November 28, 2008

செல்லக்குட்டிக் கண்ணு அம்மாடி பாட்டு :) அது எங்க பாட்டு :)

செல்லக்குட்டிக் கண்ணு அம்மாடி....
கண்ணுக்குட்டிப் பட்டு அம்மாடி....
பட்டுக்குட்டி சிட்டு அம்மாடி.....
சிட்டுக்குட்டி தங்க அம்மாடி...
தங்கக்குட்டி வைர அம்மாடி.....
வைரக்குட்டி பவள அம்மாடி....
பவளக்குட்டி கண்ணு அம்மாடி....
இப்படியாக நீளும் இப்பாடல் பொழிலனுக்கு மிகவும் பிடித்தப் பாடல்....
இப்பாடலின் ஆசிரியர்..... வேற யாரு நாமதான்.... :)
என் வாய்க்கு வந்த கொஞ்சும் வார்த்தைகள் அத்தணையும் போட்டு சிரிச்சிட்டே பாடினா நான் பேசினாலே வாய் விட்டு சிரிக்கும் பொழில் குட்டி இதுக்கு சத்தம் பொட்டு ஒரே மகிழ்ச்சியா சிரிப்பாரு....:)
அதைவிட கண்கொள்ளாக் காட்சி வேறு என்ன? அதனால் நான் அடிக்கடி இதை பாடிட்டே இருப்பேன் :)

November 27, 2008

சிரி... சிரி சிரி சிரி சிரி....சிரி.....




என்ன தலைப்புனு படங்கள பார்த்ததும் உங்களுக்கு புரிந்திருக்குமே!!!!
எங்க பொழிலன் எப்பவுமே சிரிச்ச முகமாதான் இருப்பான்...
அதுவும் யாராவது அவனிடம் பேசினால் போதும் அவர்களை ந‌ன்கு கவனிப்பான்.... இது மிகவும் ந‌ல்லப் பழக்கம் என்றே எனக்குத் தோன்றுகிறது
"குறைவாகப் பேசு அதிகம் கேள்" என்ற பொன்மொழியை ந‌ன்கு புரிந்து வைத்துள்ளான்
************************************************************************************
அவனுக்குத் தெரிந்த முகம் என்றால் பார்த்ததுமே வருமே ஒரு சிரிப்பு... அப்பப்பா.... இப்போதெல்லாம் சத்தம் போட்டு சிரிக்கக் கற்றுக் கொண்டிருக்கிறான்
************************************************************************************
நாங்கள் கதை கூறும்போது காட்சிக்குத் தகுந்த ந‌ம் முக பாவனையை ஓரளவிற்குப் பின்பற்றி அவனும் செய்வதைப் பார்க்கும் போது என் செல்லக்குட்டி வளருகிறான் என்று மகிழ்ச்சியாக உள்ளது
************************************************************************************
அவனிடம் நான் பேசினாலே போதும் கொஞ்சம் இடைவெளி விட்டாலும் "ம்ம்" என்று பதில் கூறிக் கொண்டே வருபவன் "ம்ம்ம்" என்று வேகமாகக் கூறுவது அடுத்து என்ன என்று கேட்பது போல் இருக்கும்.
************************************************************************************
வயிற்றினுள் அவன் இருந்த போது நான் எப்போதெல்லாம் சிரிப்பேனோ அப்போதெல்லாம் அவனும் குதித்து அவனுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்துவான் இப்போது அவனே தன்னிச்சையாக மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது ஒரு அம்மாவாக எனக்கு அளவிலா மகிழ்ச்சி :)
இது எல்லா அம்மாக்களுக்குமே உள்ள உணர்வல்லவா!!!!
************************************************************************************

November 12, 2008

கொலைகாரன்கள் தப்ப உதவும் விஜய் டிவிக்கு கண்டனம்

இந்த வாரம் செவ்வாய் கிழமை இரவு விஜய் டிவியின் "குற்றம் நடந்தது என்ன" நிகழ்ச்சியில் ஒரு கொலையை செய்து விட்டு தடயவியல் துறையின் புலனாய்விலிருந்து தப்பிப்பது எப்படி என்று வகுப்பெடுத்தார்கள்...
என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? ஆமாம்... ஜூகுனு என்னும் கோர மிருகம் பணத்துக்காக 2வயது ஆண் குழந்தையை அடித்தேக் கொன்று இரயில் தண்டவாளத்தில் வீசியிருக்கிறான்.
அந்த மிருகம் எப்படியெல்லாம் தப்பித்தான் என்று விளக்கினார் கோபி அதோடு விட்டிருந்தால் பரவாயில்லை அந்த கொலைகாரனின் கைப்பேசி எண்ணைக் கொண்டு அவனை காவல்துறை பின் தொடர்ந்ததையும் அவன் அதை அறிந்து வேறு எண் மாற்றினாலும் அவன் எப்படி காவல்துறையினரால் பின் தொடரப்பட்டு பிடிபட்டான் என்பதையும் "தெளிவாக" விளக்கினார்கள்.
அதாவது... " அவன் கொலை செய்ததும் தன்னை காவலர்கள் அடையாளம் காணாதபடி மொட்டையடித்து, சவரம் செய்து தனது தோற்றத்தை மாற்றியுள்ளான் பின் அவன் கேரளாவிற்குத் தப்பிச் சென்றுள்ளான் அங்கிருந்து தனது பாசமிகு தந்தைக்கும், தோழனுக்கும் கைப்பேசி மூலம் தினமும் பேசவேண்டியது இதை மோப்பம் பிடித்த காவல்துறை அவனது கைப்பேசி எண்ணைக் கொண்டு அவன் இருக்கும் இடத்தை தெளிவாகக் கண்டுபிடித்தனர் ஆனால் இங்கு காவல்துறையின் செயல்பாடுகளை அவனது தோழன் அவனுக்கு அறிவித்து வர அந்த மிருகம் கேரளாவிலிருந்து வேறு கைப்பேசி எண் மாற்றிக் கொண்டு தப்பித்துவிட்டான் ஆனால் அவனது கைப்பேசியில் உள்ள அந்த கைப்பேசி சாதனத்தின் உருவாக்கத்தின் போது அதற்கு அளிக்கப்படும் எண்ணைக் கொண்டு அந்த கைப்பேசி இருக்குமிடத்தைத் தெளிவகக் கண்டுபிடிக்கும் உத்தியைக் கொண்டு அவன் இருக்குமிடத்தை அறிந்து காவலர்கள் அங்கு மாறுவேடத்தில் சென்றுள்ளனர் இதற்கிடையே இங்கு அவனது தந்தையையும் தோழனையும் பிடித்துவிட்டனர் அவர்கள் மூலம் அவனை ஓரிடத்திற்கு வரவழைத்து காவலர்கள் கையும் களவுமாக சுற்றி வளைத்துப் பிடித்தனர்.

இதில் இந்த விளக்கம் போதாதென்று கைப்பேசி எண்ணைக் கொண்டு எவ்வாறு ஒரு குற்றவாளியைக் கண்டுபிடிக்க முடியும் என்று புலனாய்வு துறையினர் மற்றும் கைப்பேசி சேவைத் து்றையினரின் அறிவியல் ரீதியான விளக்கம் வேறு அது தான் பிரச்சினையே

இப்படி எல்லாவற்றையும் தெளிவாக விளக்கினால் அதனைப் பார்க்கும் குற்றவாளிகள் இனி இந்த யுத்திகளை தவிர்த்து வேறு விதமாகத் தப்பிக்கும் முயற்ச்சியில் ஈடுபடுவார்கள் இது மேலும் குற்றவாளிகளைத் தப்பிக்க உதவும் ஒரு விளக்கமே....


இதனால் ஏற்படும் குற்றங்களுக்கும், இழப்புகளுக்கும் சேனல்
பொறுப்பேற்குமா?

இந்த குற்றவாளிகளைத் தப்பிக்க உதவும் கொடூர செயலும்
சட்டப்படிக் குற்றமே!

இதற்கு அந்த சேனல் என்ன பதில் கூறும்?
மக்களுக்கு உதவி செய்வதாக எண்ணி அறிந்தோ அறியாமலோ தீய
செயல்களுக்கு துணை போகும் இந்தச் செயலுக்கு மக்களின் பதில்
என்ன?

இதில் விளக்கம் தருகிறோம் என்று குற்றவாளிகளைக்
கண்டறியும் யுத்திகளை விளக்கி இரகசியம் காக்கத்தவறிய காவல்
துறையினரை என்ன சொல்வது?

இந்தக் கேள்விகளை எல்லா மக்கள் முன்னிலையிலும் கேட்க
இயலாததால் இப்படி பதிவின் மூலமாவது மக்களுக்கு போய் சேரட்டும்
என்று என் ஆத்திரத்தைப் பதிவிடுகிறேன்।

November 5, 2008

ங்கா...ங்கா....ம்ம்மா...அம்மா...

இது என்ன தலைப்புனு யோசிக்கிறீங்களா? (இல்லைனாலும் பரவால)
இப்படி தான் எங்க பொழில் குட்டி அழுகிறார்..... :)
சீக்கிரமே அவரும் பதிவு எழுத வருவாருனு என் கணவர் சொல்லிருக்காங்க.... :) அவருக்கு இப்போ 4மாதங்கள் ஆகிறது , ஆனால் பிறந்த இருவாரங்களிலேயே "அம்மா"னு சொல்லி அழுதாறே பாக்கனும் எங்க எல்லாருக்குமே ஆச்சரியம்।
என் பிறவியே அவருக்காகதானு தோணிச்சு...
அப்பப்பா அவரோட தெளிவான "அம்மா" உச்சரிப்பும், அழகான பொக்கை வாய் சிரிப்பும் என்ன மயக்கிடும்...:)

பொழிலன் பிறந்தாச்சு!!! டும்..டும்..டும்..டும்!!!

எங்களுக்கு ஒரு அழகான ஆண் குழ்ந்தை பிறந்த சேதி உங்களுக்கு அருட்பெருங்கோ அண்ணா மூலமா தெரியும்தானே??!!

அவருக்கு "பொழிலன்" அப்படினு பெயர் வேச்சிட்டோம் :)
எப்படி பெயர்? உங்கள் கருத்துக்களை பின்னூட்டமிடுங்கள்....

அவர் இப்போ 4மாத குழந்தை:)
பின் குறிப்பு: எனக்கும் சிசேரியன் :(