September 10, 2009

காதல்... அமுதோ நஞ்சோ?


மாய வலையில்

சிக்கி தேடினேன்

வலையே நீயாக

சிக்கியதோ உன்னில்

தேடியதோ என்னை

கிடைத்ததோ காதல்


ஏனோ கசக்கிறது

அன்று இனித்தவை

ஏனோ இனிக்கிறது

உன்னை நினைக்கையில்

யாரோ நீ யாரோ

என்னில் ஏனோ

வந்தே புகுந்தாய்


நொடிகள் தோறும்

இம்சை ஏனோ

காதல்

இது நஞ்சோ??

நொடிகள் தோறும்

இனிமை ஏனோ

காதல்

இது அமுதோ??


கன்னம் சிவக்க

இதயம் வலிக்க

கண்கள் பேச

தனியே சிரிக்க

இரவோ நீள

விடியல் தேடி

உன்னைக் காண

நானோ காத்திருக்க

ஏனோ மாற்றம்

உன்னால் தானோ!!!!!!!!

பின் குறிப்பு:
கவிதை போன்றும் அல்லாமலும் வந்த இந்த கவுஜக்கு கவிஞர்கள் மற்றும் கவிதாயினிகள் மன்னிக்கவும் :(







September 2, 2009

காத்திருத்தல்!





உனக்கான
என் நினைவுகள்...
நமக்கான
என் காதல்....
காத்திருக்கின்றன
உன் வரவுக்காக....
என்னோடும்
உனக்கான
என் முத்தங்களோடும்.....!

முத்திரை!!!



கண்களால் சிறைபிடித்து
கைகளால் அணைத்து
என் கூந்தலில்
உன் உயிரைக் கட்டி
ஊசலாடுபவனே...
நித்தம்
உன் முத்தம்
என் மீது
உன் முத்திரை
நான் உன்னவள் என்று!