோய் தாக்குதலும் வராம இருக்கதானே இந்தத் தடுப்பூசியெல்லாம் போடுறோம் அதை கூட விஷமாக்கி கொலை பண்ற இந்த கொலைகார கூட்டத்தை ஈவு இரக்கம் இல்லாத கல் நெஞ்சக் கும்பலை என்ன பண்றதுனு பொது மக்களான நாம தான் முடிவு பண்ணனும்.
ஏறக்குறைய 10 மொட்டுக்கள் இந்த உலகத்துக்கு வந்த வேகத்துலயே திரும்பப் போயிட்டாங்க:( இது அவங்க குடும்பத்துக்கு எவ்வளவு பெரிய இழப்பு? இவனுங்க தர நிவாரண நிதி அந்த பிஞ்சு முகங்களுக்கு முன்னாடி தூ... பிச்சை காசு! பத்து மாசம் பல கஷ்டத்தையும் தாங்கி அந்த உயிர சுமந்த தாய்க்கு தான் அந்த இழப்போட வலி தெரியும்.
ஆனால் அரசாங்கம் இது வரை இந்த விஷயத்துல எந்த நடவடிக்கையும் எடுக்காம இருக்குறது எதுக்குனு புரியலை:( மருந்து காலாவதியானதுனா அத தூக்கியெறியாம மேலும் மேலும் குழந்தைங்கள தூக்கியெறியுறது ஏன்?
நோய் தடுக்கும் ஊசியே உயிரக் குடிக்குறது எவ்வளவு கொடுமை?