March 31, 2009

சிங்கமும், எலியும் எப்படி நண்பர்களானாங்க.?

ஒரு ஊரில் ஒரு பெரிய காடு இருந்துச்சாம்... அந்த காட்டுல நிறையா பிராணிகள் இருந்தாங்களா... அவங்களுக்கெல்லாம் சிங்கம் தான் ராஜாவா இருந்தது!

ஒரு நாள் அந்த சிங்கராஜா அதோட குகைவீட்டு வாசலுல சாப்பிட்டுட்டு படுத்து தூங்கிக்கிட்டு இருந்ததா! நல்ல "கர்ர்ர்ர்ர்....கர்ர்ர்ர்ர்"னு குறட்டை விட்டு தூங்கிக்கிட்டு இருந்துச்சு.
அப்போ அந்த வழியா ஒரு எலி ஜாலியா "லா...ல ல லா...... லா.... ல... ல...லா..."னு பாடிக்கிட்டே குட்டி குட்டி பாறைகள் மேல எல்லாம் சருக்கி விளையாடிக்கிட்டே வந்தது!

அப்படி வரும் போது அந்த சிங்கம் உடம்பையும் பாறைனு நினைத்து சரியா கவனிக்காம அது மேல ஏறி சருக்கி விளையாடுச்சு! "ஹையா இந்த பாறை ரொம்ப நல்லா இருக்கேனு சொல்லிக்கிட்டே சிங்கம் முகத்துக்கிட்ட வந்ததா? அவ்ளோதான்... அது சிங்கத்த பாத்துருச்சு :) உடனே " ஆ... ஐயோ... சிங்கராஜா!" அப்படினுட்டே ஓட பார்த்துச்சா... ஆனால் அதுக்குள்ள சிங்கராஜா முழிச்சுருச்சு :( " யாரது நான் தூங்கும் போது என்னை எழுப்பி தொல்லை பண்ணினது"னு கேட்டுக்கிட்டே திரும்பி பாத்துச்சா... அங்க அந்த எலி பாவம் போல நின்னுக்கிட்டு இருந்துச்சு... " ம்ம்ம்... சிங்க ராஜா... என்னை மன்னிச்சுடுங்க!" அப்படினு எலி சொன்னுச்சு..

அதுக்கு அந்த சிங்கம் " என்ன... நீயா என்னை எழுப்பின... இப்ப உன்னை என்ன பண்றேனு பாரு..." அப்படினு சொல்லி அந்த எலிய கையாள புடிச்சு வாய்க்குள்ள போட போச்சா...
அப்போ அந்த எலி " ராஜா! ராஜா! நான் சொல்றத கேளுங்க... ப்ளீஸ்... நான் தெரியாம இப்படி பண்ணிட்டேன்... இனிமே பண்ணவே மாட்டேன்... நீங்க என்னை விடுவிச்சீங்கனா அதுக்கு பதிலா நான் என்னைக்காவது நீங்க இந்த மாதிரி ஆபத்துல இருக்கும் போது நான் கண்டிப்பா உதவி செய்யுறேன்" அப்படினு சொன்னுச்சு. அதுக்கு சிங்கம் என்ன சொன்னுச்சுனு தெரியுமா?

"ஹா!ஹா!ஹா!ஹா! நீ ஒரு குட்டி எலி! நீ போயி எனக்கு உதவி செய்யப் போறீயா... நல்லா சிரிப்பு வருத்! சரி பரவால பொழைச்சு போ... இனிமே இப்படி பண்ணாதே" அப்படினு சொல்லி அந்த எலிய விட்டுருச்சா... எலி உடனே ஹப்பாடா... தப்பிச்சோம்னு ஓடியே போய்டுச்சு... :)

அப்புறமா கொஞ்ச நாள் கழிச்சு ஒரு நாள் அந்த காட்டுக்கு வேட்டைக்காரவங்களாம் அந்த சிங்க ராஜாவ புடிச்சிக்கிட்டு போக வந்தாங்களா... அப்போ அவங்க அங்க தரைல ஒரு பெரி..ய.... வலைய விரிச்சு வைச்சு அந்த சிங்கம் வரதுக்காக காத்துக்கிட்டு இருந்தங்களா... அப்போ அந்த சிங்கராஜாவும் அந்த வழியா வந்துச்சு... :) வந்து சரியா அந்த வலைல மாட்டிக்கிச்சு... அச்சுச்சோ... பாவம்ல... உடனே அந்த வேட்டைக்காரன்க சாப்பிட்டுட்டு வந்து இந்த சிங்கத்த தூக்கிக்கிட்டு போகலாம்னு சொல்லிட்டு அவங்க எல்லாரும் சாப்பிட போயிட்டாங்க.

அந்த சிங்கம் இல்ல... அது... பயங்கரமா அழுதுச்சு... "என்னை யாராவது வந்து காப்பாத்துங்கலேன்" அப்படினு கத்துச்சு. அப்போ அந்த வழியா அந்த எலி இல்ல எலி அது வந்துச்சு... அது சிங்கம் வலைல மாட்டிக்கிட்டு அழுவுறத பாத்துட்டு " ஆ! சிங்க ராஜா! நீங்களா?" அப்படினுட்டு வேகமா ஓடி வந்துச்சு... வந்து " நீங்க கவலைப் பாடாதீங்க ராஜா! நான் உங்கள இந்த வலைல இருந்து வெளிய கூட்டிட்டு வரேன் " அப்படினு சொல்லி வேகமா அந்த வலை முழுசையும் கடிச்சே பிய்த்து சிங்க ராஜாவ காப்பாத்திடுச்சு! :)

அப்போ அந்த சிங்கராஜா சொன்னுச்சு " என்னை மன்னிச்சுக்கோ எலி, நான் உன்னை கேவலமா சிறு பிராணிதானேனு நினைச்சுட்டேன்... ஆனால் நீ எனக்கு எவ்வளவு பெரிய உதவி செய்துருக்கே! நான் யாரையும் இனி உருவத்த வைச்சு தவறா எண்ணமாட்டேன் " அப்படினுச்சு!
உடனே ரெண்டு பேரும் ரொம்ப ஃப்ரண்ட்ஸ் ஆகிட்டாங்க! :)

நீதி:

சிறு துறும்பானாலும் பல் குத்த உதவும்

இதை குழந்தைக்கு 1வயதில் அதற்குப் புரியும்படி கூறினால் புரியும். பழமொழிகளை இப்படியே கதைகள் மூலம் பழக்கப்படுத்திவிடலாம் :)

3 comments:

ஆகாய நதி said...

இந்தக் கதை ரொம்ப மொக்கை ஆகிடுச்சோ! :)

சந்தனமுல்லை said...

ஆகா..எப்படிங்க..பொழில் அதுக்குள்ள சிங்கம் கதையெல்லாம் கேக்கறாரா! கூல்!

ஆகாய நதி said...

ஆமாங்க! :) நன்றி தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் :)