December 30, 2008

என் இனிய 2008 ஆண்டிற்கு நன்றி பல கோடி

இந்த ஆண்டிற்கு நன்றி சொல்லும் விதத்தில் ஒரு பதிவிட வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருக்கையில் "சந்தனமுல்லை" அவர்களின் பதிவினைப் படிக்க நேர்ந்ததும் நானும் எழுதிவிட்டேன் :) நன்றி சந்தனமுல்லை :)

இந்த ஆண்டு என் வாழ்வில் மறக்க இயலாத ஆண்டு என்று கூட கூறலாம் :)
என் பொழில்குட்டி பிறந்த ஆண்டு :)

பிரசவத்தினால் நான் நடக்க இயலாத போது பொழிலனின் அதிர்ஷ்டமோ என்னவோ நான் இரண்டு மாதங்களில் நடக்கத் துவங்கிவிட்டேன்!
அவருடைய வருகை எங்கள் வாழ்விற்கான பொருளை எங்களுக்கு உணர்த்தியது! இந்த ஆண்டு எங்கள் வாழ்வில் பல ஆரோக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தியது!

முதன் முதலாக ஆபரேஷன் தியேட்டரில் வைத்து எனக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாகக் கூறி அவனை என்னிடம் காட்டிய அந்த தருணம், அவனை மெதுவாகத் தொட்டு "ரோஜா போல அழகா இருக்கு தம்பிப் பாப்பா!" என்று நான் கூறிய தருணம் இவையெல்லாம் என் வாழ்வின் அதிகப்படியான மகிழ்ச்சியினை அளித்த தருணங்கள் :) அந்த வகையில் இந்த ஆண்டு என் வாழ்வின் பொன்னான ஆண்டு! :)

என் கணவர் மூலமாக எங்கள் திருமணத்திற்கு முன்பே வலையுலகைப் படிக்கத் துவங்கிய நான் இந்த ஆண்டில் தான் எழுதவும் துவங்கினேன் என் பொழில்குட்டியால்!

என்னை தொடர்ந்து எழுத உற்சாகப் படுத்தும் என் கணவருக்கும்,
நான் எவ்வளவு மொக்கை போட்டாலும் படிக்கும் ரொம்ப நல்லவர்களான உங்களுக்கும் நன்றி! :) அதோடு நில்லாமல் பின்னூட்டமிட்டு என்னை ஊக்கப்படுத்தும் அன்பு நெஞ்சங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!

என்னை முதன் முதலாக டேக் செய்த சந்தனமுல்லை அவர்களுக்கு என் சிறப்பு நன்றி!

என் மொக்கையையும் தாங்கிக் கொண்டு என்னைப் பின் தொடரும் நண்பர்களுக்கு என் நன்றிகள் பல!

ஒவ்வொருவரின் தனிப்பட்ட வாழ்வு மட்டுமின்றி நம் நாட்டின் வாழ்வில் நமது சந்திராயன் விண்ணோக்கி சென்று இந்த உலகமே நம்மைப் பார்த்து நமக்குப் பெருமை சேர்த்ததும் இந்த ஆண்டில் தான்!

இத்துணை மகிழ்ச்சியான நிகழ்வுகளும் நடந்தேறியே இதே ஆண்டில் ஏற்பட்ட மும்பை நிகழ்வு போன்ற சில கசப்பான நிகழ்வுகள் மேலும் தொடராமல் வரும் ஆண்டு உலக மக்கள் அனவருக்கும் நன்மை பயக்கும் ஆண்டாக அமைய இறைவனை வேண்டிக்கொள்வோம்!

எங்களுக்கான மகிழ்ச்சிகளையும், வளங்களையும்
ஏந்தி வரும் புத்தாண்டே வருக!
நம் நாட்டில் கலவரம், வேற்றுமை, பசி, பஞ்சம், பிணி நீங்கி
அமைதி நிலவி நீங்கி மகிழ்ச்சி பொங்க
பொங்கலை உடனழைத்து வரும் புத்தாண்டே வருக!

7 comments:

சந்தனமுல்லை said...

நன்றிக்கு நன்றிகள் ஆகாயநதி! ஆமாம்..மறக்கவியலா ஆண்டல்லவா உங்களுக்கு இது! குடும்பத்தினருக்கு எங்களின் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களும் பொழிலுக்கு அன்பும்!

Karthik said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்!
:)

ஆகாய நதி said...

சில சிக்கல்களால் இந்த பதிவு முதலில் முழுவதுமாக பதிவாகவில்லை இருப்பினும் பின்னூட்டமிட்ட சந்தனமுல்லை மற்றும் கார்த்திக்கிற்கு நன்றி :)

சந்தனமுல்லை said...

:-)

//அமைதி நிலவி நீங்கி மகிழ்ச்சி பொங்க
பொங்கலை உடனழைத்து வரும் புத்தாண்டே வருக!//

வருக வருக!

அமிர்தவர்ஷினி அம்மா said...

wishes to you, your husband and POZHILAN

தேவன் மாயம் said...

பிரசவத்தினால் நான் நடக்க இயலாத போது பொழிலனின் அதிர்ஷ்டமோ என்னவோ நான் இரண்டு மாதங்களில் நடக்கத் துவங்கிவிட்டேன்!
அவருடைய வருகை எங்கள் வாழ்விற்கான பொருளை எங்களுக்கு உணர்த்தியது! இந்த ஆண்டு எங்கள் வாழ்வில் பல ஆரோக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தியது!////

2009 இன்னும் பல நன்மைகள் தர வாழ்த்துக்கள்!!!!!!!!!!!!!

Muruganandan M.K. said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். பொழில்குட்டிக்கு டபுளாக