September 2, 2009

முத்திரை!!!



கண்களால் சிறைபிடித்து
கைகளால் அணைத்து
என் கூந்தலில்
உன் உயிரைக் கட்டி
ஊசலாடுபவனே...
நித்தம்
உன் முத்தம்
என் மீது
உன் முத்திரை
நான் உன்னவள் என்று!