November 5, 2008

ங்கா...ங்கா....ம்ம்மா...அம்மா...

இது என்ன தலைப்புனு யோசிக்கிறீங்களா? (இல்லைனாலும் பரவால)
இப்படி தான் எங்க பொழில் குட்டி அழுகிறார்..... :)
சீக்கிரமே அவரும் பதிவு எழுத வருவாருனு என் கணவர் சொல்லிருக்காங்க.... :) அவருக்கு இப்போ 4மாதங்கள் ஆகிறது , ஆனால் பிறந்த இருவாரங்களிலேயே "அம்மா"னு சொல்லி அழுதாறே பாக்கனும் எங்க எல்லாருக்குமே ஆச்சரியம்।
என் பிறவியே அவருக்காகதானு தோணிச்சு...
அப்பப்பா அவரோட தெளிவான "அம்மா" உச்சரிப்பும், அழகான பொக்கை வாய் சிரிப்பும் என்ன மயக்கிடும்...:)

9 comments:

அமுதா said...

/*ஆனால் பிறந்த இருவாரங்களிலேயே "அம்மா"னு சொல்லி அழுதாறே பாக்கனும் எங்க எல்லாருக்குமே ஆச்சரியம்।*/

இன்னும் பல ஆச்சரியங்களைக் காண்பீர்கள். மழலை இன்பத்தில் மேலும் மேலும் துய்த்து இருக்க வாழ்த்துக்கள். பொழிலனுக்கும் எனது அன்பு முத்தங்கள்.

தமிழ் அமுதன் said...

குழந்தைங்கள விட சந்தோசமான
விஷயம் ஏதும் இருக்கா என்ன ?
ஒவ்வொரு வினாடியையும்
விட்டுடாதிங்க சந்தோசமா
அனுபவிச்சு கொண்டாடுங்க!

Karthik said...

ஆஹா, படிக்கும் போதே சந்தோஷமா இருக்கு. பொழிலன் பேச ஆரம்பிச்சாச்சா?

['I Miss you Ma!'னு மறுபடியும் எழுதிடுவேன் போலிருக்கே.]

:)

ஆகாய நதி said...

//
இன்னும் பல ஆச்சரியங்களைக் காண்பீர்கள். மழலை இன்பத்தில் மேலும் மேலும் துய்த்து இருக்க வாழ்த்துக்கள். பொழிலனுக்கும் எனது அன்பு முத்தங்கள்.
//

ரொம்ப ரொம்ப நன்றி.... என் சார்பாகவும் பொழிலன் செல்லம் சார்பாகவும்.... :)

ஆகாய நதி said...

//
குழந்தைங்கள விட சந்தோசமான
விஷயம் ஏதும் இருக்கா என்ன ?
ஒவ்வொரு வினாடியையும்
விட்டுடாதிங்க சந்தோசமா
அனுபவிச்சு கொண்டாடுங்க!
//

நிச்சயமா இல்லை... கண்டிப்பா அனுபவிக்க தானே இந்த பிறவியே :)

ஆகாய நதி said...

//
ஆஹா, படிக்கும் போதே சந்தோஷமா இருக்கு. பொழிலன் பேச ஆரம்பிச்சாச்சா?
//

:) இப்போ "இங்கா,அம்மா,அஃகு,எ,ஆ,ஊஊஊ" இது மட்டும் தான் பேசுவான்.

//
['I Miss you Ma!'னு மறுபடியும் எழுதிடுவேன் போலிருக்கே.]
//
அது என்ன?

கோபிநாத் said...

\\சீக்கிரமே அவரும் பதிவு எழுத வருவாருனு என் கணவர் சொல்லிருக்காங்க.... :)\\

வரட்டும்...வரட்டும்..;)))

பதிவை படிக்கும் போது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு...

கலக்குங்க குட்டி மாப்பி பொழிலன் ;)

Karthik said...

//இப்போ "இங்கா,அம்மா,அஃகு,எ,ஆ,ஊஊஊ" இது மட்டும் தான் பேசுவான்.

அதைத்தான் நானும் சொன்னேன். தெளிவா பேசுவதை கேட்பதில் பெரிசா என்ன இருக்கு.
:)

//அது என்ன?

அது ஒண்ணுமில்லைங்க. தீபாவளிக்கு அம்மாவை பார்க்க முடியலைன்னு "I Miss you Ma!" என்று ஒரு பதிவு போட்டிருந்தேன். இங்க வந்தபிறகு மறுபடியும் அம்மாவை மிஸ் பண்ற மாதிரி தோணுச்சு அதான்.

ஆகாய நதி said...

//
பதிவை படிக்கும் போது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு...

கலக்குங்க குட்டி மாப்பி பொழிலன் ;)
//
ரொம்ப நன்றி.... :):)