June 2, 2008

ஐந்து தலை யானை முட்டை கதை‍(பாகம் 2 )

இப்ப‌டியே தொடர்ந்து ரொம்ப நாட்களா அந்த யானை நிறைய சாப்பாடு சாப்பிட்டுகிட்டு ஜாலியா அவன் வீட்டுல ராணி மாதிரி இருந்துச்சு.......ஆனால் அந்த யானைக்காரன் யோசிக்க ஆரம்பிச்சான் "என்ன இந்த யானை தங்க முட்டை போடவே மாட்டேங்குதுனு" அவனுக்கு கோவம் வந்துருச்சு.
இது அந்த யானைக்கு தெரிய வந்ததும் அது இதுதான் அவனுக்கு தண்டனை கொடுக்க சரியான சமயம் அப்டினு திட்டம் போட்டுது. அதோட திட்டப் படி அன்னைக்கு மற்ற யானைகளையும் வேலைக்கு போகாம வீட்டுலயே இருக்க சொன்னிச்சு. எல்லா யானைகளும் அந்த கெட்டவனுக்கு பயந்துகிட்டே ஆனால் வீட்டுலயே இருந்துச்சுங்க.
அவன் வந்து பாத்துட்டு எல்லா யானைகளையும் அடிக்க ஆரம்பிச்சான்... அத பாத்து இந்த 5 தலை யானை பயங்கரமா கத்த ஆர்ம்பிச்சுது..... எல்லாரும் பயந்தே போயிட்டாங்க :( அவன் கோவமா வந்து அந்த யானையையும் அடிக்க ஆரம்பிச்சான். அந்த யானை அவன வேகமா தூக்கி வெச்சிக்கிட்டு அவன் கிட்ட பள பளனு ஜொலிக்கிற ஒரு தங்க முட்டைய காண்பிச்சுது. அவன் பேராசை கண்கள அகலமா விரிச்சு அந்த தங்க முட்டையையே பாத்துக்கிட்டுருந்தான்......
அப்போ அந்த யானை சொன்னுச்சு "டேய் நீ எவ்ளோ பெரிய கொடுமைக் காரன் அப்டினு எனக்கு தெரியும் நீ இனிமே ஒழுங்கா இந்த யானைகளை விடுதலை செய்யனும் அப்பதான் உனக்கு இந்த முட்டை " .
அவனும் தங்க முட்டை மேல இருந்த பேராசைல இந்த 4 யானைகளையும் விடுதலை செய்ய ஒத்துக்கிட்டான். சரியான முட்டாள் :)
எல்லா யானைகளும் ரொம்ப ஹேப்பியா அவன்கிட்ட இருந்து தப்பிச்சா போதும்னு சாமி யானை கூட வந்துருச்சுங்க. அவன் அந்த முட்டைய கடைத்தெருவுக்கு விற்பதற்காக எடுத்துக்கிட்டு போனான். கடைக்காரன்கிட்ட அதிக விலை பேசி அதை விக்க குடுத்தான். கடைக் காரன் அந்த முட்டைய எடை போட்டா அது ரொம்ப குறைவா காண்பிச்சுது... கடைக்காரனுக்கு சந்தேகம் வந்துருச்சு... உடனே அவர் அந்த முட்டைய உடைச்சு பார்த்தார்...... பார்தா....!!!!!!!

1 comment:

Unknown said...

பார்த்தா????????????? சீக்கிரம் அடுத்த பாகம் போடுங்க… படிச்சுட்டு சாப்பிடப்போகனும்