August 27, 2009

இரத்தக் கண்ணீரே வந்துவிடும் போல

இரண்டு நாட்களுக்கு முன்பு செய்தித் தாளில் படித்த செய்தி... இரண்டு ஆண்குழந்தைகள் பிறந்த சில மணி நேரத்திலேயே தாயால் துணியில் கட்டி பையில் போடப்பட்டு சாக்கடையில் வீசப்பட்டு கடைசியில் துணிப் பையிலேயே.... அய்யோ சொல்லவே கண் கலங்குது.... இரண்டு பிஞ்சும் படைத்த கடவுளிடமே போய்ட்டாங்க.... பாவம் தாய் வயிற்றில் இருக்கப்போ இந்த உலகத்தைப் பற்றி எப்படியெல்லாம் நினைத்திருக்கும் இரு பிஞ்சுகளும்...

எப்படி இப்படியெல்லாம் செய்ய மனம் வருது பெற்ற தாய்க்கே? இரத்தக் கண்ணீரே வருகிறது :(

நேற்றும் தொலைக்காட்சியில் காண நேர்ந்த விஷயம் இது போலத் தான் அசுத்த நீர் ஓடு சாக்கடையில் வீசப்பட்டக் குழந்தை.... கடவுளே குழந்தையை வேண்டம்னு முடிவு பண்ணவங்க.... அதுங்க உயிர்வாழவே முடியாதபடி ஏன் சாக்கடைகளிலும், கண்ட இடங்களிலும் வீசுறாங்க? தொட்டில் குழந்தை திட்டம், தொண்டு நிறுவனம், ஆசிரமம் இப்படி எங்கேயாவது விடலாமே?

இல்லையென்றால் குழந்தை இல்லாத எத்துணையோ பேர் குழந்தைக்காக ஏங்கிக்கொண்டிருக்க அவர்களிடம் கொடுக்கலாம்.... அதையெல்லாம் விட்டுவிட்டு ஏன் இப்படி?

சுய விருப்பம் இல்லாமல் நிச்சயம் கருத்தரிக்க முடியாது... தெரிந்தே கொலை செய்யும் இந்த பெண்களை என்ன செய்வது?

ஒரு ஆணிடம் ஏமாந்தவர்கள், பெண் குழந்தை என்றால் மறுக்கும் கணவன் குடும்பத்தாருக்கு பயந்தவர்கள், தகாத காதல் மற்றும் கள்ள உறவினால் கருத்தரித்தவர்கள் இப்படி பலர் இந்த வரிசையில் பிஞ்சுகளை பலியாக்கிவிட்டுச் செல்கிறார்கள் :(

இதயெல்லாம் பார்க்கும் போதும் கேட்கும் போதும் அழுகை முட்டிக் கொண்டு வருகிறது.... அந்தப் பிஞ்சுகளின் முகத்தைப் பார்க்கும் போது நம்மை அறியாமல் ஏதோ ஓர் உணர்வு நம்மை ஆக்கிரமிக்கிறது :(

நம்மால் ஆன உதவிகளை இந்த குழந்தைகளுக்கு நாம் செய்யவேண்டும்...
முடிந்தால் தத்து எடுத்து வளர்ப்போம் அல்லது அவர்களை வளர்க்கும் தொண்டு நிறுவனங்களுக்கு உதவுவோம்!
இது என் பல வருடக் கனவு....

ஆனால் இப்படி தொண்டு நிறுவனம் இருக்கும் தைரியத்தில் தான் இந்த கல் நெஞ்சம் படைத்தவர்கள் குழந்தைகளை இப்படி வீசுகிறார்கள்!

தாயன்புக்கு ஏங்கி உறவுகள் இன்றி வாழும் அந்தக் குழந்தைகள் மனதில் எத்தகைய காயம் உருவாகும் :( என்ன தான் நாம் உதவினாலும் தாய் தரும் அன்புக்கு ஈடாகுமா? என்று மாறுமோ இந்த நிலை!

12 comments:

நட்புடன் ஜமால் said...

கடும் வருத்தம் தான் மேலிடுகிறது ...

jothi said...

//தாயன்புக்கு ஏங்கி உறவுகள் இன்றி வாழும் அந்தக் குழந்தைகள் மனதில் எத்தகைய காயம் உருவாகும் :(//

இந்த மனக்காயங்கள்தான் பலருக்கு உடல் காயங்ககளை ஏற்படுத்துகிறது,.

பித்தனின் வாக்கு said...

manathu valikkum kumai ithu,
padaithavalai thittuvatha, allathu padaithavanai thittuvatha?.

intha mathiri nadakkum pothuthan kadavulidam athigam kovam varukirathu. ithukku avaluku pathilaka vara yarathu illathavarkalukku padaithirukkalam.
piranthavudan irantha antha punniya athamakkal shanthi adaiyattum. nanga oru kulanthaiku 17 varudam thavam irunthu 8 lakh selavu seithom. anna iffdi kolla avarkalukku effdi manasu vanthathu.

Vidhya Chandrasekaran said...

:(

Karthik said...

நான் ஏதோ பழைய தமிழ் சினிமாவில் தான் குப்பைத் தொட்டியில் குழந்தை இருக்கும்னு எழுதியிருந்தேன். ச்சே, உண்மை எப்பவுமே பிக்ஷனை விட கொடுமையானது போல! :((

ஆகாய நதி said...

@ஜமால்....

:(

ஆகாய நதி said...

//
இந்த மனக்காயங்கள்தான் பலருக்கு உடல் காயங்ககளை ஏற்படுத்துகிறது,.
//

ஆம் ஜோதி :(

kanagu said...

பார்க்கவே மிக வருத்தமாகவும், கோபமாகவும் இருக்கிறது.. :((

ஆகாய நதி said...

வாங்க பித்தன்...
//
pathilaka vara yarathu illathavarkalukku padaithirukkalam.
//

நானும் அதைத் தான் நினைக்கிறேன் :(

ஆகாய நதி said...

:( நன்றி வித்யா

ஆகாய நதி said...

ஆம் கார்த்திக் :(

ஆகாய நதி said...

எனக்கும் அப்படித்தான் இருக்கிறது கனகு என்ன செய்ய ஆண்டாண்டு காலமாக இப்படி நடக்கிறது :(

நன்றி கனகு!