May 28, 2009

குழந்தையின் நிறமும் அறிவியல் உண்மைகளும்

கருவில் வளரும் குழந்தை நல்ல சிவந்த நிறமாகப் பிறக்க வேண்டும் என்பதற்காக நாம் பொதுவாக குங்குமப் பூ உண்ணத் துவங்குகிறோம்!

ஆனால் நான் சில மாதங்களுக்கு முன் மகப்பேறு மருத்துவர்களிடம் கேட்டறிந்த உண்மைகளை உங்களுக்காக கூறுகிறேன்...

குழந்தையின் நிறம் பற்றிய மருத்துவ ரீதியான விளக்கம்:

* குங்குமப்பூ கருவின் நிறத்தை தீர்மானிப்பதோ அல்லது அதில் மாற்றங்கள் செய்வதோ இல்லை; குங்குமப் பூ இரும்புச் சத்து நிறைந்தது அதனால் கர்ப்பகாலத்தில் இதனை எடுத்துக் கொள்வது நல்லது

*திராட்சை, நாவல் போன்ற பழங்களும் குழந்தையின் நிறத்தில் பங்கெடுப்பது இல்லை

*கேரட் குழந்தையின் நிறத்தை மேம்படுத்தும்

*குழந்தை கருப்பாக பிறந்துவிடுமோ என்று தாய்மார்கள் சிலர் இரும்புசத்து மாத்திரை உட்கொள்வதில்லை; இதுவும் தவறான கருத்து!

ஆகையினால் தாய்மார்களே இரும்புசத்து அதிகம் சேர்த்துக் கொண்டு உங்களையும் குழந்தையையும் ஆரோக்கியமாக பராமரித்துக் கொள்ளுங்கள்! :)

8 comments:

ராம்.CM said...

அருமையான தகவல். அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல். வாழ்த்துக்கள்.

ஆகாய நதி said...

நன்றி இராம் அவர்களே.. :)

Unknown said...

குழந்தை உண்டாகியவுடன் சிலர் குங்கும்ப் பூவை தான் சாப்பிடுவாங்க(குழந்தை சிகப்பாக பிறக்கனும் என்று)
இந்த தகவல் மூலம் உண்மையினை தெரிந்துக்கொண்டேம்..நல்ல தகவல்

Dhiyana said...

//குழந்தை கருப்பாக பிறந்துவிடுமோ என்று தாய்மார்கள் சிலர் இரும்புசத்து மாத்திரை உட்கொள்வதில்லை//

இது மிகவும் ஆபத்தானது. இரும்புசத்து மாத்திரை மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்டால், கண்டிப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஆகாய நதி said...

//
குழந்தை உண்டாகியவுடன் சிலர் குங்கும்ப் பூவை தான் சாப்பிடுவாங்க(குழந்தை சிகப்பாக பிறக்கனும் என்று)
இந்த தகவல் மூலம் உண்மையினை தெரிந்துக்கொண்டேம்..நல்ல தகவல்

//

ரொம்ப நன்றிங்க :)

ஆகாய நதி said...

//
இது மிகவும் ஆபத்தானது. இரும்புசத்து மாத்திரை மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்டால், கண்டிப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும்
//

உண்மைதான்.. என்னிடமே பலர் இப்படி சாப்பிடாதே என்று கூறியிருக்கின்றனர் ஆனால் நான் கர்ப்பமானதிலிருந்து இன்று வரை அனிமிக் அதனால் தொடர்ந்து இரும்பு சத்து மாத்திரை எடுத்து வருகிறேன்!

சிறகுகள் said...

குங்கும பூ பற்றி நிறைய தகவல்களை தந்துள்ளீர்கள். அருமை. எல்லொரும் ஒவ்வொன்று கூறி குழப்பிக்கொண்டிருக்கையில் உங்கள் பதிவு உதவிஉயாக உள்ளது ..நன்றி அக்கா..

ஆகாய நதி said...

நன்றி சிறகுகள் :)

அக்கானுலாம் கூப்டாதீங்க எனக்கு ரொம்ப சின்ன வயசு தான் :)