May 3, 2009

ஈன்ற பொழுதில் பெரிதுவத்தல்(ஆபரேஷன் தியேட்டரில்) - 2

ஈன்ற பொழுதில் பெரிதுவத்தல்(பிரசவ அனுபவம்) - 1

இந்தப் பதிவின் தொடர்ச்சி...

நான் வலியோடு ஒரு பக்கம், வயிற்றில் குழந்தையின் விளையாட்டினை ரசித்தல் ஒரு பக்கம், குழந்தை பார்க்க எப்படி இருக்கும் குண்டாவா இல்லை நார்மலாவா மல்லிகை/ரோஜாப்பூ நிறம் எவ்வளவு முடி என்றெல்லாம் எண்ணிக்கொண்டே இரவு வரை ஒப்பேற்றிவிட்டேன்.

நான் இரவில் செமயா சாப்பிட்டேன்... பின்னே அடுத்த 3நாட்களுக்கு நோ சாப்பாடு.. :( குழந்தை இருக்கையில் பசி தெரியாது என அப்போ உணரல.. :) ஆப்பிள் ஜூஸ், தோசை, இட்லி, பால் என செமயா தள்ளினேன் உள்ளே! இரவில் மானிட்டர் வைத்து குழந்தையின் அசைவைக் கணக்கிட்டுக் கொண்டிருந்தனர். :) எனக்கோ தூக்கமே வரல... கணவரை எதிர்பார்த்து டைம் பார்த்துக்கிட்டே இருந்தேன்! :)

ஸ்ஸ்ஸ்... அப்பாடா! விடிந்தாச்சு... :) இன்று முதல் இனி வருடம் தோறும் இன்னாள் தான் பொன்னாளே எந்தன் வாழ்வில் :) இன்று என் குழந்தையின் பிறந்த நாள்! ஆணோ பெண்ணோ... நாங்கள் 'ப' வரிசையில் ஆண்/பெண் பெயர்களை யோசித்துக் கொண்டிருந்தோம் தூய தமிழில் :) நான் குழந்தைக்குத் தேவையானதை தனியே எடுத்து வைத்திருந்தேன் சில நாட்களுக்கு முன்பே... அது இப்போது தயாராக இருந்தது :)

கணவருடன் வெகு நேரம் பேசிப் பேசி மதியம் குளித்து முடித்து ஃபிரெஷாக தயாராகலாம் தியேட்டருக்கு என்று எண்ணிக் கொண்டிருந்தால் மதியமே வந்து என்னை மயக்கமருந்த்து டாக்டரிடம் ஊசி போடலாமா என சோதனை செய்ய அழைத்துச் சென்றனர்.

அவரோ என் கால் வலியினால் ஊசி போட ஒத்துழைக்க முடியாது அதனால் மயக்கம் அளித்துவிடலாம் என்றார். அய்யோ என் பல நாள் கனவு என் குழந்தை பிறக்கும் போதே குரலைக் கேட்கனும்; நான் தான் முதலில் குழந்தையைப் பார்க்கனும்! அதுக்கே ஆப்படிச்சா எப்படி? வலி என்னங்க வலி என் குட்டித் தங்கத்துக்கு முன்னாடி... அதுனால டாக்டர் கிட்ட நான் தலை கால் எல்லாம் மடக்கி ஒத்துழைக்க முயற்சிக்கிறேன் தயவு செய்து என்னை தூங்க வெச்சுடாதீங்கனு கெஞ்சினேன்... அவரும் ஒத்துக்கிட்டார்.

ஆனால் பிறகு என் அறைக்கு என்னை கொண்டு செல்லவில்லை... :( நேரே லேபர் ரூம் தான்! அங்கு எனக்கு மேக்கப் நடந்தது... அதாங்க தலை பின்னி குல்லாய் போட்டு, ரொம்ப காத்தோட்டமா ஆவிங்க போடுற மாதிரி ஒரு டிரஸ்... இது இப்போ வேண்டாம் நான் தியேட்டர்கிட்ட போயி இதை போட்டுக்கிறேனு சொன்னா கேக்குறாங்களா? ம்கும்... நான் குளிக்கவே இல்ல பிளீஸ் குளிக்கவிடுங்களேனு சொன்னா ம்கும்... 4.45கு கட்டிங் டைம்(வயிற்ற அப்போதான் ஒபன் பண்ண சொல்லி அப்பா ஆர்டர்) அது தான் நல்ல நேரம் மாலைல... ஆனால் நான் 3மணிக்கே ரெடி...

இப்போ மாட்டு ஊசி, யூரின் பேக்னு பல ஆயுதங்களோட அந்த சிஸ்டர் பத்ரகாளி மாதிரி வந்து நின்னுச்சு! முதுகில ஊசி போட்டதுக்கு அப்புறம் இந்த யூரின் பேக் வைங்களேனு சொன்னேன் கேக்கலயே :( அய்யோ......... அம்மாஆஆஆஆஆஆஆஆ... இப்படி தான் அலறினேன் அதை வைக்க :( அடுத்து கையில மாட்டு ஊசி டிரிப்ஸ் போட... மறுபடியும் ரிப்பீட்டே... அய்யோ......... அம்மாஆஆஆஆஆஆஆஆ... ஸ்ஸ்ஸ்ஸ்... இப்போ அம்மா, கணவர்னு மாறி மாறி வந்து என்னை பாத்துக்கிட்டாங்க. என் காமெடி கோலத்தைப் பார்த்து என் கணவருக்கு கொஞ்சம் பீதி, கொஞ்சம் சிரிப்பு, கொஞ்சம் பயம்... ஆனால் குட்டிமா வரப் போற நேரம் நெருங்குதுனு நிறைய சந்தோஷம் எங்களுக்கு.. :)

அப்பாடா ஒரு வழியா என்னைத் தூக்கி ஸ்டெட்சர்ல போட்டாச்சு... எனக்கு வலியும் தாங்க முடியல.. சிரிப்பையும் அடக்க முடியல... எல்லாரும் இப்ப என்னைய சீரியஸா லுக் விடுவாங்களே.. அதை நினைச்சு தான் சிரிப்பு.. :) அதே மாதிரி எல்லாரும் கியூல நின்னு பை சொல்லிட்டு பின்னாடியே வந்தாங்க. அதுக்குள்ள இந்த லிஃட்ல வேற செம கும்பல் :( நாங்க தான் கியூல முதல் வண்டி ஆனால் ஒரு தள்ளுவண்டியோட ஒரு சிஸ்டர் முந்த பாத்தாங்க என்னோட சிஸ்டர் சொல்லியும் கேக்காம... நானே சொல்லிட்டேன்.." என் அவசரம் புரியாம முந்தாதீங்க நாங்க பாப்பாவ பார்க்க போறோம்னு" :)

ஒரு வழியா தியேட்டர் முதல் வாயில் தாண்டி போயாச்சு... உள்ளயும் போயாச்சு.. ஆஹா! என்ன அழகு... எல்லாமே வெள்ளை... :) ஒரே சுத்தம் :)அங்க போயி மெதுவா தியேட்டர் பெட்டில் என்னைப் போட்டாங்க... அது அவ்வளவு மிருதுவா இல்ல... :( அப்புறம் சுய புராணம் கேட்டாங்க! இப்போ முதுகுல ஊசி போடுற டர்ன்...

ஒரு வழியா பாடுபட்டு திரும்பி ஊசிப் போட்டா... இந்த மம்மி படத்துல வண்டு உடம்புக்குள்ள ஊறுமே அப்படி ஒரு ஊறல் உடம்பெல்லாம்... உடம்பெல்லாம் கூசுது... :) ஊசி போட்ட இடம் மட்டும் வலிக்குது :(
அப்புறம் ஒன்னுமே தெரியல... தொட்டுப் பார்த்துக் கேட்டாங்க... தொடு உணர்ச்சி இருக்குனு சொன்னேன் கில்லி வலிக்குதானு கேட்டாங்க.." நோ பட் கில்லுறது தெரியுது லேசா"னு சொன்னேன். இடுப்பை மெதுவா தூக்கி அந்த சிசேரியன் பேட் போட்டு அது மேல படுக்க வைச்சாங்க :)

"எல்லாம் ஓகே டாக்டர் நீங்க ஓகேயா?" இது ஒரு நர்ஸ். திரும்பி பார்த்தா டாக்டர் கிரீன் கவுன்ல... அவங்க தோடு சூப்பர். நான் அதையே பார்த்துக்கிட்டு இருந்தேன்.. கண்ணை கட்டிவிட்டுட்டாங்க... நீங்க வயிற்றை பார்க்கக் கூடாதுனு டயலாக் வேறு! :( அப்புறம் மூச்சுவிட ஆக்ஸிஜன், ஆடோமேடிக் பல்ஸ் செக்கிங்னு என்னை டெர்ரர் மாதிரி படுக்கவெச்சாச்சு!
ஆபரேஷன் அப்போ பாதியில எழுந்து நானே பண்றேனு சொல்லுறதுக்கு இது என்ன சமையலா? ஆனாலும் கை இரண்டையும் கட்டிபோட்டாங்க ஒரு கிளிப் மாதிரி இருந்தது உணர்வுக்கு!

ஆஹா! பதிவு ரொம்ம்ம்ப பெருசா ஆயிடுச்சே... ஓகே குட்டிமாவ நாளைக்குப் பார்க்கலாம்! :):)

10 comments:

பட்டாம்பூச்சி said...

அனுபவிச்சு படிச்சேங்க...
அழகா சொல்லி இருக்கீங்க.

ஆகாய நதி said...

நன்றி பட்டாம்பூச்சி! :)

Anonymous said...

ரொம்ப நல்லா எழுதறீங்க.. வாழ்த்துக்கள்.. பொண்ணுக்கு இப்போ என்ன வயசு?

அன்புடன்
சீமாச்சு...

ஆகாய நதி said...

ரொம்ப நன்றி சீமாச்சு!

ஆகாய நதி said...

ரொம்ப நன்றி சீமாச்சு!

ஆகாய நதி said...

பொண்ணு இல்ல பையன் :) பொழிலன் :)சீமாச்சு!

Unknown said...

romba nalla ealuthi irukeenga.... eanaku en delivery niyabagam vanthiruchu.... so nice

ஆகாய நதி said...

நன்றி லலிதா! :)

Unknown said...

written in a Fabulous way. This might help / boost my wife's confident as she is having delivery due in first week of aug'09. Although i'm a male but could feel the pain of labour.

All the best to Polilan.

ஆகாய நதி said...

வாங்க சுப்பையா!

நன்றிங்க! :)

உங்கள் மனைவிக்கு என்னுடைய வாழ்த்துகள்! :)

உங்களுக்கும் உங்கள் குட்டி செல்லத்துக்கும் சேர்த்து தான்!