March 24, 2011

தாமதமான வாழ்த்தும் மன்னிப்பும்!!!

ம‌களிர் தினத்தினை ஒட்டி எழுத வேண்டிய பதிவு மிக மிக தாமதமாக எழுதுவதற்கு முதலில் மன்னித்துவிடுங்கள்....

மகளிர் தினத்திற்கு எப்படி வாழ்த்து சொல்வது என்று தெரியவில்லை.... எதற்காக வாழ்த்த வேண்டும் என்றும் தெரியவில்லை.... பெண் குழந்தையாகப் பிறந்து பெண்ணா என்ற கேள்வி இன்றி இன்று இந்த அளவிற்கு வளர்ந்திருப்பதற்கு வாழ்த்துவதா? அதற்கு பெற்றவர்களுக்கு நன்றி உரித்தாகட்டும்....


பெண்களின் பிரச்சனைகள அலசவும், ஆராயவும், அதில் சிக்கிக்கொள்ளவும் பின் வெளிவரவும் திறமை இருப்பதாலா? அதற்கு கடவுளுக்கு நன்றி!!!


இதைப் பற்றி பொதுவில் பேசும் உரிமை இருப்பதாலா? அதற்கு இந்திய பேச்சுரிமை, எழுத்துரிமை சட்டத்திற்கு நன்றி உரித்தாகும்.... அதையும் கடந்து பெண்கள் வாய் திறக்க முடியாதவாறு இன்றும் அடக்கி ஆளும் ஒரு சில ஆண்கள் இருக்கும் இந்த சமுதாயத்தில் எனக்கு கிடைத்திருக்கும் தனிப்பட்ட உரிமைக்கு என் கணவருக்கு நன்றி உரித்தாகட்டும்....


அம்மாடி... போதும்.... பின்னே வேறு என்ன சொல்வது.... இன்றும் ஒரு புறம் வாய் திறவாத பெண்கள்... ஒரு புறம் வாய் திறக்க இயலாத பெண்கள்.... ஒரு புறம் திறந்த வாய் மூடாத பெண்கள்!!!!

(சரி இதில் நான் எந்த வகை? ஏய் மனசாட்சி வாயை மூடு )


பெண்க‌ளின் அசுர‌ வேக வ‌ள‌ர்ச்சியைப் ப‌ற்றி நான் எழுதிதான் நீங்க‌ள் தெரிந்து கொள்ள‌ வேண்டும் என்றில்லை.... இது அனைவ‌ருக்கும் தெரிந்த‌தே.... அத‌னால் எப்போது முன்னேறிக் கொண்டே இருக்கும் ந‌ம‌க்கும் என்றும் என்றென்றும் என‌து வாழ்த்துக்க‌ள்!!!!





பின்குறிப்பு:

அமெரிக்கா வ‌ந்து மூன்று மாத‌ங்க‌ளுக்குப் பிற‌கு வீடு தேடி குடி வ‌ந்து வீட்டினை ஒழுங்கு ப‌டுத்தி அப்ப‌ப்பா... ப‌ல‌ வேலைக‌ளுக்கு ந‌டுவில் அனானி ஒருவ‌ரின் வேண்டுகோளுக்கிண‌ங்க‌ இந்த‌ப் ப‌திவு ஒரு அவ‌ச‌ர‌ ப‌திவு...  அத‌னாலேயே ச‌ரியான‌ நேர‌த்தில் வாழ்த்த‌ இய‌லாம‌ல் போன‌து அத‌ற்கு ம‌ன்னிக்க‌வும்.... எப்போதுமே ந‌ம‌க்கு ந‌ம் வாழ்த்துக்க‌ள்.....

ப‌திவும் அங்கு தொட்டு இங்கு தொட்டு ஒருவாறாக‌ எழுதியிருக்கிறேன்.... :( நிறைய‌ எழுத‌ வேண்டிய‌ விஷ‌ய‌ம்.... ஆனால் நேர‌ம் போத‌வில்லை.... :((
த‌ய‌வுசெய்து என்னை ம‌ன்னிக்கவும்..... அடுத்த‌ ப‌திவு நிச்ச‌ய‌ம் சுவார‌சிய‌ ப‌திவாக‌ இருக்கும்....



No comments: