May 7, 2008

பிஞ்சுக்கு நஞ்சை ஏற்றும் தடுப்பூசி:(

சொல்ல முடியாத அளவுக்கு துக்கம் தரும் செய்தி இது.தமிழக மருத்துவமனைகள் தூங்குதா இல்ல மருத்துவ ஊழியர்கள் தூங்குறாங்களாஇல்ல இந்த நன்றி கெட்ட அரசாங்கம் தூங்குதானு தெரியல:(
குழந்தைங்க பெரியவங்களா ஆனதும் கடைசி வரை வாழ்க்கைல எந்த நோய் தாக்குதலும் வராம இருக்கதானே இந்தத் தடுப்பூசியெல்லாம் போடுறோம் அதை கூட விஷமாக்கி கொலை பண்ற இந்த கொலைகார கூட்டத்தை ஈவு இரக்கம் இல்லாத கல் நெஞ்சக் கும்பலை என்ன பண்றதுனு பொது மக்களான நாம தான் முடிவு பண்ணனும்.
ஏறக்குறைய 10 மொட்டுக்கள் இந்த உலகத்துக்கு வந்த வேகத்துலயே திரும்பப் போயிட்டாங்க:( இது அவங்க குடும்பத்துக்கு எவ்வளவு பெரிய இழப்பு? இவனுங்க தர நிவாரண நிதி அந்த பிஞ்சு முகங்களுக்கு முன்னாடி தூ... பிச்சை காசு! பத்து மாசம் பல கஷ்டத்தையும் தாங்கி அந்த உயிர சுமந்த தாய்க்கு தான் அந்த இழப்போட வலி தெரியும்.
ஆனால் அரசாங்கம் இது வரை இந்த விஷயத்துல எந்த நடவடிக்கையும் எடுக்காம இருக்குறது எதுக்குனு புரியலை:( மருந்து காலாவதியானதுனா அத தூக்கியெறியாம மேலும் மேலும் குழந்தைங்கள தூக்கியெறியுறது ஏன்?
நோய் தடுக்கும் ஊசியே உயிரக் குடிக்குறது எவ்வளவு கொடுமை?

No comments: