December 14, 2008

வெறியர்களின் வெறித்தனத்திற்கு முற்றுப்புள்ளி எங்கே?

எழுமின்!

விழிமின்!

கருதிய கருமம் கைகூடும் வரை

உழைமின்! உழைமின்!



இது பாரதத் திரு நாட்டின் இளைஞர்களுக்காக விவேகானந்தரின் எழுச்சிக் குரல்। இன்றைய நம் இளைய சமுதாயம் இக்குரல் கேட்டு எழவில்லை என்றாலும் பரவாயில்லை. மழலைகள் பெற்றோரை இழந்து அரற்றும் குரல் கேட்டாவது எழுச்சி கொள்ளலாம்.

மும்பை தாக்குதல் பற்றி தான் இந்தப் பதிவு சந்தனமுல்லை அவர்களின் அழைப்பிற்கிணங்கி [தாமதமாக :( , பொழிலனுடன் நேரம் சரியாக இருக்கிறது :) ]



தீவிரவாதிகளுக்கு எதிராக போர் என்று போராடினால் போர் உண்டாகிவிடுமா. தொலைக்காட்சியில் பார்த்தேன் ஆளாளுக்கு போர் வேண்டும் என கத்தி ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தனர். இது என்ன பாராளுமன்றத்தில் விற்கப்படும் பொருளா?



என் கருத்து என்னவென்றால் இந்த முதியோர் அரசியல் முறை மாற வேண்டும். இளைஞர்கள் கையில் ஆட்சிப் பொறுப்பு வர வேண்டும்.

அரசியல் என்பது பொழுது போக்கோ அல்லது பணம் ஈட்டும் தொழிலோ அல்ல. நம் தாய்நாட்டின் வாழ்க்கை. சிறுக சிறுக தீவிரவாதிகளின் வெறியாட்டத்திற்கு பலியாகிக் கொண்டிருக்கும் நம் இந்தியாவின், இந்திய மக்களின் வாழ்க்கை. இன்று கத்தும் இளைஞர்கள் அரசியல் முறையை மாற்ற முன் வரவேண்டும். என்னையும் உங்களையும் சேர்த்துதான்....



இன்று நாட்டின் எந்த ஒரு முடிவும் ஆட்சியாளர்களாலேயே எடுக்கப் படுகிறது எனும் போது போர் என்னும் முடிவும் நம் அரசியல் தலைவர்களே எடுக்க வேண்டும். அந்த இடத்தில் இளைஞர்கள் வந்தால் இந்த விவகாரத்திற்கு சரியான பதிலடியாக பல ஆரோக்கியமான முடிவுகளை எடுக்க முடியும்.



இல்லையென்றால் இப்படி முன்பே தாக்குதல் பற்றிய அறிவிப்பு கிடைத்தும் கோட்டைவிட்டிருப்பார்களா?



தாக்குதல் நடந்து முடிந்த பின்பு அவ்விடத்திற்குத் தீவிர பாதுகாப்பு போடுவதற்கு பதிலாக முன்பே கவனமாக இருந்திருக்கலாம் அல்லவா?



ஒவ்வொரு முறையும் இப்படி தாக்குதல் நிகழும் போது மட்டும் நாம் உணர்ச்சிவசப்பட்டு பொங்கி எழுவதில் பயனில்லை. தேர்தலின் போது சிந்திக்க வேண்டும் , படித்த இளைஞர்கள் அரசியலுக்கு வரும் போது அவர்களை ஊக்குவிக்க வேண்டும், இளைஞர்களால் மட்டுமே நம் தாய்நாட்டின் தலையெழுத்தை மாற்ற இயலும்.



இழப்பின் வலி இன்னமும் இரணமாகவே உள்ளது. அந்த வடு ஆறும் முன்பே வெறியர்களுக்கு எதிராக நாம் திரள வேண்டும். இன்னும் எதற்காக போர் தொடுக்காமல் காத்துக்கொண்டிருக்கிறோம்? மிச்சம் மீதம் இருக்கும் காஷ்மீரையும் அவர்கள் எடுத்துக்கொள்ளட்டும் என்றா? அல்லது பாவம் மடையர்கள் ஏதோ சண்டையிடுகறார்கள் மன்னித்துவிடலாம் என்றா?



"இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண

நன்னயம் செய்து விடல்"



என்ற குறள் இங்கு பொருந்தாது....



"குடிசெய்வார்க்கு இல்லை பருவம் மடிசெய்து

மானம் கருதக் கெடும்"



என்ற குறளே தற்சமயம் நமக்குப் பொருத்தமானது.



நம் கைகள் கோர்க்கட்டும்.

நம் இதயங்கள் சில இழப்புகளைத் தாங்கும் பக்குவம் உடையதாகட்டும்...

அப்போது தான் பெரும் இழப்புகளைத் தவிர்க்க இயலும்.



நம்மிடம் படை பலமில்லையா அப்படியானால் பல திறமையான இளைஞர்கள் எதிர்காலத்தைத் தேடிக் கொண்டிருக்கின்றனர், அவர்கள் உதவுவார்கள்.



பண பலமில்லை என்று மட்டும் கூறவே கூடாது; நம் நாட்டுப் பெண்களின் ஒட்டுமொத்த நகைகளையும் சேர்த்தால் உலகிலேயே நாம் தான் பணக்கார நாடு! ஆச்சரியமாக உள்ளதா? இது தான் உண்மை!



போருக்குத் திட்டமிடுவதற்குத் தேவையான அதிக புத்திசாலிகளும் நம் நாட்டில் தான் உள்ளனர்; இதுவும் ஆதாரப்பூர்வமான உண்மை :)



பின் எதற்காக நாம் காத்துக் கொண்டிருக்கிறோம்? தலைவர்களின் சம்மதத்திற்கா? அது எளிதில் கிடைக்காது :( இளைஞர்கள் கைக்கு ஆட்சி வரும்வரை....



பொறுத்திருந்தது போதும் புறப்படுவோம் புதியதோர் பாரதம் செய்ய...
அதில் தீவிரவாதமற்ற அமைதியை ஏற்படுத்த !!!

காஷ்மீரைக் கைப்பற்றியே ஆகவேண்டும் என்பதற்காகவும்,
இந்தியாவின் அமைதியைக் குலைத்து வளர்ச்சியைத் தடுக்க வேண்டும் என்பதற்காகவும் அவர்கள் ஆடும் வெறியாட்டத்தை தடுத்து அவ்ர்களுக்கு பதிலடி கொடுத்தே ஆக வேண்டும்; வெறியர்களின் வெறியாட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தே ஆக வேண்டும்..............


பின்குறிப்பு :
அக்காலத்தில் வீரத்தமிழ்த்தாய் ஒருத்தி தன் இரண்டு வயது மகன் கையில் வாளினைக் கொடுத்துப் போர்முனைக்கு அனுப்பி வைத்தாளாம். அத்தகைய தாய்மார்கள் வாழ்ந்த இந்நாட்டிலே தான் நாமும் வாழ்கிறோம். நமக்கும் அதில் பாதி எண்ணமாவது வர வேண்டும்.

குழந்தை பருவத்திலிருந்தே நம் பிள்ளைகளுக்கு நாட்டுப்பற்றினையும் வீரத்தையும் சேர்த்து ஊட்டிவிட வேண்டும். நம் பிள்ளைகள் இராணுவத்தை எதிர்காலமாக தேர்ந்தெடுத்தால் பாசத்தில் தடுக்காமல் ஊக்கப்படுத்த வேண்டும்.

என்னைத் தொடர்ந்து யார் வேண்டுமானலும் கைகோர்க்கலாம் இந்த அணியில் :)

4 comments:

தமிழ் அமுதன் said...

சிலிர்க்க வைக்கும் வீரம்!
உண்மையில் சிலிர்த்து விட்டேன்
இதைதான் நான் எதிர் பார்க்கிறேன்
நம் இந்திய பெண்களின் வீரம்
மகத்தானது!

Karthik said...

ஒரு Pessimist மாதிரி பேசுறதுக்கு, ஸாரி. தப்பா எடுத்துக்காதீங்க.

இளைஞர்கள் அரசியலுக்கு வராததற்கு நம்முடைய ஸ்கூல்ஸும், காலேஜும் கூட காரணம். 'கேம்பஸ் பாலிடிக்ஸ்' அப்படின்னாலே கெட்ட வார்த்தை மாதிரி 'மிக நல்ல' காலேஜ்களே நினைக்கும்போது, ஸ்டுடன்ட்ஸ் என்ன பண்ண முடியும்??

டெல்லி யுனிவர்சிட்டி கூட பரவாயில்ல.

ஆகாய நதி said...

நன்றி திரு.ஜீவன் :)

ஆகாய நதி said...

உண்மைதான் கார்த்திக்